Lynchings Madhya Pradesh

ம.பி: 60 வயது பிர்தவ்ஸ் ஹாஜியார் அடித்து கொலை; பாசிச கும்பல் வெறியாட்டம்!

பாஜக ஆளும் மத்தியப்பிரதேச மாநிலம் ஷாஜாபூர் மாவட்டத்திலுள்ளது அகோடியா நகரம், இங்கு வசிக்கும் 60 வயதான முதியவர் பிர்தௌஸ் ஹாஜி, இவர் அங்கு விஷேங்களுக்கு சமையல் செய்யும் தொழில் செய்து வருபவர். சம்பவத்தன்று இருவேறு மதத்தை சேர்ந்த இரு சிறுவர்களுக்கிடையே நடந்த சாதாரண விளையாட்டுச்சண்டை, முதியவர் தாக்கப்பட்டு இறக்கும் அளவிற்கு விபரீதமாகிவிட்டது. கிரிக்கெட் விளையாடுவதில் ஏற்பட்ட சிறு சண்டைக்கு இதை சாக்காக வைத்து முஸ்லிம்களை குறி வைத்து தாக்கியுள்ளது பாசிச கும்பல். இதில் சமபந்தமே இல்லாமல் சமையல் […]

lynching jharkand cow vigilantes
Lynchings Uttar Pradesh

உபி : திருட்டு பட்டம் சுமத்தி ரேஹான், ஷாரூக் மீது கொலைவெறி தாக்குதல்; ஒருவர் பலி !

உபி மாநிலம் பரேலி பகுதியில் வசிப்பவர்கள் ரேஹான் மற்றும் அவரது நண்பர்ஷாருக், சம்பவத்தன்று நந்தன்சிங் என்பவரது வீட்டுச்சுவற்றில் சிறுநீர் கழித்துக்கொண்டிருந்ததை கண்ட நந்தன்சிங்கும் அவரது குடும்பத்தினரும், இருவரும் தங்களது வீட்டிற்கு திருட வந்திருப்பதாக நினைத்து அடித்து உதைக்க தொடங்கியுள்ளனர். அவர்கள் எவ்வளவு சொல்லியும் கேட்காத நந்தன்சிங் குடும்பத்தினர் இருவரையும் வலுவான ஆயுதங்களை கொண்டு தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த ரேஹான், பரேலி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போது மேல் சிகிச்சைக்கு வசதிகள் இல்லை என கூறி மருத்துவர்கள் டெல்லிக்கு அனுப்பி […]

நான் தாக்கப்பட்டபோது பா.ஜ.கவோ, தொலைகாட்சி தொகுப்பாளர்களோ ஏன் கொந்தளிக்கவில்லை?- சுவாமி அக்னிவேஷ் கேள்வி!
Hindus Hindutva Lynchings

நான் தாக்கப்பட்டபோது பா.ஜ.கவோ, தொலைகாட்சி தொகுப்பாளர்களோ ஏன் கொந்தளிக்கவில்லை?- சுவாமி அக்னிவேஷ் கேள்வி!

மஹாராஷ்ட்ரா மாநிலம் பல்கர் மாவட்டத்தில் சமீபத்தில் கலவரக்கும்பலால் மூன்று பேர் கொல்லப்பட்ட சம்பவம் பா.ஜ.க மற்றும் வலதுசாரி சிந்தனை கொண்டவர்களால் கடுமையாக கண்டித்து கூப்பாடு போடப்பட்டது. கொல்லப்பட்ட மூவரில் இருவர் வாரணாசியில் உள்ள ஒரு அகாராவைச் சேர்ந்த சாதுக்கள் என்பதை மையமாக வைத்து பா.ஜ.க மற்றும் சில தொலைக்காட்சி தொகுப்பாளர்களான வலதுசாரி மதவெறியர்கள் இந்த கொலைக்கு மதசாயம் பூசி மதகுரோதத்தை வளர்க்க முயற்சிக்கிறார்கள். இத்தனைக்கும் இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 100க்கும் மேற்பட்டோர் அத்தனை பேரும் சங்பரிவாரால் இந்து […]

ஜார்கண்ட்: அன்சாரி மீது கும்பல் வன்முறை தாக்குதல்; உடம்பில் ஒட்டுத்துணியின்றி அழைத்து சென்ற போலீஸ்!
Islamophobia Jharkand Lynchings Muslims

ஜார்கண்ட்: அன்சாரி மீது கும்பல் வன்முறை தாக்குதல்; உடம்பில் ஒட்டுத்துணியின்றி அழைத்து சென்ற போலீஸ்!

