கர்நாடகாவில் பிரபல தலித் எழுத்தாளரும் ஆர்வலருமான தேவனூர் மகாதேவா ஆர்எஸ்எஸ் பற்றி எழுதியுள்ள புத்தகம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. வலதுசாரிகள் இதை ஆர்எஸ்எஸ்ஸுக்கு எதிரான பிரச்சாரம் என்கிறார்கள். “ஆர்எஸ்எஸ் ஆலா அகலா” (ஆர்எஸ்எஸ், அதன் ஆழமும் அகலமும்) என்ற புத்தகத்தின் விற்பனை கர்நாடக மாநிலத்தில் சாதனை படைத்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா வியாழன் அன்று மகாதேவாவுக்கு ஆதரவாக, “ஆர்எஸ்எஸ் பற்றி அவர் சொல்வதில் என்ன தவறு இருக்கிறது?” என்று கருத்து தெரிவித்துள்ளார். நூலை தடை செய்யத்துடிக்கும் வலதுசாரிகள்: இந்நூலை […]
Karnataka
கர்நாடகா: கிறிஸ்தவ குடும்பத்தார் வீட்டிற்குள் புகுந்து பைபிளை எரித்த இந்துத்துவா கும்பல் !
பாஜக ஆளும் கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள மல்லேனு கிராமத்தில் (ஹிரியூர் தாலுகா) செவ்வாய்க்கிழமை மாலை இந்துத்துவாவினர் ஒரு வீட்டுக்குள் புகுந்து பைபிளை தீ வைத்து எரித்துள்ளனர். ஏகாந்தம்மா என்ற 62 வயது மூதாட்டியின் வீட்டிற்குள் நுழைந்த நான்கு பேர் கொண்ட கும்பல், வீட்டில் ஏன் பிரார்த்தனை நடத்துகிறீர்கள் என அங்கிருந்தவர்களை மிரட்டி பைபிளை எரித்துள்ளனர். இது குறித்து இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது. சித்ரதுர்கா எஸ்.பி., பரசுராமன் கூறுகையில், ” 62 வயதான மூதாட்டி […]
2024 தேர்தலுக்கு பிறகு 50 புதிய மாநிலங்கள் உருவாக்கப்படும்! – பாஜக அமைச்சர் பேச்சு !
கர்நாடாகா: 2024 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு 50 புதிய மாநிலங்கள் உருவாகும் என்றும், வட கர்நாடகமும் தனி மாநிலமாக மாறும் என்றும் வனம், உணவு, சிவில் சப்ளை மற்றும் நுகர்வோர் விவகாரத்துறையின் பாஜக அமைச்சர் உமேஷ் கட்டி தெரிவித்தார். புதன்கிழமை பெலகாவி பார் சங்கத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாஜக அமைச்சர் உமேஷ் , மக்கள்தொகை அடிப்படையில் பெரிய மாநிலங்கள் பிரிக்கப்பட்டு 2024 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு 50 புதிய மாநிலங்கள் உருவாகும், பிரதமர் நரேந்திர மோடியின் […]
கர்நாடகா: பிரதமர் மோடியின் ஒரு நாள் பயணத்திற்காக ரூ. 23 கோடி செலவு !
கர்நாடகா: பெங்களூருவில் வசிப்பவர்கள் நகரின் சாலைகளின் நிலை குறித்து தொடர்ந்து புகார் தெரிவித்து வரும் நிலையில், பிபிஎம்பி (ப்ருஹத் பெங்களூரு மகாநகர பலிகே) பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கு முன்னதாக, சுமார் 14 கிமீ சாலையை மறுசீரமைக்கவும், பழுதுபார்க்கவும் ரூ.23 கோடி செலவிட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. பிரதமர் ஜூன் 20, திங்கட்கிழமை பெங்களூர் சென்றார், அப்போது அவர் பல வளர்ச்சி மற்றும் ரயில்வே திட்டங்களைத் தொடங்கி வைத்தார். செய்தியாளர் கூட்டத்தில் பேசிய பி.பி.எம்.பி சிறப்பு ஆணையர் (திட்டங்கள்) […]
தலித் எழுத்தாளர்கள் நீக்கம், ஆர்எஸ்எஸ் தலைவர்கள் சேர்ப்பு; காவிமயமாக்கப்பட்டுள்ள கர்நாடக பாடப்புத்தக மாற்றங்களின் முழு பட்டியல்!
