Activists Dalits Karnataka RSS

கர்நாடகா: தலித் சமூக நூலாசிரியர் எழுதிய புத்தகத்தால், கடும் கோபத்தில் ஆர்.எஸ்.எஸ் !

கர்நாடகாவில் பிரபல தலித் எழுத்தாளரும் ஆர்வலருமான தேவனூர் மகாதேவா ஆர்எஸ்எஸ் பற்றி எழுதியுள்ள புத்தகம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. வலதுசாரிகள் இதை ஆர்எஸ்எஸ்ஸுக்கு எதிரான பிரச்சாரம் என்கிறார்கள். “ஆர்எஸ்எஸ் ஆலா அகலா” (ஆர்எஸ்எஸ், அதன் ஆழமும் அகலமும்) என்ற புத்தகத்தின் விற்பனை கர்நாடக மாநிலத்தில் சாதனை படைத்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா வியாழன் அன்று மகாதேவாவுக்கு ஆதரவாக, “ஆர்எஸ்எஸ் பற்றி அவர் சொல்வதில் என்ன தவறு இருக்கிறது?” என்று கருத்து தெரிவித்துள்ளார். நூலை தடை செய்யத்துடிக்கும் வலதுசாரிகள்: இந்நூலை […]

Alleged Police Brutalities Dalits Uttar Pradesh

உ.பி: போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்ட தலித் நபர்.. உடலும் வலுக்கட்டாயமாக எரிப்பு!

உத்தரபிரதேசத்தின் ஃபரூகாபாத் பகுதியைச் சேர்ந்த 35 வயதான தலித் கௌதம், ஜூன் 24 அன்று இரவு அவரது வீட்டில் நடைபெற்ற சோதனையைத் தொடர்ந்து காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்டதாக அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். ஃபரூகாபாத் மாவட்டம் மேராபூர் காவல் நிலைய எல்லைக்குள் இந்த சம்பவம் நடந்துள்ளது. சட்டவிரோதமாக மது விற்பவர்களை பிடிக்கவே போலீசார் கவுதமின் வீட்டை சோதனையிட சென்றதாக போலீசார் தெரிவித்தனர். பெரும் போராட்டத்திற்கு பிறகே எஃப்ஐஆர் : ஆரம்பத்தில் கௌதமின் உடலை பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்ல […]

Dalits Education Karnataka Muslims RSS Saffronization Students

தலித் எழுத்தாளர்கள் நீக்கம், ஆர்எஸ்எஸ் தலைவர்கள் சேர்ப்பு; காவிமயமாக்கப்பட்டுள்ள கர்நாடக பாடப்புத்தக மாற்றங்களின் முழு பட்டியல்!

கர்நாடகா : மகாத்மா காந்தி, டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் பற்றிய பாடங்கள் நீக்கப்பட்டு ஆர்எஸ்எஸ் சித்தாந்தவாதிகளான விநாயக் சாவர்க்கர் மற்றும் கேபி ஹெட்கேவார் ஆகியோரின் பாடங்கள் பாடப்புத்தகங்களில் சேர்க்கப்பட்டுள்ளன. அசர்ச்சைக்குரிய வலதுசாரி சொற்பொழிவாளர் ரோஹித் சக்ரதீர்த்தா தலைமையிலான குழுவால் உருவாக்கப்பட்ட பள்ளி பாடப்புத்தகங்களுக்கு எதிராக கர்நாடகாவில் உள்ள முற்போக்கு குழுக்கள் ஏன் போராடுகின்றன? இந்த நூல்களில் எந்தெந்தப் பிரிவுகள் திரிக்கப்பட்டிருக்கின்றன, எந்தெந்தப் பகுதிகள் காவி மையமாக்கப்பட்டுள்ளன, எந்த முற்போக்குக் கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன? சர்ச்சை தொடங்கியதில் இருந்து முதன்முறையாக, […]

Activists BJP Dalits Karnataka

தலித் எழுத்தாளரின் கவிதையை பாடப்புத்தகங்களில் இருந்து கைவிட கர்நாடகா பாஜக அரசு முடிவு!