கடந்த ஆண்டு பாஜக ஆட்சியில் இருந்த சமயம், ஜார்க்கண்டில் மிருகத்தனமாக இந்துத்துவாவினரால் தாக்கப்பட்டு உயிரிழந்த தப்ரேஸ் அன்சாரியின் கொடூர கும்பல் வன்முறை சம்பவமே இன்னும் நினைவில் இருந்து நீங்காத நிலையில் ஜார்கண்டில் மீண்டும் அதே போன்ற ஒரு கொடூர சம்பவம் அரங்கேறி உள்ளது. இது குறித்து பிரபல ஊடகமான ‘தி குவின்ட‘ செய்தி வெளியிட்டுள்ளது. ராஜூ அன்சாரி என்ற நபர் திருட்டு பட்டம் சுமத்தப்பட்டு ஹசாரிபாகின் கிட்டி என்ற இடத்தில் தாக்கப்படுகிறார். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தடைந்ததும், […]

ராஜஸ்தான்: முஸ்லிம் என்பதால் கர்ப்பிணிக்கு சிகிச்சை அளிக்க மறுத்த அரசு மருத்துவர், குழந்தையை பறிகொடுத்த தாய்
Islamophobia Muslims Rajasthan

ராஜஸ்தான்: முஸ்லிம் என்பதால் கர்ப்பிணிக்கு சிகிச்சை அளிக்க மறுத்த அரசு மருத்துவர், உயிரிழந்த குழந்தை..

ராஜஸ்தானின் பரத்பூர் மாவட்டத்தில் ஒரு முஸ்லீம் பெண்ணுக்கு அவர் முஸ்லீம் என்ற காரணத்திற்காக அரசாங்க மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்ததால், மருத்துவமனையை விட்டு வெளியேறிய அந்தப் பெண் குழந்தையை ஆம்புலன்சிற்குள் பிரசவித்தார், எனினும் குழந்தை பிறந்த உயிர் இழந்தது. மருத்துவமனையில் பிரசவம் பார்க்கப்பட்டு இருந்தால் குழந்தையின் உயிரை காப்பாற்றி இருக்கலாம் என்கின்றனர் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள். அந்தப் பெண்ணின் கணவர் இர்பான் கான் கூறுகையில் “எனது மனைவி குழந்தையை பிரசவிக்க வேண்டிய நேரம் வந்தது . நாங்கள் சிக்ரியிலிருந்து […]

டில்லி இனப்படுகொலை: "எனது கழுத்தில் கயிறை கட்டி, குப்பை கிடங்கில் வீசி சென்றனர்"
Delhi Pogrom Lynchings Muslims

டில்லி இனப்படுகொலை: “எனது கழுத்தில் கயிறை கட்டி, குப்பை கால்வாயில் வீசி சென்றனர்”

கீழே தரப்பட்டுள்ளது சர்வதேச ஊடகமான வைஸ் நியூஸ் ஆக்கத்தின் மொழிபெயர்ப்பு .. புது தில்லியின் தெருக்களில் துணி விற்பவர் இம்ரான் கான். வியாபாரம் முடித்து விட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, ஒரு கும்பல் அவரைத் தடுத்து அவரது பெயரைக் கேட்டது. அவர் இம்ரான் என -எளிதாக அடையாளம் காணக்கூடிய முஸ்லீம் பெயரை- கூறியவுடன் பனிரெண்டுக்கும் அதிகமான நபர்கள் அவரை இரும்பு கம்பிகள், சுத்தியல்கள் மற்றும் கம்புகளால் கொடூரமாக தாக்கியுள்ளனர்.. அதிக அளவில் இந்துக்கள் வசிக்கும் சிவ் […]

"வெளிமாநிலத்தில் இருந்து 2000 நபர்கள் வரவழைக்கப்பட்டு டெல்லி வன்முறை நிகழ்த்தப்பட்டுள்ளது" - டெல்லி சிறுபான்மை ஆணைய தலைவர்
Delhi Hindutva Lynchings Muslims

“வெளிமாநிலத்தில் இருந்து 2000 நபர்கள் வரவழைக்கப்பட்டு டெல்லி வன்முறை நிகழ்த்தப்பட்டுள்ளது” – டெல்லி சிறுபான்மை ஆணைய தலைவர்

“1,500 முதல் 2,000 நபர்கள் வெளி மாநிலத்தில் இருந்து வடகிழக்கு டெல்லிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். 24 மணி நேரம் அவர்கள் தங்கவைக்கப்பட்டு, திட்டமிட்ட ஒரு வன்முறை சம்பவத்தை அவர்கள் கட்டவிழித்து விட்டுள்ளனர்” என பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த பிறகு தில்லி சிறுபான்மை ஆணையத்தின் தலைவர் ஜபருல் இஸ்லாம் தெரிவித்துள்ளார். எங்கள் கள ஆய்வின் முடிவில் இது திட்டமிடப்பட்ட வன்முறை சம்பவம் என்பது தெளிவாகியுள்ளது. வெளிமாநிலத்தில் இருந்து பலர் வரவழைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து காவல் துறையினரும் உளவுத்துறையினரும் தான் மேலதிகமாக விசாரணை செய்ய […]

திருட முயற்சித்ததாக கூறி தலித் இளைஞர்களின் மறைவுறுப்பில் பெட்ரோல் ஊற்றி, ஸ்க்ரூ ட்ரைவர் செலுத்தி சித்திரவதை ..
Dalits Rajasthan

திருடியதாக கூறி தலித் இளைஞர்களின் மறைவுறுப்பில் பெட்ரோல் ஊற்றி, ஸ்க்ரூ ட்ரைவர் செலுத்தி சித்திரவதை ..

