Law and Order Uttar Pradesh

உபியில் கழுத்து அறுக்கப்பட்டு பொலிஸ் அதிகாரி கொலை !

உபி,கான்பூர் : வாடகை வீட்டில் தங்கி இருந்து 30 வயதான பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டதாக வியாழக்கிழமை உபி பொலிஸார் தெரிவித்தனர்.

தேஷ் தீபக்கின் உடல் ரத்த வெள்ளத்தில் கிடந்தது, பிரஹாம் நகர் பகுதியில் இந்த சம்பவம் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

ஃபிரோசாபாத்தைச் சேர்ந்த கான்ஸ்டபிளான அவர், 2019 முதல் பில்ஹூரில் பணியமர்த்தப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

புதன்கிழமை மதியம் முதல் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்த அவரது மொபைலில் எந்த பதிலும் வரவில்லை என்று தீபக்கின் குடும்பத்தினர் பில்ஹவுர், ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி, அரவிந்த் குமார் சிங்கிடம் தெரிவித்தனர்.

போலீஸ் கான்ஸ்டபிளின் வீட்டை அடைந்தபோது, ​​அது வெளியில் இருந்து பூட்டப்பட்டிருந்தது என எஸ்ஹோ அரவிந்த் குமார் கூறினார்.

போலீசார் கதவின் பூட்டை உடைத்து பார்த்தபோது கான்ஸ்டபிள் இறந்து கிடந்தார்.

தீபக்கை முதலில் ஒரு துணியால் கழுத்தை நெரித்து பின்னர் கூரிய முனைகள் கொண்ட ஆயுதத்தால் அவரது கழுத்து அறுக்கப்பட்டதாக தெரிகிறது என்று அரவிந்த் குமார் கூறினார். கடந்த ஏப்ரல் மாதமே கான்ஸ்டபிள் தீபக்கிற்கு திருமணம் நடைபெற்றது.

இந்த வழக்கை விசாரிக்க தடயவியல் நிபுணர்கள் மற்றும் நாய் (ஸ்குவாட்) படைகளும் வரவழைக்கப்பட்டுள்ளதாக SHO கூறினார்