Helpline lynching
Hindutva Indian Judiciary Islamophobia Lynchings

கும்பல் வன்முறை (Lynching ) தாக்குதலில் பாதிப்புக்கு உள்ளாகுபவர்களுக்கு உதவும் வகையில் ஹெல்ப்லைன் 1800-3133-60000 அறிவிப்பு!

இந்தியாவில் சமீப காலமாக கும்பல் வன்முறைகளும், காட்டுமிராண்டி தாக்குதலைகளும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் இதை எதிர் கொள்ளும் விதமாக சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட உதவிகளை வழங்குவதற்கும் , இவ்வாறான கும்பல் வன்முறை தாக்குதல்களை ஆவணப்படுத்துவதற்கும் ஒரு உதவித் தொலைபேசி எண்ணை ( ஹெல்ப்லைனை) அறிமுகப்படுத்திஉள்ளனர். தொடர் கும்பல் வன்முறை சம்பவங்களைத் தடுக்க இந்தியாவின் மத்திய மற்றும் மாநில அரசுகள் தவறியதால் இந்த முயற்சி தேவைபடுகிறது என்று இந்தியா முழுவதும் உள்ள சமூக ஆர்வலர்கள் (United […]

Islamophobia Lynchings Uttar Pradesh

பள்ளிவாசல் இமாமின் தொப்பியை கழற்றி எரிந்து ,தாடியை பிடித்து இழுத்து ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று கூற வற்புறுத்தி தாக்கிய கோழை குண்டர்கள் -உபி மாநிலத்தில் தொடரும் காட்டுமிராண்டித்தனம் !

முசாபர்நகரில் பள்ளிவாசல் இமாமாக பணி புரிபவர் இம்லாக்-உர்-ஹ்மான். இவர் தனது கிராமத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது, திடீரென அவரை நெருங்கிய குண்டர்கள் , தொப்பியை கழற்றி எரிந்து , கடுமையாக அவரை தாக்கி, தாடியையும் பிடித்து இழுத்துள்ளனர். பள்ளிவாசல் இமாமின் தாடியை பிடித்து இழுத்து, “ஜெய் ஸ்ரீ ராம்” என்று கோஷமிட கட்டாயப்படுத்தி தாக்கியதர்காக 12 பேர் மீது உத்தரபிரதேச காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளதாக PTI தெரிவித்துள்ளது. கடந்த சனிக்கிழமை(13.7.19) முசாபர்நகர் மாவட்டத்தில் இமாம் தனது மோட்டார் […]

police abdul ghani death rajasthan
Lynchings Rajasthan States News

காவலர் அப்துல் கனி ராஜஸ்தானில்,கொடூர கும்பலால் அடித்து கொலை !

நேற்று (13-7-19) ராஜஸ்தானின் ராஜ்சமண்ட் மாவட்டத்தின் பத்மேலா கிராமத்தில் நில தகராறு வழக்கை விசாரிக்கும் போலீஸ் தலைமை கான்ஸ்டபிள் ஒரு கும்பலால் அடித்து கொல்லப்பட்டார். அடையாளம் தெரியாத நபர்கள் அவரை கட்டைகள் மற்றும் கம்பிகளால் அடித்து விட்டு தப்பி ஓடிவிட்டனர், இதனால் அவர் பலத்த காயமடைந்தார். பின்னர் அவர் உள்ளூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 48 வயதான அப்துல் கனி, நில அபகரிப்பு தொடர்பான வழக்கு விசாரணைக்காக பீம் தொகுதியின் ப்ரார் கிராம பஞ்சாயத்து கிராமத்திற்குச் சென்றிருந்தார். அங்கு […]

Lynchings States News Uttar Pradesh

பஜ்ரங் தள் பாஜகவினர் அட்டூழியம் ! ஜெய் ஸ்ரீராம் கூற மறுத்ததால் மாணவர்கள் மீது உபி. யில் கொலைவெறி தாக்குதல்

