BJP Gujarat

குஜராத்: 35% கட்டிடங்கள் சட்டவிரோதமானவை என ஆய்வில் தகவல்!

8, 320 கட்டிட உள்ளீடுகளை கொண்டு மேற்கொள்ளப்பட்ட மாதிரி ஆய்வில் குஜராத்தில் கிட்டத்தட்ட 35% கட்டமைப்புகள் கட்டிட-பயன்பாட்டு (BU) அனுமதிகள் இல்லாமல் இருப்பதாக தெரிய வந்துள்ளது. ஜனவரியில் தொடங்கிய இந்த கணக்கெடுப்பு மாநகராட்சிகள் மற்றும் நகரபாலிகாக்கள் (நகராட்சிகள்) முழுவதிலும் நடத்தப்பட்டது. குஜராத்தின் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் மூன்று மாதக் கணக்கெடுப்பின் முடிவில், மாநிலத்தில் கிட்டத்தட்ட 35% கட்டிடக் கட்டமைப்புகள் சட்டத்திற்குப் புறம்பானது, ஏனெனில் அவை கட்டிட பயன்பாட்டு (BU) அனுமதிகள் இல்லாதவை என்று குறிப்பிட்டுள்ளது. இந்த கணக்கெடுப்பின் […]

Asadudin Owaisi Muslims Uttar Pradesh Yogi Adityanath

உபி: முதல்வர் ஆதித்யானத்தை விரமர்சித்ததாக கூறி 19 வயது அக்ரம் கைது !

பெயிண்டர் அக்ரம் அலியின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் குறித்து போலீசார் தாமாக முன்வந்து, அவர் மீது “பகைமையை ஊக்குவித்தல், மதத்தை அவமதிக்கும் நோக்குடன் செயல்படல் மற்றும் வேண்டுமென்றே அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படல்” ஆகிய குற்றங்களை அக்ரம் மீது சுமத்தி அவரை கைது செய்துள்ளனர். புதுடெல்லி: சமூக வலைதளங்களில் உபி முதல்வர் ஆதித்யநாத்துக்கு எதிராக ஆட்சேபனைக்குரிய கருத்துகளை தெரிவித்ததாக கூறி 19 வயது இளைஞனை உத்தரபிரதேச போலீசார் ஜூன் 13ம் தேதி திங்கள்கிழமை கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட […]

Activists BJP Dalits Karnataka

தலித் எழுத்தாளரின் கவிதையை பாடப்புத்தகங்களில் இருந்து கைவிட கர்நாடகா பாஜக அரசு முடிவு!

கர்நாடகாவில் பாடநூல் திருத்தம் தொடர்பான சர்ச்சை தொடர் கதையாகி உள்ளது. சூரியனும் சந்திரனும் கடவுள் இல்லை என கூறும் பிரபல தலித் எழுத்தாளர் ஒருவரின் கவிதையை கைவிட ஆளும் பாஜக உத்தரவிட்டுள்ளது. இந்த நடவடிக்கை சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த சித்தலிங்கய்யாவின் “பூமி” கவிதையை நான்காம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இருந்து நீக்கி கர்நாடக கல்வி அமைச்சர் பிசி நாகேஷ் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மத உணர்வுகளை புண்படுத்தியதாக கவிதைக்கு எதிராக எழுந்த புகார்களை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை […]

Dalits Rajasthan

ராஜஸ்தான்: தலித் சமூகத்தவர் திருமண ஊர்வலத்தின் போது சாதி ரீதியாக அவதூறு கூறி ரகளை !

