BJP Goa

ஸ்மிருதி இரானி மகள் நடத்தும் ‘Silly Souls’ சொகுசு பாருக்கு போலி ஆவணங்கள் மூலம் உரிமம்!

வடக்கு கோவா-வில் உள்ள அசாகோ பகுதியில் ‘சில்லி சோல்ஸ் கஃபே அண்ட் பார்” என்ற பெயரில் பாஜக ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் மகள் ஜோயிஷ் இரானி நடத்தி வரும் பாருக்கு போலி ஆவணங்கள் மூலம் இறந்தவர் பெயரில் உரிமம் வாங்கி நடத்திவருவது குறித்து செய்தி வெளியாகியுள்ளது. இதுகுறித்து ஐரிஸ் ரோட்ரிகியூஸ் என்ற வழக்கறிஞர் நேற்று அளித்துள்ள புகாரின் அடிப்படையில், கோவா கலால் ஆணையர் நாராயண் ஷோ காஸ் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். மேலும் ஜூலை 29 […]

Alleged Police Brutalities Dalits Uttar Pradesh

உ.பி: போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்ட தலித் நபர்.. உடலும் வலுக்கட்டாயமாக எரிப்பு!

உத்தரபிரதேசத்தின் ஃபரூகாபாத் பகுதியைச் சேர்ந்த 35 வயதான தலித் கௌதம், ஜூன் 24 அன்று இரவு அவரது வீட்டில் நடைபெற்ற சோதனையைத் தொடர்ந்து காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்டதாக அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். ஃபரூகாபாத் மாவட்டம் மேராபூர் காவல் நிலைய எல்லைக்குள் இந்த சம்பவம் நடந்துள்ளது. சட்டவிரோதமாக மது விற்பவர்களை பிடிக்கவே போலீசார் கவுதமின் வீட்டை சோதனையிட சென்றதாக போலீசார் தெரிவித்தனர். பெரும் போராட்டத்திற்கு பிறகே எஃப்ஐஆர் : ஆரம்பத்தில் கௌதமின் உடலை பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்ல […]

Agnipath BJP Haryana Protest

ஹரியானா: அக்னிவீர் படிவங்களை நிரப்பும் இளைஞர்களை ‘சமூக ரீதியாக தனிமைப்படுத்துவோம்’ !

ரோஹ்தக்: மோடி அரசின் அக்னிபத் ராணுவ ஆட்சேர்ப்பு திட்டத்தில் படிவத்தை நிரப்பும் அல்லது பங்கேற்கும் இளைஞர்களை “சமூக ரீதியாக தனிமைப்படுத்துவோம்” என காப் பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் விவசாய சங்க போராட்ட பிரதிநிதிகள் புதன்கிழமை அறிவித்தனர். ரோஹ்தக் மாவட்டத்தின் சாம்ப்லா நகரில் புதன்கிழமை (23-4-22) ஒரு பஞ்சாயத்து அழைப்பு விடுக்கப்பட்டது, இதில் ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பல்வேறு காப்களின் பிரதிநிதிகள் மற்றும் மாணவர் அமைப்புகளின் உறுப்பினர்கள் பங்கேற்றனர். வழக்குகள் […]

Jaggi Tamil Nadu

கோவை: ஈஷா அறக்கட்டளையை அரசுடைமையாக்க ஆர்ப்பாட்டம் !

ஜக்கி வாசுதேவின் ஈஷா யோகா மையத்தை அரசுடைமையாக்க வேண்டும் என கோரி தந்தை பெரியார் திராவிடர் கழகம், தெய்வத் தமிழ் பேரவை இயக்கத்தினர் மற்றும் பொது மக்கள் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர். ஈஷாவிலிருந்து வெளியேறும் கழிவுநீரை விளை நிலத்தில் வெளியேற்றக் கூடாது, பழங்குடியினர் நில அபகரிப்பதற்கு எதிர்ப்பு , பெண்களைத் துறவிகள் ஆக்கக் கூடாது என்ற கருத்துடைய பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில், ஈஷாவில் […]

BJP Fascism Indian Judiciary Muslims Uttar Pradesh Yogi Adityanath

உபி அரசின் நடவடிக்கைகள் குறித்து முன்னாள் உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் கடிதம் !

உத்தரபிரதேச மாநிலத்தில் சட்ட விரோத கடுங்காவல், வீடுகளை புல்டோசர்களால் இடிப்பது , போராட்டக்காரர்கள் மற்றும் போலீஸ் காவலில் உள்ளவர்கள் மீது போலீஸ் வன்முறை என்பன உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் குறித்து தானாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும் என முன்னாள் நீதிபதிகள் மற்றும் பல்வேறு வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர். இந்திய தலைமை நீதிபதி என்.வி. ரமணாவுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், போராட்டக்காரர்களை விசாரிக்கவும், அமைதியான போராட்டங்களில் ஈடுபடவும் வாய்ப்பளிப்பதற்கு பதிலாக, உத்தரபிரதேச மாநில நிர்வாகம் “அத்தகைய நபர்களுக்கு […]

BJP Gujarat

குஜராத்: 35% கட்டிடங்கள் சட்டவிரோதமானவை என ஆய்வில் தகவல்!

