dalits embrace islam
Dalits Muslims

3000 பேர் இஸ்லாத்தை தழுவ முடிவு! தீண்டாமை சுவர்|நாகை திருவள்ளுவன் கைது எதிரொலி !

தமிழ்ப் புலிகள் கட்சியின் சார்பில் கோவை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மேட்டுப்பாளையம் சங்கர் நகர் பகுதியில் 22.12.19அன்று காலை நடைபெற்றது. இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. கோவை மாவட்டத்தில் தீண்டாமை கொடுமைகள் தலைவிரித்தாடுகிறது. மேட்டுப்பாளையம் நடூர் பகுதியில் தீண்டாமை சுவற்றினால் 17 அப்பாவி தலித்துகள் பலியாகினர். காரணமானவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் நீதிக்காக போராடிய தோழர்கள் கைது செய்யப்பட்டனர். தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் நாகை.திருவள்ளுவன் மீது தாக்குதல் நடத்தி இன்று வரையிலும் […]

pa ranjith
Dalits Tamil Nadu

மேட்டுப்பாளையம் : ‘சாதி உணர்வால் கட்ட பட்ட சுவர்’ – பா.ரஞ்சித் விளாசல் !

கோவை மேட்டுப்பாளையத்தில் தீண்டாமைச் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் கடுமையான கண்டனங்களை பதிவு செய்துள்ளார்.

Thirumavalavan condemns
Dalits Tamil Nadu

மேட்டுப்பாளையத்தில் உயிரிழப்புக்குக் காரணமான குற்றவாளியைக் கைதுசெய்! – திருமாவளவன் கண்டன அறிக்கை!

மேட்டுப்பாளையம் நடூர் ஏடி காலனியில் சுவர் இடிந்து 17 பேர் மரணம்- உயிரிழப்புக்குக் காரணமான குற்றவாளியைக் கைதுசெய் ! உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா 25 லட்சம் இழப்பீடு வழங்கு தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்!~~~~~~~கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நடூர் ஏடி காலனியைச் சேர்ந்த தலித் மக்கள் 17 பேர் சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்துள்ளனர். இதற்குக் காரணமான சிவசுப்பிரமணியன் என்பவரை உடனடியாக எஸ்சி எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்ய வேண்டும்; உயிரிழந்த […]

mettupalayam death
Dalits Tamil Nadu

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து பலியாகியுள்ள 17 பேரின் மரணத்திற்கு நீதி வேண்டும்! – மே 17 இயக்கம்

அமைதியாகப் போராடிய தமிழ்ப் புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன் அவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை காவல்துறை செய்திருக்கிறது. நீதி கேட்டுப் போராடியவர்கள் மீது காவல்துறை ஏவியுள்ள அராஜகத்தினை மே பதினேழு இயக்க வன்மையாக கண்டிக்கிறது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள நடூர் ஏ.டி காலனி பகுதியில் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட மக்களின் குடியிருப்புப் பகுதி இருக்கிறது. அந்த குடியிருப்பின் அருகில் துணிக்கடை உரிமையாளர் ஒருவரின் வீடு இருக்கிறது. பக்கத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் குடியிருப்பு இருப்பதால், […]

dalit man
Dalits Punjab

பஞ்சாப் : தலித் ஒருவரை தாக்கி சிறுநீர் குடிக்கவைக்கப்பட்ட கொடூரம்!

பஞ்சாபின் சங்ரூர் மாவட்டத்தில் 37 வயதான தலித் நபர் ஒருவரை பழைய தகராறு ஒன்றின் காரணமாக இழுத்து சென்ற சிலர் அவரை கடுமையாக தாக்கியும், கட்டாயப்படுத்தி சிறுநீர் குடிக்கவும் வைத்துள்ள கொடூரம் அரங்கேறியுள்ளது. சங்கலிவாலா கிராமத்தைச் சேர்ந்த ஜக்மைல் சிங் கடந்த நவம்பர் 7 ஆம் தேதி தனது வீட்டில் இருந்து இரண்டு நபர்களால் அழைத்துச் செல்லப்பட்டதாக துணை போலீஸ் சூப்பிரண்டு (டிஎஸ்பி) பூட்டா சிங் தெரிவித்துள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் சாங்குலிவாலா கிராமத்தில் வசிக்கும் ரிங்கு, அமர்ஜீத் […]

dalit tamil nadu
Dalits

பள்ளிக்கூடத்தில சாதி வெறியா???

