Brahmins Uttarakhand

உத்தராகண்ட் : தனது குடும்பத்தை சேர்ந்த ஐவரை கழுத்தை அறுத்து கொன்ற அர்ச்சகர் கைது!

பாஜக ஆளும் உத்தராகண்ட், டேராடூனின் ராணி போகாரியில் திங்கள்கிழமை காலை கத்தியால் கழுத்தை அறுத்து தனது குடும்ப உறுப்பினர்கள் ஐந்து பேரைக் கொடூரமாக கொலை செய்ததற்காக 47 வயதான அர்ச்சகர் ஒருவரை, கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அர்ச்சகரின் தாய், மனைவி மற்றும் மூன்று மகள்களும் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர், உத்தரபிரதேசத்தின் பண்டாவைச் சேர்ந்தவர், மகேஷ் குமார் திவாரி, பிராமண சமூகத்தை சேர்ந்த இவர், டேராடூனில் கடந்த 7-8 ஆண்டுகளாக ராணி போகாரியில் […]

Tamil Nadu

மின் கட்டணத்தை உயர்த்த நீதிமன்றம் இடைக்கால தடை!

தமிழகத்தில் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்டத்துறை உறுப்பினர் நியமிக்கப்படும் வரை, மின் கட்டண உயர்வு குறித்த இறுதி உத்தரவு பிறப்பிக்க, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தடை விதித்திள்ளது. இந்த தடை உத்தரவு சட்டத்துறை உறுப்பினர் நியமிக்கும் வரை தொடரும். அதே நேரத்தில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தலாம். மனுதார்கள் தங்களின் ஆட்சேபனைகளை ஒழுங்குமுறை ஆணையத்திடம் தெரிவிக்கலாம் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

BJP Hate Speech Muslims Telangana

தெலுங்கானா: பாஜக எம்எல்ஏ டி.ராஜா நபிகளார் குறித்து இழிவாக பேசிய நிலையில், வெறுப்புப் பேச்சுக்களை நாங்கள் ஆதரிப்பதில்லை என மாநில பாஜக விளக்கம் !

ஹைதராபாத்: நபிகள் நாயகம் குறித்து பாரதிய ஜனதா கட்சியின் எம்எல்ஏ ராஜா சிங் கூறிய இழிவான கருத்துக்களில் இருந்து தெலுங்கானா மாநில பாஜக விலகியுள்ளது. “எங்கள் கட்சி அனைத்து மதங்களையும் மதிக்கிறது, இதற்கு மாறாக யாரும் பேசியிருந்தால், நாங்கள் அதைக் கவனிப்போம்” என்று பாஜக தலைமை செய்தித் தொடர்பாளர் கிருஷ்ண சாகர் ராவ் தெரிவித்துள்ளார். கோஷாமஹாலைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ ஜெய் ஸ்ரீ ராம் சேனலில் யூடியூப்பில், திங்கள்கிழமை இரவு வெளியிட்ட காணொளியில் நபிகளார் குறித்து இழிவான […]

BJP Hate Speech Telangana

தெலங்கானா: நபிகளாரை இழிவுபடுத்தி பேசிய பாஜக எம்.எல்.எ, டி.ராஜா கைது !

ஹைதராபாத் : முகமது நபியை அவதூறாகப் பேசியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே, தொடர் வெறுப்பு பேச்சுகளுக்கு பெயர்போன பாஜக எம்எல்ஏ ராஜா சிங்கை ஐதராபாத் போலீஸார் சற்று முன் கைது செய்தனர். நபிகளாரை இழிவாக பேசியதற்காக பாஜக எம்எல்ஏ ராஜா சிங்கிற்கு எதிராக ஹைதராபாத்தில் போராட்டங்கள் வெடித்தன, மேலும் அவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. உள்ளூர் காவல்துறையினர் மற்றும் கமிஷனர் அதிரடிப்படை குழு மங்கள்ஹாட்டில் உள்ள எம்.எல்.ஏ […]

BJP Hate Speech Telangana

தெலுங்கானா: நபிகளாரை இழிவுபடுத்தும் வகையில் பேசிய பாஜக எம்.எல்.ஏ. ராஜா; போராட்டங்கள் வெடித்தன, போலீசார் குவிப்பு !

ஹைதராபாத்: கோஷாமஹால் பாஜக எம்எல்ஏ ராஜா சிங், நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தும் வகையில் வீடியோவை வெளியிட்டதைத் தொடர்ந்து, திங்கள்கிழமை நள்ளிரவிலும், பின்னர் செவ்வாய்கிழமை காலையிலும் நகர காவல் ஆணையர் சிவி ஆனந்த் அலுவலகம் முன்பும் நகரின் பிற பகுதிகளிலும் போராட்டங்கள் வெடித்தன. நகைச்சுவை என விளக்கம் : பிரச்னை பெரிதானதும் பாஜக எம்எல்ஏ ராஜா சிங், தனது பேச்சை “நகைச்சுவை” என்று என விளக்கம் அளித்துள்ளார். நகைச்சுவையாளர் முனாவர் ஃபரூக்கியின் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடைபெற்ற இரண்டு நாட்களுக்குப் […]

Aadivasis Kerala

நெல் வயலில் விளையாடியதற்காக ஆதிவாசி சிறுவர்கள் மீது கொலைவெறி தாக்குதல்!