கர்நாடகாவில் பாடநூல் திருத்தம் தொடர்பான சர்ச்சை தொடர் கதையாகி உள்ளது. சூரியனும் சந்திரனும் கடவுள் இல்லை என கூறும் பிரபல தலித் எழுத்தாளர் ஒருவரின் கவிதையை கைவிட ஆளும் பாஜக உத்தரவிட்டுள்ளது. இந்த நடவடிக்கை சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த சித்தலிங்கய்யாவின் “பூமி” கவிதையை நான்காம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இருந்து நீக்கி கர்நாடக கல்வி அமைச்சர் பிசி நாகேஷ் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மத உணர்வுகளை புண்படுத்தியதாக கவிதைக்கு எதிராக எழுந்த புகார்களை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை […]

Dalits Rajasthan

ராஜஸ்தான்: தலித் சமூகத்தவர் திருமண ஊர்வலத்தின் போது சாதி ரீதியாக அவதூறு கூறி ரகளை !

கோட்டா (ராஜ்): ராஜஸ்தானின் கோட்டாவில், தலித் ஒருவரின் திருமணத்திற்கு முந்தைய ஊர்வலத்தின் போது தலித் வீட்டாரை, ஜாதி ரீதியாக இழிவுபடுத்தும் வகையில் பேசியதற்காகவும், குழப்பத்தை ஏற்படுத்தியதற்காகவும் 21 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (சிஆர்பிசி) பிரிவு 151 இன் கீழ் ஏழு பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர், அவர்களில் சிலர் ஏற்கனவே இந்த வழக்கில் பதிவு செய்யப்பட்டவர்கள் என்று டிஎஸ்பி மற்றும் வட்ட அதிகாரி (சிஓ) பிரவீன் […]

Activists Dalits Gujarat

குஜராத்: தலித் ஆர்டிஐ செயற்பாட்டாளரின் கொலை குறித்து சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பிய ஜிக்னேஷ் இடைநீக்கம் செய்யப்பட்டார்!

குஜராத்: சட்டமன்றத்தில் சபாநாயகர் அனுமதியின்றி தலித் தகவல் அறியும் ஆர்வலர் ஒருவர் கொல்லப்பட்ட விவகாரத்தை பலமுறை எழுப்பியதை அடுத்து, “ஒழுக்கமின்மை” காரணமாக குஜராத்தைச் சேர்ந்த சுயேச்சை எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி, மாநில சட்டமன்றத்தில் இருந்து ஒரு நாள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக சபாநாயகர் ராஜேந்திர திரிவேதியின் உத்தரவின் பேரில் அவர் சட்டமன்றத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். இதே போல கடந்த வியாழக்கிழமையும் இதே காரணத்திற்காக ஜிக்னேஷ் சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்டார். மார்ச் 2 ம் தேதி போலீஸ்ஸார் […]

azad பீம் ராணுவத் தலைவர் சந்திரசேகர்
Dalits Hindutva RSS

நாக்பூர் : ஆர்.எஸ்.எஸ் அலுவலகம் முன்பாக பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் பேரணி நடத்த நீதிமன்றம் அனுமதி!

மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் பெஞ்ச் பீம் ராணுவத் தலைவர் சந்திரசேகர் ஆசாத்தின் பேரணிக்கு இன்று அனுமதி வழங்கி தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த பேரணி நாக்பூரின் ரேஷிம்பாக் பகுதியில் உள்ள ஆர்.எஸ்.எஸ் ஸ்மிருதி மந்திர் முன் சனிக்கிழமை நடைபெற உள்ளது. போலீசார் மறுப்பு: ரஷிம்பாக் மைதானத்தின் உரிமையாளர்களான சிபி & பெரார் எஜுகேஷன் சொசைட்டியிடம் உரிய தொகை வழங்கப்பட்டு முறையான அனுமதியையும் பெற்ற பிறகு ஆசாத்தின் பேரணி சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என கூறி உள்ளூர் கோட்வாலி […]

திருட முயற்சித்ததாக கூறி தலித் இளைஞர்களின் மறைவுறுப்பில் பெட்ரோல் ஊற்றி, ஸ்க்ரூ ட்ரைவர் செலுத்தி சித்திரவதை ..
Dalits Rajasthan

திருடியதாக கூறி தலித் இளைஞர்களின் மறைவுறுப்பில் பெட்ரோல் ஊற்றி, ஸ்க்ரூ ட்ரைவர் செலுத்தி சித்திரவதை ..