உத்தரப் பிரதேச மாநிலத்தின் உன்னாவ் மாவட்டத்தில் உள்ள மதரஸா மாணவர்கள் சிலரை பஜ்ரங் தள் மற்றும் பாஜகவினர் ‘ஜெய்ஸ்ரீராம்’ கோஷமிட கட்டாயப்படுத்தி ஜூலை 11ம் தேதி அடித்து உதைத்ததாக ஜமா மசூதி இமாம் குற்றம்சாட்டியுள்ளார். மாணவர்கள் மீது கொலை வெறி தாக்குதல் ! தொழுகைகளை முடித்து விட்டு மைதானத்தில் 4 மாணவர்கள் விளையாடச் சென்றுள்ளனர். மாணவர்களை ஜெசி ஸ்ரீ ராம் என்று கூறுமாறு கட்டாயபடுத்தி உள்ளனர். ஆனால் மாணவர்கள் கூற மறுத்துள்ளனர் இதனால் ஆத்திரமடைந்த குண்டர்கள் மாணவர்களை […]

Lynchings

ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷமிட சொல்லி 3 முஸ்லிம் இளைஞர்கள் மீது காட்டுமிராண்டிதனமான தாக்குதல்.

ஜார்கண்டில் மீண்டும் வெறி செயல் ! ஜார்கண்ட் மாநில ராஞ்சியில் உள்ள மகாத்மா காந்தி (எம்.ஜி) மார்க்கில் நேற்று (வெள்ளிக்கிழமை 05-07-19) மூன்று முஸ்லிம் இளைஞர்களை “ஜெய் ஸ்ரீ ராம்” என்று கோஷமிடுமாறு கட்டாயப்படுத்தி பின்னர் தாக்கி உள்ளனர். இதை தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவியது. பாதிக்கப்பட்ட இளைஞர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக் கோரி இஸ்லாமிய சமூகத்தார் சர்ச் காம்ப்ளக்ஸ் அருகே எம்.ஜி.மார்கில் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.நிலைமையைக் […]

Lynchings Uttar Pradesh

தப்ரேசுக்கு ஆதரவாக போராடியவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் (NSA ) கீழ் வழக்கு! சொத்துக்களும் பறிமுதல் !

ஜார்க்கண்டில் காட்டுத்தனமாக அடித்து கொல்லப்பட்ட தப்ரேசுக்கு ஆதரவாக போராடியவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் (NSA ) கீழ் வழக்கு பதிவு செய்தும் அவரது சொத்துக்கள் பறிமுதல் செய்தும் நடவடிக்கை எடுத்துள்ளது உ.பியின் பாஜக யோகி அரசாங்கம். சில தினங்களுக்கு முன்னர் தப்ரேஸ் அன்சாரி என்பவரை திருடர் என்று ஆதாரமின்றி கூறியும் அவரை ஜெய் ஸ்ரீ ராம் என்று கூற கட்டாயப்படுத்தியும் கொடூரமாக தாக்கி கொலை செய்தனர். இந்த வன்முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒரு சில தினங்களுக்கு […]

gau rakshaks cow terrorists
Lynchings West Bengal

மேற்கு வங்கத்தில் ஜெய் ஸ்ரீ ராம் கூற மறுத்ததால் 5 முஸ்லிம் இளைஞர்களை கடுமையாக தாக்கிய கயவர்கள்.

Published: 3.7.2019 (7.40pm) மேற்கு வங்கத்தில் உள்ள கரன்திகி எனும் ஊரில் ஐந்து முஸ்லிம் இளைஞர்கள் நேற்று 02-07-2019 (செவ்வாய்க் கிழமையன்று) கிராமத்திலிருந்த குட்டையில் மீன் பிடிக்க சென்றிருந்தனர். அங்கு வந்த பாஜக கட்சியை சேர்ந்த ஒரு கும்பல் அவர்களை மாட்டு கொள்ளையர்கள் என்று கூறியும் , ஜெய் ஸ்ரீராம் என்று கோஷம் எழுப்ப வற்புறுத்தியும் கடுமையாக தாக்கி உள்ளனர். இது குறித்து வடக்கு தினாஜ்ப்பூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு ஆளான ஐவரில் […]

child rape rajasthan
Rajasthan Rape States News

இராஜஸ்தானில் இமாமின் 7 வயது சிறுமியை பலவந்தமாகக் கடத்திச் சென்று கற்பழித்த கொடூரம்!