கேரளாவின் மலை மாவட்டமான வயநாட்டில் உள்ள நெய்குப்பா பழங்குடியினர் காலனியைச் சேர்ந்த மூன்று ஆதிவாசி மைனர் குழந்தைகள், நெல் வயலில் நுழைந்ததற்காக அண்டை வீட்டுகாரரால் தாக்கப்பட்டனர். ஆறு மற்றும் ஏழு வயதுடைய சிறுவர்கள் தனது வயலை சேதப்படுத்தியதாக குற்றம்சாட்டி பக்கத்து வீட்டுக்காரர் கொடூரமாக அடித்துக் காயப்படுத்தி உள்ளார். இச்சம்பவம் ஆகஸ்ட் 15ம் தேதி நடந்தது. சம்பவத்தை நேரே கண்ட உறவினர், நெற்செய்கைக்கு தயார்படுத்தப்பட்டிருந்த வயலில் பிள்ளைகள் இறங்கிய காரணத்தால் இடத்தின் உரிமையாளர் ராதாகிருஷ்ணன் பிள்ளைகளை அடித்து உதைத்ததாக […]

Tamil Nadu

தமிழ்நாடு மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..

பேருந்துகளில் பெண் பயணிகளை முறைத்துப் பார்ப்பது போன்ற செயல்களில் ஈடுபடும் ஆண்களை நடத்துநர்கள் இறக்கி விடலாம் என்று மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பேருந்துகளில் நாள்தோறும் லட்சக்கணக்கான பெண்கள் பயணித்து வருகின்றனர். இந்த பயணத்தின்போது, சக ஆண் பயணிகளால் பெண்களுக்கு பல்வேறு வகையில் இடையூறுகள் அளிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இந்நிலையில், தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகளில், பெண் பயணிகளின் பாதுகாப்பிற்காக திருத்தம் செய்து அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், அரசுப் பேருந்துகளில் […]

Tamil Nadu

ஓபிஎஸ் அழைப்பை நிராகரித்தார் இபிஎஸ்..

ஒன்றிணைந்து செயல்பட ஓபிஎஸ் விடுத்த அழைப்பை நிராகரித்தார் எடப்பாடி பழனிசாமி. உழைப்பே இல்லாமல் தனக்கும், தன் மகனுக்கும் பதவி மட்டுமே வேண்டும் என்றால் எப்படி? கொஞ்சமாவது கட்சிக்காக உழைக்க வேண்டாமா? அநாகரிகமாய் நடந்த ஓபிஎஸ் உடன் எப்படி ஒத்துப்போக முடியும்? எப்படியாவது பதவியில் இருக்க வேண்டும் என்பதற்காக அடிக்கடி அழைப்பு விடுப்பவர்தான் பன்னீர்செல்வம் என ஓ.பி.எஸ்-க்கு எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

Political Figures Tamil Nadu

நடந்தவைகள் நடந்தவைகளாக இருக்கட்டும்: ஓபிஎஸ் பேட்டி

அதிமுகவுக்குள் எழுந்த பிளவு தான் திமுக ஆட்சிக்கு வர காரணம், இன்றைக்கு அதே சூழல் தான் ஏற்பட்டுள்ளது; இன்றைக்கு அசாதாரண சூழல் அதிமுகவில் ஏற்பட்டுள்ளது, அதிமுக ஒன்றுபட வேண்டும் என்பதே எண்ணம். “மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வரும் பொறுப்பை ஏற்க வேண்டும், அதற்கு ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்பது தான் எங்கள் நிலைப்பாடு. இதற்கு முன் ஏற்பட்ட அனைத்து கசப்புகளையும் மறந்து விடலாம், அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்; ஒன்றுபட்டு ஜனநாயக ரீதியில் தேர்தலை எதிர்கொண்டால் அதிமுகவை […]

Discrimination Hindus Hindutva Islamophobia Muslims Uttar Pradesh

உ.பி : பல சமய பிரார்த்தனையில் முஸ்லிம் பிரார்த்தனையும் இணைக்கப்பட்டதை அறிந்து பள்ளிக்கு சீல் வைப்பு !

உத்தரபிரதேசத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் அனைத்து மத வழிபாட்டின் ஒரு பகுதியாக இஸ்லாமிய பிரார்த்தனைகளையும் இணைத்துள்ளது தொடர்பாக விஎச்பி உள்ளிட்ட இந்துத்துவா குழுக்களின் புகார் மற்றும் எதிர்ப்பைத் தொடர்ந்து, பள்ளியின் இயக்குநர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 295A (மத உணர்வுகளை புண்படுத்தல்) மற்றும் மதமாற்ற தடைச் சட்டம் 2021 ஆகிய இரு பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கான்பூரில் உள்ள புளோரெட்ஸ் இன்டர்நேஷனல் பள்ளி, இந்துத்துவாவினரின் விஷம பிரச்சாரம் காரணமாக இரண்டு […]

மவ்தூதி
Education Hindutva Muslim Universities Saffronization Uttar Pradesh

அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் பாடத்திட்டத்தில் இருந்து பாகிஸ்தானிய எழுத்தாளர்களின் புத்தகங்கள் நீக்கம்!