ராஜஸ்தான்: கடந்த ஞாயிற்று கிழமையன்று ராஜஸ்தான் மாநிலத்தின் நகவ்ர் மாவட்டத்தில் உள்ள இரண்டு சக்கர வாகனம் விற்கும் ஷோரூம் ஒன்றில் 2 தலித் சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் பணம் திருட முயற்சித்ததாக கூறி ஷோரூமில் வேலை பார்க்கும் நபர்கள் கொடூரமாக தாக்கி, அவரது அந்தரங்க உறுப்புகளில் பெட்ரோல் மற்றும் சுகுரூ ட்ரைவரை செலுத்தி சித்திரவதை செய்துள்ளனர்.இந்த கொடூர சம்பவம் பெட்ரோல் பங்கில் நடந்துள்ளது. இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனதை அடுத்தும், தாக்கப்பட்ட இரு […]

காஷ்மீர் இளைஞர் கொலை
Kashmir Lynchings

ராஜஸ்தானில் 17 வயது காஷ்மீரி இளைஞர் கொடூர கொலை !

பிப்ரவரி 5 ம் தேதி இரவு, ராஜஸ்தானின் தலைநகரான ஜெய்ப்பூரில் காஷ்மீர் இளைஞர் ஒருவரை சில குண்டர்கள் கொடூரமாக தாக்கியதில் உயிர் இழந்துள்ளார். குடும்ப பின்னணி : கொல்லப்பட்டவர் காஷ்மீர் பள்ளத்தாக்கின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள குனன்-போஷ்புராவை வசிப்பிடமாக கொண்ட குலாம் மோஹி யு தின் கான் என்கின்ற பாசித் (17) என அடையாளம் காணப்பட்டுள்ளது. பாசித் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். கடந்த ஆண்டு தான் அவரது தந்தை மரணித்துள்ளார். வீட்டில் மூத்தவரான அவருக்கு , […]

delhi caa
Delhi Hindutva Lynchings

டில்லி: சிஏஏ எதிர்ப்பு வாசகம் கொண்ட தொப்பியை அணிந்திருந்த பைசலை மதுபாட்டிலால் தாக்கிய பாசிச கும்பல்

கிழக்கு டெல்லியின் ராணி கார்டன் வட்டாரத்தில் உள்ள ஒரு பொது பூங்காவில் சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு (சிஏஏ) எதிர்ப்பு தெரிவிக்கும் வாசகங்களை கொண்ட தொப்பியை அணிந்திருந்த 22 வயதான முஸ்லீம் இளைஞர் ஒருவர் வெள்ளிக்கிழமை மாலை தாக்கப்பட்டுள்ளார். ‘பாகிஸ்தானுக்கு போ, இந்தியாவில் உனக்கு இடமில்லை ‘ : சம்பவம் நடைபெற்ற அன்று மாலையில் முஹம்மத் பைசல் பூங்காவில் நடந்து கொண்டிருந்துள்ளார். அப்போது பைசலை அணுகிய பாசிச கும்பல் ஒன்று “தலையில் சிஏஏ வுக்கு எதிரான வாசகங்களை […]

கேரளா மாணவர்கள் மீது தாக்குதல் முஸ்லீம்
Hindutva Kerala Lynchings Muslims

கேரளா: ‘மதரஸா மாணவர்களை பாகிஸ்தானுக்கு திரும்ப போ’ என கூறி தாக்கிய தீவிரவாதி கைது!

கேரளாவின் கும்ப்லாவில் உள்ள மதரஸாவில் பயிலும் மாணவர்களான ஹசன் சையத் (13) மற்றும் முனாஸ் (17) ஆகியோர் மீது ‘கிரண்’ என அடையாளம் காணப்பட்ட ஒருவன் தாக்குதல் நடத்தியுள்ளான் . மதரசா மாணவர்கள் தலையில் தொப்பி அணிந்திருந்ததை சகித்து கொள்ள முடியாமல், அவர்கள் வம்புக்கு இழுத்த கிரண், அவர்கள் இருவரையும் நோக்கி ” பாகிஸ்தானுக்கு திரும்ப போ” என கத்தி கொண்டே மாணவர்களை தாக்க துவங்கியுள்ளான். அவ்வழியே சென்ற மக்கள் கிரணை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். […]

amir killed by hindutva terrorists
CAA Hindutva Lynchings

பிஹார் (CAA) : தேசிய கொடியை ஏந்தி போராடிய அமீரை கொடூரமாக கொன்ற பயங்கரவாதிகள்!

