Karnataka Lynchings Muslims

கர்நாடகா: பள்ளிவாசலில் உறங்கி கொண்டிருந்த இமாம் மீது கொலைவெறி தாக்குதல் !

செவ்வாய்க்கிழமை இரவு மங்களூருவுக்கு அருகிலுள்ள கர்நாடகாவின் ஃபாரங்கிப்பேட்டே எனும் நகரில் பள்ளிவாசல் இமாம் ஒருவர் மீது கொலைவெறி தாக்குதல் நடைபெற்றது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தாக்கப்பட்ட இமாம் குந்தாபூரில் வசிக்கும் முஷ்தாக் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இரவில் பள்ளிவாசலுக்குள் உறங்கி கொண்டிருந்த நேரத்தில் முஸ்தாக் மீது மூன்று பேர் அடங்கிய ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் சி.சி.டி.வி யில் பதிவாகியுள்ளதாகவும், விசாரணை நடந்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக இமாம் அனுமதிக்கப்பட்டுள்ளார். பன்ட்வால் கிராம காவல் நிலையத்தில் இச்சம்பவம் தொடர்பாக புகார் அளிக்கப்பட்டது. தாக்குதலுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.