உபி: புகழ்பெற்ற இஸ்லாமிய அறிஞர்களான மௌலானா அபுல் அலா மௌதூதி மற்றும் சையத் குதுப் ஆகியோரின் புத்தகங்களை பாடத்திட்டத்தில் இருந்து நீக்க அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக (AMU) நிர்வாகக் குழு முடிவு செய்துள்ளது. முஸ்லிம் கல்வி நிலையங்களில் மூக்கை நுழைக்கும் இந்துத்துவாவினர்: இந்துத்துவா ஆர்வலர் மது கிஷ்வர் மற்றும் பிற இந்து மேலாதிக்க தேசியவாத கல்வியாளர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இந்தியா டுடே தெரிவித்துள்ளது. இந்த புத்தகங்கள் ஏ.எம்.யுவின் […]

Islamophobia Muslims Uttar Pradesh

உபி : “பாகிஸ்தானுக்கு அனுப்பி விடுவேன் ” என முஸ்லிம் வியாபாரியை மிரட்டிய எஸ்.ஐ !

கான்பூர்,உத்தரப்பிரதேசம், ஆகஸ்ட் 4 (ஐஏஎன்எஸ்): ‘பாகிஸ்தானுக்கு அனுப்பி விடுவேன்’ என்று ஒரு முஸ்லிம் விடுவேன் வியாபாரியை போலீஸ் அதிகாரி மிரட்டும் ஆடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. உ.பி. போலீஸ்காரர் ஒருவருக்கும் முஸ்லிம் வியாபாரி ஒருவருக்கும் இடையிலான உரையாடல் ஆடியோ கிளிப்பில் சப்-இன்ஸ்பெக்டர் அந்த நபரிடம் தனது பெயரைக் கேட்டு முஸ்லிம் என்பதை அறிந்து கொண்ட உடன் “உன்னை பாகிஸ்தானுக்கு அனுப்பி விடுவேன்” என கூறுவதைக் கேட்க முடிகிறது. பணத்தை உரிய தவணையில் செலுத்த […]

Alleged Upper Caste atrocities Dalits Gujarat Hindus

குஜராத்: தலித் பெண் சமைத்ததால் சாப்பிட மறுக்கும் மாணவர்கள்!

அகமதாபாத்: ஜூன் 16 முதல், கோலி, பர்வாத், தாக்கூர் மற்றும் காத்வி போன்ற ஓபிசி சமூகத்தைச் சேர்ந்த 147 மாணவர்கள் மோர்பியில் உள்ள ஒரு பள்ளியில் அரசாங்கத்தின் மதிய உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவை உட்கொள்ளவில்லை. மாணவர்கள் சாப்பிடாததற்கு காரணம்: இதற்குக் காரணம் பள்ளியில் மதிய உணவு சமைக்கும் பணி ஒரு தலித் சமூக பெண்ணுக்கு வழங்கப்பட்டதால், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் அப்பெண்மணி சமைத்த உணவை சாப்பிடுவதை விரும்பவில்லை என்பதே. பள்ளி அதிகாரிகள் மற்றும் மாவட்ட […]

Assam BJP Hindutva Islamophobia Muslims

அசாம் : புல்டோசர் மூலம் இடிக்கப்பட்ட மதரசா !

அசாம்: பாஜக ஆளும் அசாமில் மொய்ராபரி பகுதியில் அண்மையில் கைது செய்யப்பட்ட முப்தி முஸ்தபா நடத்தி வந்த ஜாமியுல் ஹுதா மதரஸா அதிகாரிகளால் வியாழக்கிழமை இடிக்கப்பட்டது. இந்த மதரஸா 2018 முதல் செயல்பட்டு வந்தது. பங்களாதேஷை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான அன்சார் அல்-இஸ்லாமுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி, மொய்ராபரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட மொரிகாவ்ன் மாவட்டத்தின் சஹாரியா கிராமத்தில் இருந்து முப்தி முஸ்தபா காவல்துறையினரால் ஜூலை 28 அன்று கைது செய்யப்பட்டார். மோரிகான் மாவட்ட காவல்துறை […]

Alleged Upper Caste atrocities Dalits Uttar Pradesh

உபி: 4 கிலோ அரிசி திருடியதாக தலித் சமூக சிறுவன் அடித்து கொலை!

லக்னோ: பிரதமர் நரேந்திர மோடியின் நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசியில் உள்ள சூல்ரா கிராமத்தில் நான்கு கிலோ அரிசி மற்றும் மாம்பழங்களைத் திருடியதாக கூறி தலித் சமூக சிறுவன் விஜய் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், ஆத்திரமடைந்த குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள், குற்றவாளிகளை கைது செய்யக்கோரி வாரணாசி-படோஹி சாலையில் உள்ள கப்சேதியில் சடலத்தை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் தந்தை அளித்த புகாரின் பேரில், கப்சேதி போலீசார் […]