ராஜஸ்தான்: கடந்த ஞாயிற்று கிழமையன்று ராஜஸ்தான் மாநிலத்தின் நகவ்ர் மாவட்டத்தில் உள்ள இரண்டு சக்கர வாகனம் விற்கும் ஷோரூம் ஒன்றில் 2 தலித் சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் பணம் திருட முயற்சித்ததாக கூறி ஷோரூமில் வேலை பார்க்கும் நபர்கள் கொடூரமாக தாக்கி, அவரது அந்தரங்க உறுப்புகளில் பெட்ரோல் மற்றும் சுகுரூ ட்ரைவரை செலுத்தி சித்திரவதை செய்துள்ளனர்.இந்த கொடூர சம்பவம் பெட்ரோல் பங்கில் நடந்துள்ளது. இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனதை அடுத்தும், தாக்கப்பட்ட இரு […]

தலித் இளைஞர் விழுப்புரம் கொலை வன்னியர்
Dalits Tamil Nadu

தலித் சமூகத்தை சேர்ந்த இளைஞர் கும்பல் படுகொலை; தடுக்க முயன்ற அவரது தங்கையை குழந்தையுடன் எட்டி மிதித்த மிருகங்கள்!

விழுப்புரம் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் தலித் சமூகத்தை சேர்ந்த 24 வயதான சக்திவேல் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் மேல்ஜாதி என்று தங்களை அழைத்து கொள்ளும் ஒருவருக்கு சொந்தமான வயலில் இயற்கை தேவையை நிறைவேற்றியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவரை பிடித்து அடித்தே கொன்றுள்ளது ஒரு வெறிபிடித்த கும்பல். இந்த கொடூர சம்பவம் புதன்கிழமை நடைபெற்றுள்ளது, இளைஞர் தாக்கப்படுவது தொடர்பான வீடியோக்கள்வைரல் ஆனது. அதற்கு பிறகு வெள்ளிக்கிழமையன்று போலீசார் 7 பேரைக் கைது செய்து, மேலும் […]

stop rape
Crimes Against Women Dalits Gujarat

குஜராத்: தலித் இளம்பெண்(19) கற்பழித்து கொலை – 4 பேர் கும்பல் அராஜகம் !

கண்டுகொள்ளாத மீடியா: குஜராத்தின் மொடாசாவில் உள்ள சைரா கிராமத்தில் 19 வயது தலித் சமூக பெண் ஒருவரை கடத்தி, கும்பல் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி, கொலை செய்து, பெண்ணை ஆலமரத்தில் தூக்கிலிட செய்துவிட்டு சென்றுள்ள சம்பவம் இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தவில்லை. எனவே தான் இது குறித்த செய்தி எந்த தொலைக்காட்சியிலும் முக்கியத்துவத்துடன் காண்பிக்கப்படவும் இல்லை. அலைக்கழித்த போலீஸ்: கடந்த ஜனவரி ஒன்றாம் தேதி , எங்கள் வீட்டு பெண் எங்கு தேடியும் காணவில்லை என […]

dalits embrace islam
Dalits Muslims

3000 பேர் இஸ்லாத்தை தழுவ முடிவு! தீண்டாமை சுவர்|நாகை திருவள்ளுவன் கைது எதிரொலி !