8, 320 கட்டிட உள்ளீடுகளை கொண்டு மேற்கொள்ளப்பட்ட மாதிரி ஆய்வில் குஜராத்தில் கிட்டத்தட்ட 35% கட்டமைப்புகள் கட்டிட-பயன்பாட்டு (BU) அனுமதிகள் இல்லாமல் இருப்பதாக தெரிய வந்துள்ளது. ஜனவரியில் தொடங்கிய இந்த கணக்கெடுப்பு மாநகராட்சிகள் மற்றும் நகரபாலிகாக்கள் (நகராட்சிகள்) முழுவதிலும் நடத்தப்பட்டது. குஜராத்தின் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் மூன்று மாதக் கணக்கெடுப்பின் முடிவில், மாநிலத்தில் கிட்டத்தட்ட 35% கட்டிடக் கட்டமைப்புகள் சட்டத்திற்குப் புறம்பானது, ஏனெனில் அவை கட்டிட பயன்பாட்டு (BU) அனுமதிகள் இல்லாதவை என்று குறிப்பிட்டுள்ளது. இந்த கணக்கெடுப்பின் […]

Asadudin Owaisi Muslims Uttar Pradesh Yogi Adityanath

உபி: முதல்வர் ஆதித்யானத்தை விரமர்சித்ததாக கூறி 19 வயது அக்ரம் கைது !

பெயிண்டர் அக்ரம் அலியின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் குறித்து போலீசார் தாமாக முன்வந்து, அவர் மீது “பகைமையை ஊக்குவித்தல், மதத்தை அவமதிக்கும் நோக்குடன் செயல்படல் மற்றும் வேண்டுமென்றே அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படல்” ஆகிய குற்றங்களை அக்ரம் மீது சுமத்தி அவரை கைது செய்துள்ளனர். புதுடெல்லி: சமூக வலைதளங்களில் உபி முதல்வர் ஆதித்யநாத்துக்கு எதிராக ஆட்சேபனைக்குரிய கருத்துகளை தெரிவித்ததாக கூறி 19 வயது இளைஞனை உத்தரபிரதேச போலீசார் ஜூன் 13ம் தேதி திங்கள்கிழமை கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட […]

Christians Kerala Political Figures

‘2021ல் இந்தியாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக 486 வன்முறை தாக்குதல் சம்பவங்கள்’ – கேரள முதல்வர் பினராயி

கொச்சி: ​​இந்தியாவில் கடந்த ஆண்டில் மட்டுமே, 486 கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறை தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளது குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் நினைவுகூர்ந்தார். வரவிருக்கும் திருக்காக்கரை இடைத்தேர்தலை ஒட்டி பிரச்சார கூட்டம் ஒன்றில் பங்கேற்ற முதல்வர் பினராயி விஜயன், முன்னாள் எம்எல்ஏ பிசி ஜார்ஜின் வெறுப்புப் பேச்சு குறித்தும், அவருக்கு பாஜக ஆதரவு அளித்து வருவது குறித்தும் அவர் குறிப்பிட்டு பேசினார். கடந்த ஆண்டு, நாட்டின் பல பகுதிகளில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான 486 தாக்குதல்கள் நடந்தன. […]

BJP Maharashtra

மும்பை: பாஜக தலைவர் மோஹித் மீது ரூ.52 கோடி வங்கி மோசடி வழக்கு பதிவு !

மும்பை காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், செவ்வாய்க்கிழமை பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் மோஹித் கம்போஜ் பாரதியா மீது மோசடி புகாரை பதிவு செய்ததாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிடமிருந்து ரூபாய் 52 கோடி கடனை பெற்ற நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவர், பாஜக இளைஞர் பிரிவின் முன்னாள் மும்பை யூனிட் தலைவர் மோஹித் என்று வங்கியின் மேலாளர் தெரிவித்தார். கடனைப் பெறும்போது மேற்கோள் காட்டப்பட்ட நோக்கங்களுக்காக அல்லாமல் அவர்கள் அந்தத் தொகையை வேறு நோக்கத்திற்காக […]

Law and Order Uttar Pradesh

உபியில் கழுத்து அறுக்கப்பட்டு பொலிஸ் அதிகாரி கொலை !

உபி,கான்பூர் : வாடகை வீட்டில் தங்கி இருந்து 30 வயதான பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டதாக வியாழக்கிழமை உபி பொலிஸார் தெரிவித்தனர். தேஷ் தீபக்கின் உடல் ரத்த வெள்ளத்தில் கிடந்தது, பிரஹாம் நகர் பகுதியில் இந்த சம்பவம் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர். ஃபிரோசாபாத்தைச் சேர்ந்த கான்ஸ்டபிளான அவர், 2019 முதல் பில்ஹூரில் பணியமர்த்தப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர். புதன்கிழமை மதியம் முதல் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்த அவரது மொபைலில் எந்த பதிலும் வரவில்லை என்று தீபக்கின் குடும்பத்தினர் […]

Crimes against Children Hindutva Tamil Nadu

திருச்சி:மாணவிகள் முன்பு நிர்வாணமாக நின்ற இந்து மக்கள் கட்சி நிர்வாகி கைது !

