BJP Madhya Pradesh Muslims

ம.பி: ரேஷன் கார்டு மற்றும் வீடு தருவதாக கூறி மதமாற்றம்; இந்துக்களாக மாறிய 18 முஸ்லிம்கள் !

பாஜக ஆளும் மத்திய பிரதேச மாநிலம் ரத்லம் மாவட்டத்தில் உள்ள அம்பா கிராமத்தில், 18 முஸ்லிம்கள் இந்து மதத்தில் இணைக்கப்பட்டுள்ளனர். இது குறித்து டைனிக் பாஸ்கர் ஊடகத்தின் இந்தி பேட்டியை சிறிய மாறுதல்களுடன் கீழே வழங்குகிறோம். பசுவின் சாணம், மாட்டு மூத்திரம் கொண்டு குளித்து,ஷேவிங் செய்து, இவர்கள் இந்து சனாதனவாதிகளாக மாறி உள்ளனர். டைனிக் பாஸ்கர் இந்த கிராமத்தை அடைந்து மதமாற்றம் பற்றி விசாரித்தபோது, ​​​​இந்த மதமாற்றத்தின் பின்னணியில் உள்ள உண்மையான காரணம் வறுமை மற்றும் பசி […]

Dalits Education Karnataka Muslims RSS Saffronization Students

தலித் எழுத்தாளர்கள் நீக்கம், ஆர்எஸ்எஸ் தலைவர்கள் சேர்ப்பு; காவிமயமாக்கப்பட்டுள்ள கர்நாடக பாடப்புத்தக மாற்றங்களின் முழு பட்டியல்!

கர்நாடகா : மகாத்மா காந்தி, டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் பற்றிய பாடங்கள் நீக்கப்பட்டு ஆர்எஸ்எஸ் சித்தாந்தவாதிகளான விநாயக் சாவர்க்கர் மற்றும் கேபி ஹெட்கேவார் ஆகியோரின் பாடங்கள் பாடப்புத்தகங்களில் சேர்க்கப்பட்டுள்ளன. அசர்ச்சைக்குரிய வலதுசாரி சொற்பொழிவாளர் ரோஹித் சக்ரதீர்த்தா தலைமையிலான குழுவால் உருவாக்கப்பட்ட பள்ளி பாடப்புத்தகங்களுக்கு எதிராக கர்நாடகாவில் உள்ள முற்போக்கு குழுக்கள் ஏன் போராடுகின்றன? இந்த நூல்களில் எந்தெந்தப் பிரிவுகள் திரிக்கப்பட்டிருக்கின்றன, எந்தெந்தப் பகுதிகள் காவி மையமாக்கப்பட்டுள்ளன, எந்த முற்போக்குக் கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன? சர்ச்சை தொடங்கியதில் இருந்து முதன்முறையாக, […]

BJP Hindutva Malaysia Muslims Prophet Muhammad

மலேசியா : முருகன் கோவில் முன் நின்று நுபுர் சர்மாவுக்கு ஆதரவு தெரிவித்தும், இந்து ராஷ்டிரம் கோரியும் வீடியோ வெளியிட்ட நபர்கள் கைது !

முஹம்மத் நபி குறித்து இழிவாக பேசிய முன்னாள் பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் நுபூர் சர்மாவுக்கு ஆதரவாக மலேசியாவில் உள்ள (Batu caves) பத்து குகைகளில் நின்று கொண்டு ஆதரவு தெரிவிக்கும் காணொளி டிக்டோக்கில் வைரலால் ஆனதை தொடர்ந்து நான்கு நபர்களை மலேசிய போலீசார் கைது செய்துள்ளனர். 18 வினாடிகள் கொண்ட இந்த வீடியோவில், இந்தியாவிலும் நேபாளிலும் இந்து ராஷ்டிரம் கோரியும், நுபுர் ஷர்மாவின் நபிகளார் குறித்தான இழிவான பேச்சுக்கு ஆதரவு தெரிவித்தும் பேசப்பட்டுள்ளது.முருகன் கோவிலில் நின்று […]

BJP Jharkand Muslims Prophet Muhammad

ஜார்கண்ட் : நுபூர் சர்மாவுக்கு ஆதரவாக முகநூலில் கருத்து பதிவிட்ட பாஜக தலைவர் கைது!