கோட்டா (ராஜ்): ராஜஸ்தானின் கோட்டாவில், தலித் ஒருவரின் திருமணத்திற்கு முந்தைய ஊர்வலத்தின் போது தலித் வீட்டாரை, ஜாதி ரீதியாக இழிவுபடுத்தும் வகையில் பேசியதற்காகவும், குழப்பத்தை ஏற்படுத்தியதற்காகவும் 21 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (சிஆர்பிசி) பிரிவு 151 இன் கீழ் ஏழு பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர், அவர்களில் சிலர் ஏற்கனவே இந்த வழக்கில் பதிவு செய்யப்பட்டவர்கள் என்று டிஎஸ்பி மற்றும் வட்ட அதிகாரி (சிஓ) பிரவீன் […]

BJP Corruption

இந்தியா உக்ரைன் இடையிலான ராணுவ ஒப்பந்த ஊழலை புதைத்த மோடி அரசு !

ரபேல் ஊழல் குற்றச்சாட்டை தொடர்ந்து 2018 ஆம் ஆண்டில் மோடி அரசின் மீது உக்ரைன் ராணுவ ஒப்பந்த ஊழல் குறித்த விவகாரம் பெரிய அளவில் ஊடக வெளிச்சம் பெரும் முன்னரே புதைக்கப்பட்டு விட்டது குறித்து தற்போது டிஎம்சி தேசிய செய்தி தொடர்பாளர் சாகேத் கோகலே தனது சமூக ஊடக பக்கங்களில் பதிவு செய்துள்ளார். இந்திய பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகளுக்கு உக்ரைன் ₹17.55 கோடி லஞ்சம் வழங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஊழலை மோடி அரசு எவ்வாறு புதைத்தது: 👇 […]

Did Moeen Ali boycott IPL
Fact Check Fake News

மொயீன் அலி ஐபிஎல்லைப் புறக்கணிக்கப்போவதாக வைரல் ஆகும் ட்வீட் உண்மையா?

முஹம்மத் நபி குறித்து நுபுர் ஷர்மா கூறிய அவதூறான கருத்துக்கு எதிராக இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயீன் அலி தெரிவித்த கருத்து என கூறி, அவரது பெயரில் செயல்படும் போலி ட்விட்டர் கணக்கு ஒன்று ஐபிஎல் கிரிக்கட் போட்டியை புறக்கணிக்கப்போவதாக ட்வீட். @Moeen_Ali18 என்ற ட்விட்டர் பயனர் “இந்தியா தனது அவதூறான அறிக்கைக்கு மன்னிப்பு கேட்கவில்லை என்றால், நான் மீண்டும் எந்த ஒரு கிரிக்கட் போட்டியிலும் விளையாட இந்தியா செல்ல மாட்டேன், ஐபிஎல்லையும் புறக்கணிப்பேன். மேலும் எனது […]

Education

‘பிஎம் ஸ்ரீ பள்ளிகள்’ எனும் காவி கார்ப்பரேட் பாசிச திட்டம் ?

பள்ளிக் கல்வியுடன் திறன் மேம்பாட்டை ஒருங்கிணைப்பது என்ற பெயரில் நவீன குலக் கல்வியை கொண்டு வருகிறார்கள் நாடு முழுவதும் உள்ள மாநில கல்வி அமைச்சர்களின் 2 நாள் தேசிய மாநாடு, குஜராத்தின் காந்தி நகரில் ஜுன் 1 அன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் எதிர்காலத்துக்கு மாணவர்களை முழுமையாக தயார்படுத்தும் விதமாக ‘பிஎம் ஸ்ரீ பள்ளிகள்’ அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இந்த அதிநவீன பள்ளிகள் தேசிய கல்விக் […]

Hate Speech Hindutva Muslims

முஸ்லிம் வெறுப்பு பிரசாரத்தில் முன்னிலை வகிக்கும் ‘ஹிந்துத்துவா பாப்’ இசை பாடல்கள் !

