BJP Fascism Indian Judiciary Muslims Uttar Pradesh Yogi Adityanath

உபி அரசின் நடவடிக்கைகள் குறித்து முன்னாள் உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் கடிதம் !

உத்தரபிரதேச மாநிலத்தில் சட்ட விரோத கடுங்காவல், வீடுகளை புல்டோசர்களால் இடிப்பது , போராட்டக்காரர்கள் மற்றும் போலீஸ் காவலில் உள்ளவர்கள் மீது போலீஸ் வன்முறை என்பன உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் குறித்து தானாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும் என முன்னாள் நீதிபதிகள் மற்றும் பல்வேறு வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர். இந்திய தலைமை நீதிபதி என்.வி. ரமணாவுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், போராட்டக்காரர்களை விசாரிக்கவும், அமைதியான போராட்டங்களில் ஈடுபடவும் வாய்ப்பளிப்பதற்கு பதிலாக, உத்தரபிரதேச மாநில நிர்வாகம் “அத்தகைய நபர்களுக்கு […]

Alleged Police Brutalities Indian Judiciary Muslims

“‘தீவிரவாதி’ பட்டம் இனி இல்லை, இழந்த ஒன்பது ஆண்டுகளை யார் திருப்பி தருவார்கள் ?”

யுஏபிஏ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு விடுவிக்கப்பட்ட ஐந்து பேரில் ரஷித் மற்றும் ஷாஹித் ஆகியோர் அடங்குவர். முஹமது ரஷீத்தின் வாடிக்கையாளர்கள் அவரை “பயங்கரவாதி” மற்றும் “ஜிஹாதி” என்று அழைத்ததால் ரஷித்தின் தந்தை தனது கடையை மூட வேண்டியதாயிற்று. ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு போலீஸ் கதவைத் தட்டியபோது இழந்த வேலையை ஷாஹித் இன்னும் திரும்பப் பெறவில்லை. அதுவே அவரது குடும்பத்தின் ஒரே வாழ்வாதாரமாக இருந்தது. “பயங்கரவாதி என்ற முத்திரையுடன் நான் வாழ… எனது […]

Alleged Police Brutalities Indian Judiciary Muslims Pogrom

ஹாசிம்புரா இனப்படுகொலை: 42 முஸ்லீம்களை ஈவு இரக்கமின்றி ரோட்டில் வைத்து சுடுகொல்லபட்ட கொடூரம்!

உ.பி. மாநிலம் மீரட் நகரில் உள்ள ஹாசிம்புராவில் நடந்த முஸ்லீம் படுகொலையை மோடியின் குஜராத்தில் நடந்த முஸ்லீம் பெருந்திரள் படுகொலையின் முன்னோடி எனலாம். போலீஸ், இராணுவம் உள்ளிட்ட மொத்த அரசு இயந்திரமும் ஆர்.எஸ்.எஸ்ஸாக மாறி நடத்திய படுகொலை என விமர்சிக்கப்படும் இப்படுகொலையின் தொடக்கப்புள்ளியாக இரண்டு சம்பவங்கள் அமைந்தன. மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஷா பானு என்ற வயதான, கணவனால் விவாகரத்து செய்யப்பட்ட தாய், ஜீவனாம்சம் தரக்கோரி தொடுத்த வழக்கில் உச்சநீதி மன்றம் அவருக்குச் சாதகமான தீர்ப்பை ஏப்ரல் […]

gyanvapi
Indian Judiciary Muslims Uttar Pradesh

உபி: சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டது என கூறி கியான்வாபி பள்ளிவசாலின் ஒளு செய்யும் பகுதிக்கு செல்ல தடை விதித்தது நீதிமன்றம்!

உபி: கியான்வாபி மசூதியின் ஒரு பகுதியை சீல் வைக்குமாறு கடந்த திங்களன்று வாரணாசி நீதிமன்றம், மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. அங்கு வீடியோ சர்வேயின் போது ஒரு சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டது என கூறி தற்போது அந்த பகுதிக்கு யாரும் செல்லக்கூடாது என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நீதிமன்றம் வீடியோ சர்வே எடுக்க வேண்டுமென கட்டாயமாக்கியதை அடுத்து உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதி வளாகத்தின் மூன்று நாள் வீடியோ ஆய்வு, நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஒரு நாள் […]

மதுராவில் உள்ள ஜமா பள்ளிவாசல் கிருஷ்ணர் பிறந்த இடம், தொல்லியல் ஆய்வு நடத்த வேண்டும் நீதிமன்றத்தில் வழக்கு!
Hindutva Indian Judiciary Islamophobia Muslims Uttar Pradesh

ஆக்ராவில் உள்ள ஜமா பள்ளிவாசல் கிருஷ்ணர் பிறந்த இடம், தொல்லியல் துறை ஆய்வு நடத்த வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு!

