Dalits Rajasthan

ராஜஸ்தான்: தலித் சமூகத்தவர் திருமண ஊர்வலத்தின் போது சாதி ரீதியாக அவதூறு கூறி ரகளை !

கோட்டா (ராஜ்): ராஜஸ்தானின் கோட்டாவில், தலித் ஒருவரின் திருமணத்திற்கு முந்தைய ஊர்வலத்தின் போது தலித் வீட்டாரை, ஜாதி ரீதியாக இழிவுபடுத்தும் வகையில் பேசியதற்காகவும், குழப்பத்தை ஏற்படுத்தியதற்காகவும் 21 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (சிஆர்பிசி) பிரிவு 151 இன் கீழ் ஏழு பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர், அவர்களில் சிலர் ஏற்கனவே இந்த வழக்கில் பதிவு செய்யப்பட்டவர்கள் என்று டிஎஸ்பி மற்றும் வட்ட அதிகாரி (சிஓ) பிரவீன் […]

BJP Islamophobia Lynchings Madhya Pradesh Muslims

முஸ்லிம் என்ற சந்தேகத்தின் பேரில் பன்வர்லால் ஜெயினை அடித்து கொன்ற பாஜக தலைவர் !

65 வயதான பன்வர்லால் ஜெயின் என அடையாளம் காணப்பட்ட மாற்றுத்திறனாளி ஒருவர், பாஜக ஆளும் மத்தியப் பிரதேசத்தின் நீமுச் மாவட்டத்தில் முஸ்லீம் என்ற சந்தேகத்தின் பேரில் தாக்கப்பட்டதில் பலத்த காயமடைந்து உயிர் இழந்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “தேரா நாம் முகமது ஹய்?… ஆதார் கார்ட் திகா…’ (உங்கள் பெயர் முகமதுவா? உங்கள் ஆதார் அட்டையைக் காட்டு)” என்று பாஜக வை சேர்ந்த தினேஷ் ஜெயினிடம் கேட்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியான பிறகு இந்த […]

Muslim Man, Family Attacked By Mob In Kolar
Hindutva Islamophobia Karnataka Lynchings Minority Muslims

கர்நாடகா: புர்காவை கழற்ற சொல்லி கொடூர தாக்குதலில் ஈடுபட்ட மதவெறி கும்பல்!

சனிக்கிழமையன்று பாஜக ஆளும் கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தில் மதவெறி கும்பல் ஒன்று ஆறு முஸ்லிம் ஆண்கள் மீது கொடூரமான தாக்குதலில் ஈடுபட்டனர். அருகில் உள்ள ஒரு தர்காவிற்கு சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்த ஒரு முஸ்லீம் குடும்பத்தின் காரை ஒரு மதவெறி கும்பல் தடுத்து நிறுத்தி, வாகனத்தின் உள் இருந்த பெண்களிடம் “புர்காவைக் கழற்றுமாறு” கூறியதை அடுத்து இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது, இதில் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்புக்கு வழிவகுத்தது. தாக்குதலில் ஈடுபட்டவர்கள் எஃப்ஐஆர்: தாக்குதல் நடத்தியவர்கள் […]

மே.வங்கம்: ஜெய் ஸ்ரீ ராம் கோஷமிட மறுத்த 10 வயது சிறுவன் மஹாதேவ் மீது பாஜக உறுப்பினர் தாக்குதல் !
Crimes against Children Hindus Hindutva Lynchings West Bengal

மே.வங்கம்: ஜெய் ஸ்ரீ ராம் கோஷமிட மறுத்த 10 வயது சிறுவன் மஹாதேவ் மீது பாஜக உறுப்பினர் தாக்குதல் !

திங்கள்கிழமை பிற்பகல் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று கோஷமிட மறுத்ததற்காக பாஜக உறுப்பினர் ஒருவர் 10 வயது சிறுவன் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புலியாபாராவில் உள்ள தேநீர் கடை வழியாக சிறுவன் சென்று கொண்டிருந்த போது, அக்கடை உரிமையாளர் சிறுவனை தாக்கியுள்ளார். இது குறித்து டெலிகிராப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுவன் அண்மையில் தனது தாயை இழந்தவர். நான்காம் வகுப்பு மாணவரான மகாதேவ் சர்மா பல காயங்களுடன் ரானகட் […]

Corona Virus Kumbh Mela Rajasthan

கும்ப மேளாவில் பங்கெடுத்த 19 கோவிட் பாசிடிவ் நோயாளிகள் உத்தரகண்ட் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓட்டம் ..