கர்நாடகா : மகாத்மா காந்தி, டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் பற்றிய பாடங்கள் நீக்கப்பட்டு ஆர்எஸ்எஸ் சித்தாந்தவாதிகளான விநாயக் சாவர்க்கர் மற்றும் கேபி ஹெட்கேவார் ஆகியோரின் பாடங்கள் பாடப்புத்தகங்களில் சேர்க்கப்பட்டுள்ளன. அசர்ச்சைக்குரிய வலதுசாரி சொற்பொழிவாளர் ரோஹித் சக்ரதீர்த்தா தலைமையிலான குழுவால் உருவாக்கப்பட்ட பள்ளி பாடப்புத்தகங்களுக்கு எதிராக கர்நாடகாவில் உள்ள முற்போக்கு குழுக்கள் ஏன் போராடுகின்றன? இந்த நூல்களில் எந்தெந்தப் பிரிவுகள் திரிக்கப்பட்டிருக்கின்றன, எந்தெந்தப் பகுதிகள் காவி மையமாக்கப்பட்டுள்ளன, எந்த முற்போக்குக் கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன? சர்ச்சை தொடங்கியதில் இருந்து முதன்முறையாக, […]
தலித் எழுத்தாளரின் கவிதையை பாடப்புத்தகங்களில் இருந்து கைவிட கர்நாடகா பாஜக அரசு முடிவு!
கர்நாடகாவில் பாடநூல் திருத்தம் தொடர்பான சர்ச்சை தொடர் கதையாகி உள்ளது. சூரியனும் சந்திரனும் கடவுள் இல்லை என கூறும் பிரபல தலித் எழுத்தாளர் ஒருவரின் கவிதையை கைவிட ஆளும் பாஜக உத்தரவிட்டுள்ளது. இந்த நடவடிக்கை சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த சித்தலிங்கய்யாவின் “பூமி” கவிதையை நான்காம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இருந்து நீக்கி கர்நாடக கல்வி அமைச்சர் பிசி நாகேஷ் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மத உணர்வுகளை புண்படுத்தியதாக கவிதைக்கு எதிராக எழுந்த புகார்களை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை […]
கர்நாடகா: தலையில் தொப்பி அணிந்ததற்காக முஸ்லீம் மாணவரை தாக்கிய போலீசார்; பள்ளியில் அனுமதிக்க மறுத்த முதல்வர் !
பாகல்கோட்: கர்நாடகாவில் கல்லூரி வளாகத்தில் தலையில் தொப்பை அணிந்ததற்காக மாணவர் ஒருவரைத் தாக்கியதாகக் கூறி முதல்வர், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 5 பேர் உட்பட 7 பேர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். உள்ளூர் பனஹட்டி ஜே.எம்.எஃப்.சி நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, மாநிலத்தின் பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள தெரடாலா காவல் நிலையத்தால் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக நவீத் ஹசன் சாப் தரதாரி என்ற கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். […]
திப்பு சுல்தானின் அரண்மனை கோவில் நிலத்தில் கட்டப்பட்டதாம் !