புது தில்லி, இந்தியா – “இன்சான் நஹி ஹோ சாலோ, ஹோ தும் கசாயி; “பஹுத் ஹோ சுகா ஹிந்து முஸ்லிம் பாய் பாய்” – நீங்கள் மனிதர்களே அல்ல, கசாப்புக் கடைக்காரர்கள்; இந்த இந்து-முஸ்லிம் சகோதரத்துவம் எல்லாம் போதும். பாடகர் பிரேம் கிருஷ்ணவன்ஷி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு யூடியூப்பில் வெளியிட்ட ஒரு ‘பஜன்’ (பக்தி பாடல்) பாடல் வரிகள் இவை. சமகால வெறுப்பு அரசியலால் தூண்டப்பட்டு, கிருஷ்ணவன்ஷியின் பாடல் இந்தியாவில் ஒரு புதிய வெகுஜன கலாச்சாரத்தின் […]

Crony Capitalists Indian Economy

அனில் அம்பானிக்கு வெளிநாட்டில் ரூ800 கோடி சொத்துகள் கண்டுபிடிப்பு!

அனில் அம்பானி முன்பு செல்வந்தர்தான் ஆனால் இப்போது அவரிடம் எதுவும் இல்லை என லண்டன் நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர் வாதம் வைத்திருந்த நிலையில் தற்போது அது பொய் என அம்பலம் ஆகியுள்ளது.வெளிநாட்டு நிறுவனங்களின் வங்கி கணக்குகள், பரிவர்த்தனைகளை ஆய்வு செய்ததில், ரூ800 கோடிக்கு மேல் அனில் அம்பானிக்கு சொத்துகள் இருப்பது தெரியவந்துள்ளது. வெளிநாட்டில் முதலீடுகள், கணக்கில் வராத சொத்துகள், இருப்பது உறுதியானதையடுத்து, 2015 கருப்புப் பணச் சட்டத்தின் (பிஎம்ஏ) கீழ் ரிலையன்ஸ் (ADA) குழுமத்தின் தலைவர் அனில் […]

Muslims Qatar

கத்தார்: இடைநீக்க நடவடிக்கை மட்டும் போதாது; மன்னிப்பு கேட்க வேண்டும்; கண்டனம் தெரிவிக்க வேண்டும் !

முஹமத் நபிக்கு எதிரான கருத்துகளுக்கு இந்திய அரசிடமிருந்து பகிரங்க மன்னிப்பு மற்றும் உடனடி கண்டனத்தை எதிர்பார்ப்பதாக கத்தார் தெரிவித்துள்ளது. கத்தார் வெளியுறவு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை இந்திய தூதர் தீபக் மிட்டலை வரவழைத்து, பாஜக தேசிய செய்தி தொடர்பாளர்களாக இருந்த நுபுர் ஷர்மா மற்றும் நவீன் ஜிண்டால், முஹம்மத் நபிக்கு எதிராக கூறிய சர்ச்சைக்குரிய கருத்துகள் தொடர்பாக கடும் அதிருப்தி மட்டுமின்றி, அக்கருத்துக்களை முழுமையாக நிராகரித்து, கண்டனத்தை வெளிப்படுத்தும் அதிகாரப்பூர்வ குறிப்பை அவரிடம் அளித்தது. நுபூர் ஷர்மாவை இடைநீக்கம் […]

Inflation Union Government

ரெயில்களில் அதிக ‘லக்கேஜ்’ எடுத்து சென்றால் தனி கட்டணம் முதல் அபராதம் வரை;புதிய ரயில்வே விதிகள்!

இந்நிலையில், விமான பயணங்களில் கூடுதலாக லக்கேஜ் கொண்டு செல்லும் பயணிகளிடத்தில் வசூலிக்கப்படும் கட்டண நடைமுறையை ரயில் பயணங்களிலும் கொண்டு வந்துள்ளது மோடி அரசு. ரெயில்களில் அதிகப்படியான லக்கேஜ்களை எடுத்துச் செல்வதற்காக பயணிகளிடம் கட்டணம் வசூலிக்க ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. மேலும், நீங்கள் பதிவு செய்யாமல் கூடுதல் சாமான்களை எடுத்துச் செல்வதைக் கண்டால், சாதாரண கட்டணத்தை விட ஆறு மடங்கு அதிகமாக வசூலிக்கப்படும். இந்த புதிய விதிகளின்படி, நீங்கள் பயணிக்கும் வகுப்பைப் பொறுத்து 35 கிலோ முதல் 70 […]