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம் பாலமேடு அருகே மறவப்பட்டி காலனி சேர்ந்த தலித் மாணவன் சரவணகுமார் பாலமேடு அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறான் Download our android app http://bit.ly/2nOa5Wp 11 10 2019 இன்று மாலை சரவணகுமார் உடன் படிக்கும் மாணவன்மோகன்ராஜ் பள்ளி பையை மகா ஈஸ்வரன் என்ற மாணவன் எடுத்து மறைத்து வைத்துக் கொண்டு தேட வைத்துள்ளனர் இதை சரவணகுமார் மோகன்ராஜ் மேற்படி மகேஸ்வரனை தட்டிக் கேட்டுள்ளனர் இதனால் ஆத்திரமடைந்த மகா […]

Crimes against Children Dalits Lynchings

திறந்த வெளியில் மலம் கழித்ததாக கூறி தலித் சிறுவர்கள் 2 பேர் அடித்துக்கொலை! -மத்திய பிரதேசத்தில் அரங்கேறிய கொடூரம்!

செப்டம்பர் 25 புதன்கிழமை அன்று மத்திய பிரதேசத்தின் சிவ்புரி மாவட்டத்தில் உள்ள பஞ்சாயத்து கட்டிடத்தின் அருகே மலம் கழித்ததற்காக இரண்டு தலித் சமூகத்து சிறார்கள் அடித்து கொல்லப்பட்டுள்ளனர். இந்த 2 சிறார்கள் வீட்டிலும் கழிப்பறை வசதி இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது .அதற்கு காரணமும் மேல் ஜாதியினர் தான். யாதவ் தரப்பினர் பலியான குழந்தைகளின் வீடுகளில் கழிப்பறை கட்டுவதற்கு தடை விதித்துள்ளனர். இந்த குற்றத்திற்காக இரண்டு சகோதரர்களை போலீசார் கைது செய்துள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் […]

christian tribal beaten to death
Dalits Lynchings Rajasthan

ராஜஸ்தானில் ‘பம்ப்’ திருடியதாக கூறி தலித் ஒருவர் அடித்து கொலை !

துலிச்சந்தின் தந்தையிடம் திருட்டு குறித்து தன்வாரும் அவரது மகன்களும் வெள்ளிக்கிழமை புகார் அளித்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து துலிச்சந்த்தின் தந்தை மகனை கண்டித்து மட்டுமில்லாமல் தன்வாரிடம் போலீசில் புகாரி அளிக்குமாறும் தெரிவித்துள்ளார்.

dalit
Dalits

தலித் ஒருவரின் உடலை தகனம் செய்ய வழிவிடாததால் ’20 அடி உயர பாலத்திலிருந்து’ உடல் இறக்கி தகனம் !-அதிர்ச்சி வீடியோ.

மேல் சாதியினர் என்று கருதப்படுபவர்கள் சடலங்களை அந்தப் பகுதி வழியாக எடுத்துச் செல்லபடுவதை விரும்பாததால் கடந்த 4 ஆண்டுகளாக இவ்வாறு தான் செய்துவருகிறார்களாம் !..

Dalits

டில்லியில் 500 ஆண்டு கால பழமைவாய்ந்த தலித் சமூகத்தினர் கோயில் இடிப்பு- தலித் அமைப்புகள் போராட்டம்!

“கோயிலை மாற்று இடத்தில் கட்டும்படி அவர்கள் எங்களிடம் கூறுகிறார்கள் . அப்படியானால் அவர்கள் ஏன் ராமர் கோயிலை வேறு இடத்திற்கு மாற்றக்கூடாது?”…

gang rape
Dalits Rajasthan Rape

9 போலீசாரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட தலித் பெண்-ராஜஸ்தானில் அரங்கேறிய கொடூரம்!

ராஜஸ்தான் மாநில சுரு(churu) என்ற நகரத்தில் தலித் சமூகத்தை சேர்ந்த பெண் ஒருவர் பல நாட்களாக 9 போலீசாரால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து நடந்த சம்பவங்களை முழுமையாக அறிந்தால் நெஞ்சம் அதிர்ந்து போகும். ஆனால் இந்த செய்தி பெருமளவில் (22ஜூலை நிலவரப்படி) வெளியே கூட தெரியாமல் மறைத்து வைக்கப்பட்டுள்ளது. தி வயர் செய்தி நிறுவனத்திடம் பேசிய பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர், ஜூன் 30 அன்று ஆறு மாதத்திற்கு முன்னர் நடந்த திருட்டு […]