புதுடில்லி: ஹரித்வாரில் கும்பமேளாவுக்குச் சென்று தெஹ்ரி மருத்துவமனையில் குணமடைந்து வந்த ராஜஸ்தானைச் சேர்ந்த பத்தொன்பது கோவிட் பாசிட்டிவ் நோயாளிகள் தப்பி ஓடிவிட்டதாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. இந்த சம்பவம் உத்தரகண்ட் மாநிலத்தில் சுகாதார அதிகாரிகள் மற்றும் போலீசார் மத்தியில் பெரும் பீதியைத் ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட நிர்வாகம் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து, ராஜஸ்தான் மாநில அரசாங்கத்திற்கும் தெரியப்படுத்தி உள்ளது. “தப்பி ஓடியவர்கள் கும்ப மேளாவில் பங்கெடுத்தவர்கள் என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது,” என்று சுகாதாரத் துறை அதிகாரி […]

Islamophobia Lynchings Muslims West Bengal

“ஜெய் ஸ்ரீ ராம்” கோஷமிட மறுத்ததற்காக பள்ளிவாசல் பராமரிப்பாளர் மீது தாக்குதல்!

மேற்கு வங்கம்: “ஜெய் ஸ்ரீ ராம்” என்று கோஷமிட மறுத்ததற்காக புதன்கிழமை அதிகாலையில் அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவரால் தாக்கப்பட்டதாக ஹூக்லியின் சின்சுராவில் உள்ள பள்ளிவாசலின் பராமரிப்பாளர் தெரிவித்துள்ளார்.இது குறித்து தி டெலிகிராப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. நடந்த சம்பவம்: சின்சுராவில் உள்ள சக்பஜாரில் வசிக்கும் முகமது சுஃபியுதீன் (54 வயதானவர்), புதன்கிழமை அதிகாலை 3.45 மணியளவில், தனது வீட்டிலிருந்து மசூதிக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, ​​மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று இளைஞர்கள் அவரை வழிமறித்து, “ஜெய் […]

கர்நாடகா: மாட்டை கடத்தி செல்வதாக பொய்யாக கூறி இருவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய பாசிச கும்பல் !
BJP Hindutva Karnataka Lynchings Minority Muslims

கர்நாடகா: மாட்டை கடத்தி செல்வதாக பொய்யாக கூறி இருவர் மீது கொலைவெறி தாக்குதல் !

பாஜக ஆளும் கர்நாடகா மாநிலம், பெல்தங்கடியில் மார்ச் 31, புதன்கிழமையன்று வாகனத்தில் சென்று கொண்டிருந்த இருவரை வழிமறித்த பாசிச கும்பல், இருவரும் மாட்டை கடத்தி செல்வதாக பொய்யாக வம்புக்கு இழுத்து, அவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபப்பை ஏற்படுத்தி உள்ளது. எனினும் இச்செய்தி பெரும்பான்மை மீடியாக்களில் பெட்டி செய்தியாகவும் கூட வெளியிடப்படவில்லை. காயமடைந்தவர்கள் அப்துல் ரஹ்மான் மற்றும் முஹம்மது முஸ்தபா என அடையாளம் காணப்பட்டுள்ளனர். பெல்டாங்கடி சர்ச் சாலையில் ஆம்னி காரில் […]

Karnataka Lynchings Muslims

கர்நாடகா: பள்ளிவாசலில் உறங்கி கொண்டிருந்த இமாம் மீது கொலைவெறி தாக்குதல் !

செவ்வாய்க்கிழமை இரவு மங்களூருவுக்கு அருகிலுள்ள கர்நாடகாவின் ஃபாரங்கிப்பேட்டே எனும் நகரில் பள்ளிவாசல் இமாம் ஒருவர் மீது கொலைவெறி தாக்குதல் நடைபெற்றது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தாக்கப்பட்ட இமாம் குந்தாபூரில் வசிக்கும் முஷ்தாக் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இரவில் பள்ளிவாசலுக்குள் உறங்கி கொண்டிருந்த நேரத்தில் முஸ்தாக் மீது மூன்று பேர் அடங்கிய ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் சி.சி.டி.வி யில் பதிவாகியுள்ளதாகவும், விசாரணை நடந்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். அருகிலுள்ள […]

டில்லி: 'நடுரோட்டில் பாகிஸ்தான் முர்தாபாத்' என கோஷமிட சொல்லி கொடூரமாக தாக்கியவர் மீது வழக்கு பதிவு !
Delhi Lynchings

டில்லி: ‘நடுரோட்டில் பாகிஸ்தான் முர்தாபாத்’ என கோஷமிட சொல்லி கொடூரமாக தாக்கியவர் மீது வழக்கு பதிவு !