இந்துக்களின் தெய்வமான கிருஷ்ணரின் சிலைகள் பள்ளிவாசலின் கீழ் புதையுண்டுள்ளதா என்பதை கண்டறிய ஆக்ராவில் உள்ள ஜஹானாரா மசூதி (ஜமா மஸ்ஜித் ஆக்ரா என்று பிரபலமாக அறியப்படுகிறது) உள்ள நிலத்தில் இந்தியத் தொல்லியல் ஆய்வகம் (ஏ.எஸ்.ஐ) கதிரியக்க பரிசோதனை செய்யக் கோரி மதுராவில் உள்ள நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிலைகளை பள்ளிவாசலுக்கு கீழ் அவுரங்கசீப் புதைத்தாராம்: முகலாய பேரரசர் அவுரங்கசீப், மதுரா ஜன்மஸ்தன் கோயிலை இடித்துத் தள்ளிய (?) பின்னர், கிருஷ்ணரின் சிலைகளை மதுராவிலிருந்து ஆக்ராவுக்கு எடுத்து […]

உபி: கியான்வாபி பள்ளிவாசலில் தொல்பொருள் ஆய்வு மேற்கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவு; செலவை அரசு ஏற்குமாறு தீர்ப்பு.
Indian Judiciary Muslims Uttar Pradesh

உபி: கியான்வாபி பள்ளிவாசலில் தொல்பொருள் ஆய்வு மேற்கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவு; செலவை அரசே ஏற்குமாறும் உத்தரவு!

உபி காஷி விஸ்வநாத் கோயிலை ஒட்டியுள்ள கியான்வாபி பள்ளிவாசலில்இந்தியத் தொல்லியல் ஆய்வகம் (ஏ.எஸ்.ஐ) ஆராய்ச்சி செய்திட வாரணாசி சிவில் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 2000 ஆண்டு பழமையான காஷி விஸ்வநாத் கோயிலின் ஒரு பகுதியை 1669 ஆம் ஆண்டில் கியான்யாபி மசூதியைக் கட்டுவதற்காக முகலாய பேரரசர் அவுரங்கசீப் இடித்ததாக எந்த ஒரு ஆதாரமுமின்றி இந்துத்துவாவினர் கூறி வருகின்றனர், இந்நிலையில் கியான்வாபி மசூதி அமைந்துள்ள மீட்டெடுக்க கோரி நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. “… மேற்கண்ட கியான்வாபி நிலத்தின் நடுவில், […]

தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை உபி அரசு தவறாகப் பயன்படுத்துவதாக உயர்நீதிமன்றம் அறிவிப்பு; 120 தேச துரோக வழக்கில் 94 வழக்குகள் ரத்து!
Indian Judiciary Uttar Pradesh

தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை உபி அரசு தவறாகப் பயன்படுத்துவதாக உயர்நீதிமன்றம் அறிவிப்பு; 120 தேச துரோக வழக்கில் 94 வழக்குகள் ரத்து!

தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை (என்.எஸ்.ஏ) உபி அரசு தவறாகப் பயன்படுத்துகிறது என அலகாபாத் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. காவல்துறை மற்றும் நீதிமன்ற ஆவணங்களை தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆய்வு செய்ததில், ஜனவரி 2018 முதல் 2020 டிசம்பர் வரையிலான காலத்தில் பதியப்பட்ட 120 வழக்குகளில் 94 வழக்குகள் ரத்து செய்யப்பட்டிருப்பதாக கண்டறிந்துள்ளது. மொத்த வழக்குகளில் 41 தேச துரோக வழக்குகள், பசுவதை தொடர்பாகப் பதியப்பட்டிருப்பதாகவும், இந்த வழக்குகள் அனைத்தும் சிறுபான்மையினர் மீது பதியப்பட்டிருப்பதாகவும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது. […]

‘மீண்டும் 24 மணி நேரமாக உணவு வழங்கப்படவில்லை’: யோகி அரசால் கைது செய்யப்பட்டுள்ள சித்திக் கப்பனின் மனைவி வேதனை
Activists Arrests Islamophobia Journalist Muslims Uttar Pradesh

‘மீண்டும் 24 மணி நேரமாக உணவு வழங்கப்படவில்லை’: சித்திக் கப்பனின் மனைவி வேதனை ..