கர்நாடகாவில் உள்ள திப்பு சுல்தானின் கோடைகால அரண்மனை கோவில் நிலத்தில் கட்டப்பட்டது என இந்துத்துவா அமைப்பு கூறியுள்ளது. நிலத்தின் உரிமையை கோவிலுக்கு மாற்ற வேண்டும் என இந்து ஜனஜக்ருதி சமிதி அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளது. கர்நாடகாவின் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் உள்ள 18ஆம் நூற்றாண்டின் மைசூர் ஆட்சியாளர் திப்பு சுல்தானுக்குச் சொந்தமான கோடைகால அரண்மனை கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் கட்டப்பட்டதாகக் கூறி, அதை ஆய்வு செய்ய வேண்டும் என்று இந்துத்துவா அமைப்பினர் வியாழக்கிழமை கோரியதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. […]
கர்நாடகா: 800 ஆண்டு பழமையான பள்ளிவாசலை சொந்தம் கொண்டாட முயலும் விஎச்பி ..
முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள் ஒவ்வொன்றாக அபகரிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வரும் வரிசையில் விஷ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி) மங்களூருவின் மலாலியில் உள்ள 800 ஆண்டுகள் பழமையான பள்ளிவாசலின் வளாகத்தில் ‘தாம்பூல பிரஸ்னா’ என்ற வெற்றிலை ஜோதிட முறையை மே 25 அன்று மேற்கொள்ள முடிவு செய்துள்ளது. கோயில் ஆக்கிரமிப்புக்குப் பிறகு மசூதி கட்டப்பட்டதா என கேரளாவைச் சேர்ந்த பிரபல ஜோதிடரை அணுகி ‘தாம்பூல பிரஸ்னா’ (வெற்றிலை ஜோசியத்தின்) மூலம் ஆய்வு (!) செய்ய திட்டமிட்டுள்ளதாக விஎச்பி வட்டாரங்கள் தெரிவித்தன. […]
‘கர்நாடக உயர்நீதிமன்ற வளாகத்தில் பெண்கள் தொழுகை’ என வெறுப்பு வீடியோவை வெளியிட்ட வலதுசாரி ஊடகம் மீது புகார்!
கர்நாடக உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள அலுவலக அறை ஒன்றினுள் இரண்டு பெண்கள் தொழுகை ஈடுபட்டுள்ளதை அத்துமீறி வீடியோ பதிவு செய்து அதனை வெளியிட்ட வலதுசாரி சமூக ஊடகச் சேனலின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளளர். ‘சம்வதா’ சேனலுக்கு எதிராக விதான் சவுதா காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. புகார் அளித்தவர் என்.ஜி.தினேஷ். இந்திய தண்டனை சட்டம், பிரிவுகள் 447 (கிரிமினல் அத்துமீறல்) மற்றும் 505-(2)ன் (வகுப்புகளுக்கு இடையே பகை, வெறுப்பு அல்லது தவறான […]
ஹிஜாப் விவகாரம் :’இரண்டு நாட்கள் காத்திருங்க..’ – தலைமை நீதிபதி!
ஹிஜாப் வழக்கு மேல்முறையீடுகளை இரண்டு நாட்களில் விசாரணைக்கு எடுத்து கொள்ள இந்திய தலைமை நீதிபதி திங்கள்கிழமை ஒப்புக்கொண்டார். “நான் விசாரணைக்கு பட்டியலிடுகிறேன். இரண்டு நாட்கள் காத்திருங்கள்” என ஹிஜாப் வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை அவசரமாக பட்டியலிட வேண்டும் என்று கோரிய மூத்த வழக்கறிஞர் மீனாட்சி அரோராவிடம் தலைமை நீதிபதி ரமணா கூறினார். 05.02.2022 தேதியிட்ட அரசாணையை நிலைநிறுத்தி, கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கிய மார்ச் 15 தேதியிட்ட தீர்ப்புக்கு […]
கர்நாடகா: ஹிஜாப் அணிவது இஸ்லாத்தில் கட்டாயமில்லை என கூறி பள்ளிகளில் ஹிஜாப் அணிய தடை விதித்தது நீதிமன்றம்!