வடகிழக்கு டெல்லியின் கஜூரி காஸ் பகுதியில் ‘பாகிஸ்தான்/ ஒவைசி முர்தாபாத்’ , ‘இந்தியா ஜிந்தாபாத்’ என்று கோஷமிட கட்டாயப்படுத்தி தாக்கப்படுகிறார். வீடியோவில் உள்ள மஞ்சள் நிற சட்டை அணிந்தவர் அஜய் கோஸ்வாமி பண்டிட். டெல்லி கலவரம் வழக்கிலும் அவர் கைது செய்யப்பட்டவர். காணொளி வைரல் ஆனதை தொடர்ந்து அஜய் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. வீடியோவில், தாக்கப்படுபவர் சித்திரவதை செய்யப்பட்டு உடல் ரீதியாக தாக்கப்படுகையில் அருகில் உள்ளோர் சிரிப்பதைக் கேட்க முடிகிறது. பாதிக்கப்பட்டவர் கோஸ்வாமியின் கால்களைப் பிடித்து, […]

காஷ்மீர்: பழங்குடியின முஸ்லிம் குடும்பத்தை வழிமறித்து, பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்; குடும்பத்தார் மீது தாக்குதல் !
Kashmir Lynchings Minority Muslims

ஜம்மு: பழங்குடியின முஸ்லிம் குடும்பத்தை வழிமறித்து, பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்; குடும்பத்தார் மீது தாக்குதல் !

திலாவர், அவரது தந்தை ரபாக்கத் அலி, அவரது தாயார் மற்றும் அவரது சகோதரி ஆட்டு மந்தையின் பின்னால் நடந்து கொண்டிருந்தபோது ஒரு கார் அவர்கள் வழியில் வந்தது. அதிலிருந்து மூன்று ஆண்கள் இறங்கினர். திலாவரின் சகோதரியை நோக்கி வந்த அவர்கள், சகோதரியைப் பிடித்து காரில் இழுத்து போட முயன்றனர். உடனே திலாவரும் அலியும் மூவரையும் தள்ளி, அவர்களின் பிடியிலிருந்து பெண்ணை விடுவித்தனர். உடனே தாயிடம் ஓடினார் பாதிக்கப்பட்ட பெண். சிறிது நேரத்தில் மூவரும் எங்களை தாக்க ஆரம்பித்தனர்; […]

உபி: கோயில் கட்ட உதவிய முஸ்லிம்களுக்கு உள்ளே நுழைய தடை!
Hindutva Lynchings Uttar Pradesh

உபி: கோயில் புனரமைக்க உதவிய முஸ்லிம்களுக்கு, கோயில் செல்ல தடை!

காஸியாபாத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு முஸ்லிம் சிறுவன் தண்ணீர் குடிப்பதற்க்காக கோயிலில் நுழைந்ததற்காக ஷ்ரிங்கி யாதவ் என்பவனும் , அவன் சகாக்களும் அந்த சிறுவனின் தந்தை பெயரையும் , அவன் பெயரையும் கேட்டு அச்சிறுவனை பலமாக தாக்கி அதை வீடியோவும் எடுத்தனர். பின்னர் சிறுவனின் தலையில் ரத்தம் கசிந்து கொண்டிருக்க அவனை கோயிலின் வெளியே தூக்கி வீசி விட்டு சென்றுள்ளனர். இந்த அதிர்ச்சியான காணொளி நடுநிலையாளர்களையும், பாசிசத்திற்கு எதிரான மக்களிடையே கடும் எதிர்ப்பை கிளப்பியது. […]

Lynchings Madhya Pradesh

ம.பி: 60 வயது பிர்தவ்ஸ் ஹாஜியார் அடித்து கொலை; பாசிச கும்பல் வெறியாட்டம்!

பாஜக ஆளும் மத்தியப்பிரதேச மாநிலம் ஷாஜாபூர் மாவட்டத்திலுள்ளது அகோடியா நகரம், இங்கு வசிக்கும் 60 வயதான முதியவர் பிர்தௌஸ் ஹாஜி, இவர் அங்கு விஷேங்களுக்கு சமையல் செய்யும் தொழில் செய்து வருபவர். சம்பவத்தன்று இருவேறு மதத்தை சேர்ந்த இரு சிறுவர்களுக்கிடையே நடந்த சாதாரண விளையாட்டுச்சண்டை, முதியவர் தாக்கப்பட்டு இறக்கும் அளவிற்கு விபரீதமாகிவிட்டது. கிரிக்கெட் விளையாடுவதில் ஏற்பட்ட சிறு சண்டைக்கு இதை சாக்காக வைத்து முஸ்லிம்களை குறி வைத்து தாக்கியுள்ளது பாசிச கும்பல். இதில் சமபந்தமே இல்லாமல் சமையல் […]

lynching jharkand cow vigilantes
Lynchings Uttar Pradesh

உபி : திருட்டு பட்டம் சுமத்தி ரேஹான், ஷாரூக் மீது கொலைவெறி தாக்குதல்; ஒருவர் பலி !