Christians Kerala Political Figures

‘2021ல் இந்தியாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக 486 வன்முறை தாக்குதல் சம்பவங்கள்’ – கேரள முதல்வர் பினராயி

கொச்சி: ​​இந்தியாவில் கடந்த ஆண்டில் மட்டுமே, 486 கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறை தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளது குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் நினைவுகூர்ந்தார். வரவிருக்கும் திருக்காக்கரை இடைத்தேர்தலை ஒட்டி பிரச்சார கூட்டம் ஒன்றில் பங்கேற்ற முதல்வர் பினராயி விஜயன், முன்னாள் எம்எல்ஏ பிசி ஜார்ஜின் வெறுப்புப் பேச்சு குறித்தும், அவருக்கு பாஜக ஆதரவு அளித்து வருவது குறித்தும் அவர் குறிப்பிட்டு பேசினார். கடந்த ஆண்டு, நாட்டின் பல பகுதிகளில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான 486 தாக்குதல்கள் நடந்தன. […]

Modi

‘பிரதமர் மோடி எனக்கு சிறந்த முறையில் கிச்சடி சமைக்க கற்றுக் கொடுத்தார்’ – பாஜக தலைவரின் மனைவி பேட்டி..

உள்ளூர் பாஜக தலைவர் தீபக் சர்மாவின் மனைவி சீமா ஷர்மா, பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், 1997ஆம் ஆண்டு நவராத்திரியின் போது, நான் பிரதமர் மோடிக்கு கிச்சடி சமைத்து கொடுத்தேன், ஆனால் அது அவரது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. பின்னர் மோடி எனக்கு எப்படி கிச்சடி உணவு சமைக்க வேண்டும் என்று காட்டினார். சிம்லா: பிரதமர் நரேந்திர மோடியின் சிம்லா பயணத்தின் ஒரு நாள் கழித்து, உள்ளூர் பாஜக தலைவர் ஒருவர், 90களின் பிற்பகுதியில் கட்சியின் இமாச்சலப் […]

BJP Maharashtra

மும்பை: பாஜக தலைவர் மோஹித் மீது ரூ.52 கோடி வங்கி மோசடி வழக்கு பதிவு !

மும்பை காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், செவ்வாய்க்கிழமை பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் மோஹித் கம்போஜ் பாரதியா மீது மோசடி புகாரை பதிவு செய்ததாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிடமிருந்து ரூபாய் 52 கோடி கடனை பெற்ற நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவர், பாஜக இளைஞர் பிரிவின் முன்னாள் மும்பை யூனிட் தலைவர் மோஹித் என்று வங்கியின் மேலாளர் தெரிவித்தார். கடனைப் பெறும்போது மேற்கோள் காட்டப்பட்ட நோக்கங்களுக்காக அல்லாமல் அவர்கள் அந்தத் தொகையை வேறு நோக்கத்திற்காக […]

Law and Order Uttar Pradesh

உபியில் கழுத்து அறுக்கப்பட்டு பொலிஸ் அதிகாரி கொலை !

உபி,கான்பூர் : வாடகை வீட்டில் தங்கி இருந்து 30 வயதான பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டதாக வியாழக்கிழமை உபி பொலிஸார் தெரிவித்தனர். தேஷ் தீபக்கின் உடல் ரத்த வெள்ளத்தில் கிடந்தது, பிரஹாம் நகர் பகுதியில் இந்த சம்பவம் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர். ஃபிரோசாபாத்தைச் சேர்ந்த கான்ஸ்டபிளான அவர், 2019 முதல் பில்ஹூரில் பணியமர்த்தப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர். புதன்கிழமை மதியம் முதல் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்த அவரது மொபைலில் எந்த பதிலும் வரவில்லை என்று தீபக்கின் குடும்பத்தினர் […]