Published : 3-07-2019 : 10:44am (1-07-2019) திங்கள் இரவு 8 மணி அளவில் மோட்டார் சைக்கிள் வாகனத்தில் வந்த ஒருவன் சிறுமியை கடத்தி சென்று அருகில் இருந்த ஒரு இடத்தில் அந்த சிறுமியை பலவந்தமாக கற்பழித்ததாக போலீசார் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தனர். 2 மணி நேரமாக குழந்தையை தேடித் தவித்த பெற்றோர் ஒரு கட்டத்தில் திங்கள் (நேற்று) இரவு தங்கள் வீட்டிலிருந்து 10 – 15 கிலோமீட்டர் தொலைவில் , சிறுமியின் தலையில் இரத்தம் வழிந்து […]

tabrez ansari
Lynchings States News Uttar Pradesh

தப்ரேஸ் அன்சாரியின் கொடூர தாக்குதலை கண்டித்து, நீதி கேட்டு போராடிய மக்கள் மீது லத்தி சார்ஜ் செய்து , 850 நபர்கள் மீது FIR பதிவு செய்த யோகி ஆதித்யநாத் அரசாங்கம்

கடந்த சில தினங்களாக தப்ரேஸ் அன்சாரி என்ற இளைஞரை கொடூரமாக அடித்துக் கொலை செய்ததை கண்டிக்கும் விதமாக நாட்டில் பல்வேறு பகுதிகளில் அமைதியான போராட்டங்கள் நடந்து வருகின்றன. Dharna going on in front of Raj Bhavan, Ranchi, Jharkhand. Ex Rajya Sabha MP Ali Anwar Ansari also sitting there with hundreds others. #IndiaAgainstLynchTerror @cjwerleman @vijaita @kawalpreetdu @imMAK02 @imMAK02 @nadeemkhanUAH pic.twitter.com/O1olQwiUJw — Khalid Saifi (@KSaifi) […]

west bengal lynching
Islamophobia Lynchings States News West Bengal

மீண்டும் பயங்கரம்! 24 வயது இஸ்லாமிய இளைஞர் பைக் திருடி விட்டதாக கூறி மேற்கு வங்கத்தில் அடித்துக் கொலை!

தப்ரேஸ் அன்சாரி என்ற முஸ்லிம் இளைஞரை கொடூரமாக தாக்கி கொலை செய்த சம்பவம் சம்பவம் ஏற்படுத்திய அதிர்வலைகள் ஓயாத நிலையில் மேற்கு வங்கத்தில் உள்ள மால்டா எனும் மாவட்டத்தில் மேலும் ஒரு காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் அரங்கேறியுள்ளது. சனாவுல்லா ஷெய்க் இன்று 24 வயதான முஸ்லிம் இளைஞரை பைக் திருடி விட்டார் என்று குற்றம் சுமத்தி கடந்த வெள்ளி கிழமை அடித்தே கொன்று உள்ளனர். ஆனால் அவர் பைக் திருடியதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை. மாறாக கொலைகார […]

news lynching
Lynchings Rajasthan States News

காட்டுத்தனமாக அடித்துக் கொல்லப்பட்ட பெஹ்லுகான் மற்றும் அவரின் மகன்கள் மீதே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த காங்கிரஸ் அரசாங்கம்

Date: 29/6/2019 2:05 pm கடந்த 2017 ஆம் ஆண்டு, ஏப்ரல் 5 ஆம் தேதி 55 வயதான பெஹ்லு கான் மற்றும் அவரது மகன்கள் பசு காவலர்கள் என்று தங்களை அழைத்து கொள்ளும் பயங்கரவாதிகளால்  பசுக்களை கடத்தி செல்வதாக பொய்யாக பரப்பி    காட்டுமிராண்டி தனமாக அடித்து உதைத்தனர். இதில் பெஹலு கான் அடுத்த 2 நாட்களில் இறந்து போனார். கடுமையான காயங்களுடன்அவரின் மகன்கள் உயிர் பிழைத்தனர். தற்போது காங்கிரஸ் ஆட்சி செய்யும் ராஜஸ்தான் மாநிலத்தில் பாதிப்புக்கு […]