யுஏபிஏ குற்றம் சாட்டப்பட்டவரும், கேரளாவைச் சேர்ந்த பத்திரிகையாளருமான சித்திக் கப்பன், மதுரா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட அழைத்து வரப்பட்ட நாளில், அதற்கு முன்பான 24 மணி நேத்தில் அவருக்கு எந்த உணவும் வழங்கப்படவில்லை என அவரது குடும்பத்தினர் மற்றும் வக்கீல் தி க்விண்ட் ஊடகத்திடம் தெரிவித்துள்ளனர். அவரது மனைவி 37 வயதான ரைஹானா சித்திக்கிடம் பேசினோம், இவ்வாறு நடப்பது இது முதல் முறை அல்ல என்று கூறினார். அவரது வழக்கறிஞர் வில்ஸ் மேத்யூஸையும் நாங்கள் அணுகினோம்,இவ்வாறு மீண்டும் […]

டில்லி கலவர வழக்கில் மகன் கைது; பிச்சை எடுத்து குழந்தைகளை காப்பாற்றும் முஸ்லிம் பெண்மணி !
Alleged Police Brutalities Delhi Pogrom Indian Judiciary Muslims

டில்லி கலவர வழக்கில் மகன் கைது; பிச்சை எடுத்து குழந்தைகளை காப்பாற்றும் முஸ்லிம் பெண்மணி !

மூன்று குழந்தைகளை கொண்ட 50 வயதான முஸ்லீம் பெண்மணி தபஸ்ஸும் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். டில்லி கலவர வழக்கில் ஷஹாபுதீன் என்ற அவரது மகன் கைது செய்யப்பட்டு ஓர் ஆண்டு நிறைவடைந்து விட்டது. கணவர் மற்றும் மூத்த மகன் பல ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டனர், பிறகு அவரது மகன் ஷாஹாபுதீன் மட்டுமே அவரது குடும்பத்தில் சம்பாதிக்கும் ஒரே நபராக இருந்தார். இவரை தான் போலீசார் கைது செய்துள்ளனர். தற்போது தபஸ்ஸும் தனது குழந்தைகளுடன் வடகிழக்கு […]

உபி: நீதிமன்றத்திற்குள் நுழைந்து நீதிபதியை எட்டி மிதித்து, அறைந்த கொடூரம் !
Indian Judiciary Uttar Pradesh

உபி: நீதிமன்றத்திற்குள் நுழைந்து நீதிபதியை எட்டி மிதித்து, அறைந்த கொடூரம் !

உன்னாவ் பார் அசோசியேஷன் உறுப்பினர்களால் கடந்த வியாழக்கிழமை தாக்கப்பட்டதாக உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த நீதிபதி ஒருவர் கூறியதையடுத்து எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் தலைமை தாங்கி கொண்டிருந்த நீதிமன்ற அறைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தபட்டுள்ளது. நாட்டையே உலுக்கி இருக்க வேண்டிய இந்த சம்பவம் முற்றிலுமாக மூடி மறைக்கப்பட்ட நிலையில் உள்ளது. நீதிபதிக்கே இந்த நிலை: கடந்த மார்ச் 25 அன்று, உன்னாவோவில் உள்ள கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி (சிறப்பு நீதிமன்றம், போக்ஸோ சட்டம்), பிரஹ்லாத் டோண்டன் […]

குஜராத்: இஷ்ரத் ஜஹான் போலி என்கவுன்டர் வழக்கில் போலீஸ் அதிகாரிகளை தண்டிக்க மாநில பாஜக அரசு அனுமதி மறுப்பு !
BJP Gujarat Indian Judiciary Muslims

குஜராத்: இஷ்ரத் ஜஹான் போலி என்கவுன்டர் வழக்கில் போலீஸ் அதிகாரிகளை தண்டிக்க மாநில பாஜக அரசு அனுமதி மறுப்பு !

அகமதாபாத்: 2004 இஷ்ரத் ஜஹான் போலி என்கவுன்டர் வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி ஜி.எல். சிங்கால் உட்பட குற்றம் சாட்டப்பட்ட மூன்று காவல்துறை அதிகாரிகள் மீது வழக்குத் தொடர குஜராத் அரசு அனுமதி மறுத்துள்ளது என்று மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) சனிக்கிழமை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சிறப்பு நீதிபதி வி.ஆர்.ராவலின் உத்தரவின் பேரில் சிங்கால், தருண் பரோட் மற்றும் அனாஜு சவுத்ரி ஆகியோரைத் தண்டிக்க சிபிஐ மாநில அரசிடம் அனுமதி கோரியது. உத்தியோகபூர்வ கடமையை நிறைவேற்றுவதில் தவறி இருந்தாலும், […]

மே.வங்க தேர்தலை 8 கட்டங்களில் நடத்துவதை எதிர்த்து தொடரபட்ட வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்..
Indian Judiciary West Bengal

மே.வங்க தேர்தலை 8 கட்டங்களில் நடத்துவதை எதிர்த்து தொடரபட்ட வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்..