ஹிஜாப் அணிவதற்கான தடையை எதிர்த்துப் போராடிய மாணவர்களுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்த தடையை எதிர்த்து ஐந்து மனுக்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அனைத்து மனுக்களும் தற்போது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஹிஜாப் அணிவது இஸ்லாமிய மார்க்கத்தில் கட்டாயமில்லை என மூன்று பேர் அடங்கிய நீதிமன்ற பென்ச் தீர்ப்பு வழங்கியுள்ளது. ‘பள்ளி சீருடை அணிவதற்கான கட்டுப்பாடு, மாணவர்கள் எதிர்க்க முடியாத நியாயமான கட்டுப்பாடு’ என்று உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது. இந்த உத்தரவுக்கு முன்னதாக, மாநில […]
கர்நாடகா: ஹிஜாப் அணியும் மாணவிகளின் பெயர், விலாசம், தொலைபேசி எண்ணை வெளியிட்ட கல்லூரி..
ஆலியா அசதி பிப்ரவரி 9 புதன்கிழமை அன்று நாள் முழுவதும் ராங் நம்பர் தொலைபேசி அழைப்புகள் வருகின்றன. கர்நாடகாவின் உடுப்பியில் சலசலக்கும் வாட்ஸ்அப் குழுக்களில் தொலைபேசி எண்கள், பெற்றோரின் பெயர்கள் மற்றும் வீட்டு முகவரி உட்பட தனது தனிப்பட்ட விவரங்கள் பகிரப்பட்டதை 17 வயது சிறுமி சில மணிநேரங்களில் உணர்ந்தார். கர்நாடகாவின் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதைத் தொடரும் போராட்டங்களில் முன்னணியில் இருந்த உடுப்பியின் அரசுப் பெண்களுக்கான அரசுப் பல்கலைக்கழகக் கல்லூரியின் ஆறு முஸ்லிம் மாணவர்களில் ஆலியா […]
கர்நாடகா: புர்காவை கழற்ற சொல்லி கொடூர தாக்குதலில் ஈடுபட்ட மதவெறி கும்பல்!
சனிக்கிழமையன்று பாஜக ஆளும் கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தில் மதவெறி கும்பல் ஒன்று ஆறு முஸ்லிம் ஆண்கள் மீது கொடூரமான தாக்குதலில் ஈடுபட்டனர். அருகில் உள்ள ஒரு தர்காவிற்கு சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்த ஒரு முஸ்லீம் குடும்பத்தின் காரை ஒரு மதவெறி கும்பல் தடுத்து நிறுத்தி, வாகனத்தின் உள் இருந்த பெண்களிடம் “புர்காவைக் கழற்றுமாறு” கூறியதை அடுத்து இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது, இதில் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்புக்கு வழிவகுத்தது. தாக்குதலில் ஈடுபட்டவர்கள் எஃப்ஐஆர்: தாக்குதல் நடத்தியவர்கள் […]
கர்நாடகா: மாட்டை கடத்தி செல்வதாக பொய்யாக கூறி இருவர் மீது கொலைவெறி தாக்குதல் !
பாஜக ஆளும் கர்நாடகா மாநிலம், பெல்தங்கடியில் மார்ச் 31, புதன்கிழமையன்று வாகனத்தில் சென்று கொண்டிருந்த இருவரை வழிமறித்த பாசிச கும்பல், இருவரும் மாட்டை கடத்தி செல்வதாக பொய்யாக வம்புக்கு இழுத்து, அவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபப்பை ஏற்படுத்தி உள்ளது. எனினும் இச்செய்தி பெரும்பான்மை மீடியாக்களில் பெட்டி செய்தியாகவும் கூட வெளியிடப்படவில்லை. காயமடைந்தவர்கள் அப்துல் ரஹ்மான் மற்றும் முஹம்மது முஸ்தபா என அடையாளம் காணப்பட்டுள்ளனர். பெல்டாங்கடி சர்ச் சாலையில் ஆம்னி காரில் […]