Dalits Muslims

3000 பேர் இஸ்லாத்தை தழுவ முடிவு! தீண்டாமை சுவர்|நாகை திருவள்ளுவன் கைது எதிரொலி !

தமிழ்ப் புலிகள் கட்சியின் சார்பில் கோவை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மேட்டுப்பாளையம் சங்கர் நகர் பகுதியில் 22.12.19அன்று காலை நடைபெற்றது. இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

கோவை மாவட்டத்தில் தீண்டாமை கொடுமைகள் தலைவிரித்தாடுகிறது. மேட்டுப்பாளையம் நடூர் பகுதியில் தீண்டாமை சுவற்றினால் 17 அப்பாவி தலித்துகள் பலியாகினர். காரணமானவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் நீதிக்காக போராடிய தோழர்கள் கைது செய்யப்பட்டனர். தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் நாகை.திருவள்ளுவன் மீது தாக்குதல் நடத்தி இன்று வரையிலும் சிறையிலிருந்து வருகிறார். ஆக தாழ்த்தப்பட்ட மக்கள் தாக்கப்பட்டால் கேட்பதற்கு நாதியற்ற நிலை நிலவிவருவதால் தலித் மக்களின் பாதுகாப்பினை முன்னிட்டும்.

சுயமரியாதையை தேடியும் வருகின்ற ஜனவரி மாதம் 5 ஆம் நாளில் தமிழ்ப் புலிகள் கட்சியின் குடும்பத்தினர் சுமார் மூவாயிரம் பேர்கள் இந்து மதத்திலிருந்து வெளியேறி இஸ்லாத்தை தழுவுவதென முடிவெடுக்கப்பட்டது.

தொடர்புக்கு : முத்துகுமார் 8610852511

முன்னதாக 2010ம் ஆண்டில் இது போன்ற தமிழ் புலிகள் அமைப்பைச் சார்ந்தவர்கள் 100 பேர் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்கள் என்பது குறிபிடத்தக்கது.