தமிழ்ப் புலிகள் கட்சியின் சார்பில் கோவை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மேட்டுப்பாளையம் சங்கர் நகர் பகுதியில் 22.12.19அன்று காலை நடைபெற்றது. இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. கோவை மாவட்டத்தில் தீண்டாமை கொடுமைகள் தலைவிரித்தாடுகிறது. மேட்டுப்பாளையம் நடூர் பகுதியில் தீண்டாமை சுவற்றினால் 17 அப்பாவி தலித்துகள் பலியாகினர். காரணமானவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் நீதிக்காக போராடிய தோழர்கள் கைது செய்யப்பட்டனர். தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் நாகை.திருவள்ளுவன் மீது தாக்குதல் நடத்தி இன்று வரையிலும் […]

pa ranjith
Dalits Tamil Nadu

மேட்டுப்பாளையம் : ‘சாதி உணர்வால் கட்ட பட்ட சுவர்’ – பா.ரஞ்சித் விளாசல் !

கோவை மேட்டுப்பாளையத்தில் தீண்டாமைச் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் கடுமையான கண்டனங்களை பதிவு செய்துள்ளார்.

Thirumavalavan condemns
Dalits Tamil Nadu

மேட்டுப்பாளையத்தில் உயிரிழப்புக்குக் காரணமான குற்றவாளியைக் கைதுசெய்! – திருமாவளவன் கண்டன அறிக்கை!

மேட்டுப்பாளையம் நடூர் ஏடி காலனியில் சுவர் இடிந்து 17 பேர் மரணம்- உயிரிழப்புக்குக் காரணமான குற்றவாளியைக் கைதுசெய் ! உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா 25 லட்சம் இழப்பீடு வழங்கு தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்!~~~~~~~கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நடூர் ஏடி காலனியைச் சேர்ந்த தலித் மக்கள் 17 பேர் சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்துள்ளனர். இதற்குக் காரணமான சிவசுப்பிரமணியன் என்பவரை உடனடியாக எஸ்சி எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்ய வேண்டும்; உயிரிழந்த […]

mettupalayam death
Dalits Tamil Nadu

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து பலியாகியுள்ள 17 பேரின் மரணத்திற்கு நீதி வேண்டும்! – மே 17 இயக்கம்

அமைதியாகப் போராடிய தமிழ்ப் புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன் அவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை காவல்துறை செய்திருக்கிறது. நீதி கேட்டுப் போராடியவர்கள் மீது காவல்துறை ஏவியுள்ள அராஜகத்தினை மே பதினேழு இயக்க வன்மையாக கண்டிக்கிறது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள நடூர் ஏ.டி காலனி பகுதியில் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட மக்களின் குடியிருப்புப் பகுதி இருக்கிறது. அந்த குடியிருப்பின் அருகில் துணிக்கடை உரிமையாளர் ஒருவரின் வீடு இருக்கிறது. பக்கத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் குடியிருப்பு இருப்பதால், […]

dalit man
Dalits Punjab

பஞ்சாப் : தலித் ஒருவரை தாக்கி சிறுநீர் குடிக்கவைக்கப்பட்ட கொடூரம்!

பஞ்சாபின் சங்ரூர் மாவட்டத்தில் 37 வயதான தலித் நபர் ஒருவரை பழைய தகராறு ஒன்றின் காரணமாக இழுத்து சென்ற சிலர் அவரை கடுமையாக தாக்கியும், கட்டாயப்படுத்தி சிறுநீர் குடிக்கவும் வைத்துள்ள கொடூரம் அரங்கேறியுள்ளது. சங்கலிவாலா கிராமத்தைச் சேர்ந்த ஜக்மைல் சிங் கடந்த நவம்பர் 7 ஆம் தேதி தனது வீட்டில் இருந்து இரண்டு நபர்களால் அழைத்துச் செல்லப்பட்டதாக துணை போலீஸ் சூப்பிரண்டு (டிஎஸ்பி) பூட்டா சிங் தெரிவித்துள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் சாங்குலிவாலா கிராமத்தில் வசிக்கும் ரிங்கு, அமர்ஜீத் […]