உபி மாநிலம் பரேலி பகுதியில் வசிப்பவர்கள் ரேஹான் மற்றும் அவரது நண்பர்ஷாருக், சம்பவத்தன்று நந்தன்சிங் என்பவரது வீட்டுச்சுவற்றில் சிறுநீர் கழித்துக்கொண்டிருந்ததை கண்ட நந்தன்சிங்கும் அவரது குடும்பத்தினரும், இருவரும் தங்களது வீட்டிற்கு திருட வந்திருப்பதாக நினைத்து அடித்து உதைக்க தொடங்கியுள்ளனர். அவர்கள் எவ்வளவு சொல்லியும் கேட்காத நந்தன்சிங் குடும்பத்தினர் இருவரையும் வலுவான ஆயுதங்களை கொண்டு தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த ரேஹான், பரேலி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போது மேல் சிகிச்சைக்கு வசதிகள் இல்லை என கூறி மருத்துவர்கள் டெல்லிக்கு அனுப்பி […]

நான் தாக்கப்பட்டபோது பா.ஜ.கவோ, தொலைகாட்சி தொகுப்பாளர்களோ ஏன் கொந்தளிக்கவில்லை?- சுவாமி அக்னிவேஷ் கேள்வி!
Hindus Hindutva Lynchings

நான் தாக்கப்பட்டபோது பா.ஜ.கவோ, தொலைகாட்சி தொகுப்பாளர்களோ ஏன் கொந்தளிக்கவில்லை?- சுவாமி அக்னிவேஷ் கேள்வி!

மஹாராஷ்ட்ரா மாநிலம் பல்கர் மாவட்டத்தில் சமீபத்தில் கலவரக்கும்பலால் மூன்று பேர் கொல்லப்பட்ட சம்பவம் பா.ஜ.க மற்றும் வலதுசாரி சிந்தனை கொண்டவர்களால் கடுமையாக கண்டித்து கூப்பாடு போடப்பட்டது. கொல்லப்பட்ட மூவரில் இருவர் வாரணாசியில் உள்ள ஒரு அகாராவைச் சேர்ந்த சாதுக்கள் என்பதை மையமாக வைத்து பா.ஜ.க மற்றும் சில தொலைக்காட்சி தொகுப்பாளர்களான வலதுசாரி மதவெறியர்கள் இந்த கொலைக்கு மதசாயம் பூசி மதகுரோதத்தை வளர்க்க முயற்சிக்கிறார்கள். இத்தனைக்கும் இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 100க்கும் மேற்பட்டோர் அத்தனை பேரும் சங்பரிவாரால் இந்து […]

ஜார்கண்ட்: அன்சாரி மீது கும்பல் வன்முறை தாக்குதல்; உடம்பில் ஒட்டுத்துணியின்றி அழைத்து சென்ற போலீஸ்!
Islamophobia Jharkand Lynchings Muslims

ஜார்கண்ட்: அன்சாரி மீது கும்பல் வன்முறை தாக்குதல்; உடம்பில் ஒட்டுத்துணியின்றி அழைத்து சென்ற போலீஸ்!

கடந்த ஆண்டு பாஜக ஆட்சியில் இருந்த சமயம், ஜார்க்கண்டில் மிருகத்தனமாக இந்துத்துவாவினரால் தாக்கப்பட்டு உயிரிழந்த தப்ரேஸ் அன்சாரியின் கொடூர கும்பல் வன்முறை சம்பவமே இன்னும் நினைவில் இருந்து நீங்காத நிலையில் ஜார்கண்டில் மீண்டும் அதே போன்ற ஒரு கொடூர சம்பவம் அரங்கேறி உள்ளது. இது குறித்து பிரபல ஊடகமான ‘தி குவின்ட‘ செய்தி வெளியிட்டுள்ளது. ராஜூ அன்சாரி என்ற நபர் திருட்டு பட்டம் சுமத்தப்பட்டு ஹசாரிபாகின் கிட்டி என்ற இடத்தில் தாக்கப்படுகிறார். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தடைந்ததும், […]