திருச்சி: திருச்சி பொன்மலையில் தனியார் பள்ளியில் மாணவிகள் முன்பாக ஆடையின்றி நிர்வாணமாக நின்றதற்காக இந்து மக்கள் கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் ராஜ்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சி பொன்மலையில் இயங்கி வரும் தனியார் பள்ளி ஒன்றின் மாணவிகள் முன்பாக நிர்வாணமாக நின்றதாக ராஜ்குமார் என்பவர் குறித்து மாணவிகளின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து பொன்மலை போலீசாரிடம் பெற்றோர் புகார் தெரிவித்தனர். இப்புகாரின் பேரில் இந்து மக்கள் கட்சி நிர்வாகி ராஜ்குமார் கைது செய்யப்பட்டார். மேலும் கைது செய்யப்பட்ட ராஜ்குமார் இந்து […]

தாஜ்மஹால்
Muslims Uttar Pradesh

தாஜ்மஹால் வளாக பள்ளிவாசலில் தொழுததற்காக 4 பேர் கைது செய்து சிறையில் அடைப்பு!

ஆக்ரா: தாஜ்மஹால் வளாகத்தில் உள்ள ஷாஹி மசூதியில் தொழுகை நடத்தியதற்காக நான்கு பேர் மே 25 புதன்கிழமை கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேர் மீதும் இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பிரிவு 153 (கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் வேண்டுமென்றே தூண்டுதல் நடவடிக்கையில் ஈடுபடுவது) இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. புதன்கிழமை மாலை 7 மணியளவில் ஷாஹி மசூதியில் அவர்கள் தொழுகை நடத்தி உள்ளனர். இதுகுறித்து மாநகர காவல் கண்காணிப்பாளர் கூறியதாவது: […]

Assam Bulldozer Politics Minority Muslims

அசாம்: மீன் வியாபாரி ஷஃபிகுல் இஸ்லாம் போலீசார் கஸ்டடியில் மரணம் !

அசாமில் மீன் வியாபாரி ஷஃபிகுல் இஸ்லாம் போலீஸ் காவலில் இறந்து 2 நாட்களுக்குப் பிறகு, போலீசார் அவரது மனைவி ரஷிதா காதுன் மற்றும் அவரது மகள் 8 ஆம் வகுப்பு மாணவியை போலீசார் கைது செய்துள்ளனர். அசாமில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. போலீசார் காவலில் வைக்கப்படிருந்த ஷஃபிகுல் மரணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து படத்ராபா காவல் நிலையத்தை எரித்ததாகக் கூறப்படும் சைஃப்பின் மனைவி மற்றும் மகள் உட்பட குறைந்தது 6 பேர்களில் 5 பேரின் மீது யுஎபிஎ சட்டத்தின் […]

Minority Punjab Sikhs

பஞ்சாப்: ‘ஒவ்வொரு சீக்கியரும் உரிமம் பெற்ற ஆயுதம் வைத்து கொள்ள வேண்டும்’

ஒவ்வொரு சீக்கியரும் உரிமம் பெற்ற நவீன ஆயுதங்களை வைத்திருக்க வேண்டும், ஏனெனில் “காலம் அப்படிதான் உள்ளது” என அகல் தக்த் ஜதேதார் கியானி ஹர்ப்ரீத் சிங், திங்கள்கிழமை, மே 23, கருத்து தெரிவித்தார். ஒரு பக்கம் அவரது கருத்து விமர்சிக்கப்ட்டாலும் மறுபுறம் நாட்டின் சிறுபான்மையினரின் நிலையைக் கருத்தில் கொண்டு தற்காப்புக்காக ஆயுதங்களை வைத்திருப்பதில் தவறில்லை என்று பல நிபுணர்களும் நியாயப்படுத்தினர். “இன்றும் கூட, குறிப்பாக சீக்கிய சிறுவர்கள் மற்றும் பெண்கள், குரு ஹர்கோவிந்த் சிங்கின் கட்டளைகளைப் பின்பற்ற […]

Gyanvapi Mosque Muslims Uttar Pradesh

கியான்வாபி பள்ளிவாசல் குறித்து சமாஜ்வாதி கட்சியின் முஸ்லிம் எம்.எல் ஏக்களின் மவுனத்தை கேள்வி எழுப்பியவர் கைது !

அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM, ஒவைஸி)-ன் உத்தரபிரதேச மாநில பிரிவு செயலாளர் ஹக்கீம் அப்துல் சலாம் கான், புகழ்பெற்ற கியான்வாபி மசூதியில் “சமாஜ்வாதி கட்சியின் முஸ்லீம் எம்.எல்.ஏ.க்களின் மௌனத்தை” விமர்சித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டதற்காக உத்தரபிரதேச காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். கீர்தார்பூர் காவல் நிலையத்தில் ஹக்கீமீன் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 505ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வாட்ஸ் அப், ஃபேஸ்புக் போன்ற எந்த ஊடகத்தின் வழியாகவும் வதந்திகளை பரப்புவது, அதன் மூலம் […]