“என் மகன் கைகளில் மூவர்ண கொடியை ஏந்தியிருந்தான்; ஆனால் அதற்குகூட அவர்கள் மரியாதை தரவில்லை. மூவர்ண கொடியோடு உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடிய அவனை அவர்கள் கொன்றிருக்கிறார்கள்” என கண்களில் வழிந்தோடும் கண்ணீரை அடக்க முடியாமல் பேசுகிறார் கொல்லப்பட்ட 18 வயது அமீர் ஹஞ்சிலின் தந்தை சுஹைல் அஹமத். கடந்த டிசம்பர் 21-ம் தேதி பிஹார் மாநிலத்தில் CAA வை எதிர்த்து புல்வார் சாரீப் பகுதியில் நடந்த போராட்டத்தில் கலந்துகொண்டார் அமீர். அந்த போராட்டத்தின் போது CAA ஆதரவு […]

tabrez ansari
Forcing Shri Ram Hindutva Lynchings

தப்ரேஸ் அன்சாரி வழக்கில் குற்றவாளிகளுக்கு ஜாமீன்! – அதிர்ச்சியில் குடும்பத்தினர்!

தப்ரேஸ் அன்சாரியை கூட்டுக்கொலை செய்தவர்களுக்கு ராஞ்சி நீதிமன்றம் பெயில் கொடுத்துள்ளது. தப்ரேஸ் அன்சாரி, பாஸிஸ மத வெறியர்களால் கும்பல்கொலை செய்யப்பட்டு ஆறு மாதங்கள் கூட முடிவடையாத நிலையில் அவரை கொலை செய்த குற்றத்திற்காக போலீசாரால் கைது செய்யப்பட்ட 13 கொலையாளிகளில் 12 பேருக்கு பெயில் கொடுத்து விடுதலை செய்துள்ளது ராஞ்சி நீதிமன்றம். இவர்களில் ஐந்து பேருக்கு நேற்று, டிச:10ம் தேதியும், மற்றொருவருக்கு டிச:9ம் தேதியும் பெயில் வழங்கப்பட்டது, மேலும் ஐவருக்கான பெயில் நிலுவையிலுள்ளது அவர்களுக்கும் அடுத்த வாரத்தில் […]

muslim bihar lynching
Bihar Lynchings

கும்பல் வன்முறை : பிஹார் மாநிலத்தில் ஜமால்(30) அடித்து கொலை!

பிஹார் மாநிலம் ஹாஜ்பூர் முபாசில் காவல் நிலையப் பகுதியில் வசிக்கும் ஜமால்(30), திங்கள்கிழமை (11-11-19) மாலை 18 மாடுகளுடன் மேற்குவங்கத்தை நோக்கி தனது சகோதரர் கமல் மற்றும் வேறொரு நபருடன் கொண்டு சென்று கொண்டிருந்தபோது, சாகர் யாதவ் மற்றும் அவரது மூன்று மகன்கள் லாபா பாலத்தை சுற்றி வளைத்து அவர்களிடமிருந்து மிரட்டி பணம் பறிக்கக் முயன்றுள்ளனர். ஆனால் அவர்கள் தர மறுத்துவிட்டனர்.இதனை அடுத்து லத்திகள், மற்றும்  காம்புகளை கொண்டு  கடுமையாக அடித்து, கால்நடைகளை இழுத்து சென்று விட்டனர். முஹம்மத் ஜமாலின் சகோதரர் […]

Lynchings

ஜார்கண்டில் மீண்டும் கும்பல் வன்முறை சம்பவம்!

பொகாரோ:  ஜார்கண்ட் மாநிலத்தின் பொகாரோ பகுதியில் உள்ள சி.சி.எல் கோவிந்த்பூர் காலனியில் உள்ள கார் ஒன்றில் பேட்டரியை திருட வந்ததாக கூறி முபாரக் அன்சாரி மற்றும் அவரது நண்பர் அக்தர் அன்சாரி ஆகிய இருவர் மீதும் கடந்த செவ்வாய்க்கிழமை (5-11-19) அன்று  மூர்க்க கும்பல் நடத்திய கொலைவெறி தாக்குதலில் முபாரக் அன்சாரி என்பவர் அடித்தே கொல்லப்பட்டார். அவரது நண்பர் அக்தர் அன்சாரி  பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார். இது தொடர்பாக போலீசார் வழக்கு […]