மேற்கு வங்கத்தில் சட்டமன்றத் தேர்தலை எட்டு கட்டங்களாக நடத்த தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை செவ்வாய்க்கிழமை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேற்கு வங்கத்தில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் அரசாங்கமும், நடுநிலையாளர்களும் மாநில தேர்தலை எட்டு கட்டங்களாக நடத்த முடிவெடுத்துள்ளது, தேர்தலில் பாஜக வுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டிருந்ததாகக் குற்றம் சாட்டினர். அரசியலமைப்பின் 14 வது பிரிவு மற்றும் 21 வது பிரிவை மீறியுள்ளதால், மாநிலத்தில் எட்டு கட்ட தேர்தல் நடத்துவதைத் தடுத்து […]

UAPA - அறிந்து கொள்ள வேண்டிய சில முக்கியமான குறிப்புகள்..
Indian Judiciary NIA

UAPA – அறிந்து கொள்ள வேண்டிய சில முக்கியமான குறிப்புகள்..

ஒரு சுருக்கமான பின்னணி… இந்திய சுதந்திரம் உலகளாவிய பல மாற்றங்களின் பின்னணியில் உருவானது. ஐ.நா அவை உருவாக்கம், உலகளாவிய மனித உரிமைப் பிரகடனம் ஆகிய பின்னணியில் நமது அரசியல் சட்ட அவையில் விவாதங்கள் நடந்து பல நல்ல கூறுகளுடன் இந்திய அரசியல் சட்டம் 1951 இல் ஏற்றுக் கொள்ளப்பட்டது.. அப்போதே நமது ஆட்சியாளர்கள் அன்றைய பொதுவுடைமைப் புரட்சிகளையும் அதன் இந்திய எதிரொலிகளையும் சுட்டிக் காட்டி பிரிட்டிஷ் அரசு காலத்திய தடுப்புக்காவல் சட்டம் ஒன்று இருண்ட்து என்றாலும் பெரிய […]

சிமி இயக்கித்தனர் என கைது செய்யப்பட்ட 122 பேறும் 20 ஆண்டுகளுக்கு பிறகு குற்றமற்றவர்கள் என நீதிமன்றம் விடுவிப்பு !
Gujarat Indian Judiciary Minority Muslims

சிமி இயக்கத்தவர் என கூறி கைது செய்யப்பட்ட 127 பேறும் 20 ஆண்டுகளுக்கு பிறகு குற்றமற்றவர்கள் என நீதிமன்றம் தீர்ப்பு !

குஜராத், சூரத் : கடந்த 2001 ஆம் ஆண்டு, ராஜேஸ்ரீ ஹாலில் இருந்து சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (யுஏபிஏ) பல்வேறு பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்ட 127 குற்றவாளிகளும், குற்றமற்றவர்கள் என இன்று (சனிக்கிழமை) நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனினும் இவர்கள் கைது செய்யப்படும் போது தொடர் செய்திகளாக்கி டி.ஆர்.பி ரேட்டிங்கை அதிகரித்து கொண்ட தொலைக்காட்சி ஊடகங்கள் யாவுமே, கைது செய்யப்பட்டவர்கள் நிரபராதிகள் எனபதை ஏனோ செய்தி ஆக்காமல் உள்ளனர். ஐந்து பேர் மரணம்: கைது செய்யப்பட்ட […]

தேசிய பாதுகாப்பு சட்டம், யுஏபிஏ ஆகிய சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டோரின் மலைக்க வைக்கும் விவரங்கள்..
Activists Arrests Indian Judiciary NIA Political Vendetta

தேசிய பாதுகாப்பு சட்டம், யுஏபிஏ ஆகிய சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டோரின் மலைக்க வைக்கும் விவரங்கள்..

மத்திய உள்துறை துணை அமைச்சர் கிஷன் ரெட்டி மாநிலங்கள் அவையில் அளித்த விவரங்களின்படி, 2016, 17, 18 மூன்றாண்டுகளில் இச்சட்டத்தின் கீழ் தொடுக்கப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 3005; கைது செய்யப்பட்டோர் எண்ணிக்கை 3974; விவரம் : 2016, 2017, 2018 ஆண்டுகளில் UAPA சட்டத்தில் தொடுக்கப்பட்ட வழக்குகள் முறையே 922, 901, 1182. ஒவ்வொரு ஆண்டும் கைது செய்யப்பட்டோர் எண்ணிக்கை: 999, 1,554 , 1,421 ஆகும். இந்த மூன்று ஆண்டுகளிலும் தலா 232, 272 ,317 […]