ஜார்கண்ட் : பாஜக கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் நுபூர் சர்மாவுக்கு ஆதரவாகவும், நபிகளாரை இழிவுபடுத்தும் வகையிலும் முகநூலில் கருத்தை பதிவிட்டதற்காகவும் பாஜக தலைவர் அனிஷா சின்ஹாவை ஆதித்யபூர் போலீஸார் திங்கள்கிழமை இரவு கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆதித்யபூர் நிஷாந்த் விஹார் காலனியில் வசிக்கும் அனிஷா செரைகேலா-கர்சவான் மாவட்டத்தின் பாஜக செயற்குழு உறுப்பினராக உள்ளார். இதுபோன்ற ஒரு வழக்கில், ஜாம்ஷெட்பூரைச் சேர்ந்த இளைஞரும் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். அனிஷா மீது ஐபிசி பிரிவு 295A (திட்டமிட்டு […]

BJP Fascism Indian Judiciary Muslims Uttar Pradesh Yogi Adityanath

உபி அரசின் நடவடிக்கைகள் குறித்து முன்னாள் உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் கடிதம் !

உத்தரபிரதேச மாநிலத்தில் சட்ட விரோத கடுங்காவல், வீடுகளை புல்டோசர்களால் இடிப்பது , போராட்டக்காரர்கள் மற்றும் போலீஸ் காவலில் உள்ளவர்கள் மீது போலீஸ் வன்முறை என்பன உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் குறித்து தானாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும் என முன்னாள் நீதிபதிகள் மற்றும் பல்வேறு வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர். இந்திய தலைமை நீதிபதி என்.வி. ரமணாவுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், போராட்டக்காரர்களை விசாரிக்கவும், அமைதியான போராட்டங்களில் ஈடுபடவும் வாய்ப்பளிப்பதற்கு பதிலாக, உத்தரபிரதேச மாநில நிர்வாகம் “அத்தகைய நபர்களுக்கு […]

Asadudin Owaisi Muslims Uttar Pradesh Yogi Adityanath

உபி: முதல்வர் ஆதித்யானத்தை விரமர்சித்ததாக கூறி 19 வயது அக்ரம் கைது !

பெயிண்டர் அக்ரம் அலியின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் குறித்து போலீசார் தாமாக முன்வந்து, அவர் மீது “பகைமையை ஊக்குவித்தல், மதத்தை அவமதிக்கும் நோக்குடன் செயல்படல் மற்றும் வேண்டுமென்றே அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படல்” ஆகிய குற்றங்களை அக்ரம் மீது சுமத்தி அவரை கைது செய்துள்ளனர். புதுடெல்லி: சமூக வலைதளங்களில் உபி முதல்வர் ஆதித்யநாத்துக்கு எதிராக ஆட்சேபனைக்குரிய கருத்துகளை தெரிவித்ததாக கூறி 19 வயது இளைஞனை உத்தரபிரதேச போலீசார் ஜூன் 13ம் தேதி திங்கள்கிழமை கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட […]

Hate Speech Hindutva Muslims

முஸ்லிம் வெறுப்பு பிரசாரத்தில் முன்னிலை வகிக்கும் ‘ஹிந்துத்துவா பாப்’ இசை பாடல்கள் !

புது தில்லி, இந்தியா – “இன்சான் நஹி ஹோ சாலோ, ஹோ தும் கசாயி; “பஹுத் ஹோ சுகா ஹிந்து முஸ்லிம் பாய் பாய்” – நீங்கள் மனிதர்களே அல்ல, கசாப்புக் கடைக்காரர்கள்; இந்த இந்து-முஸ்லிம் சகோதரத்துவம் எல்லாம் போதும். பாடகர் பிரேம் கிருஷ்ணவன்ஷி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு யூடியூப்பில் வெளியிட்ட ஒரு ‘பஜன்’ (பக்தி பாடல்) பாடல் வரிகள் இவை. சமகால வெறுப்பு அரசியலால் தூண்டப்பட்டு, கிருஷ்ணவன்ஷியின் பாடல் இந்தியாவில் ஒரு புதிய வெகுஜன கலாச்சாரத்தின் […]

Muslims Qatar

கத்தார்: இடைநீக்க நடவடிக்கை மட்டும் போதாது; மன்னிப்பு கேட்க வேண்டும்; கண்டனம் தெரிவிக்க வேண்டும் !

முஹமத் நபிக்கு எதிரான கருத்துகளுக்கு இந்திய அரசிடமிருந்து பகிரங்க மன்னிப்பு மற்றும் உடனடி கண்டனத்தை எதிர்பார்ப்பதாக கத்தார் தெரிவித்துள்ளது. கத்தார் வெளியுறவு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை இந்திய தூதர் தீபக் மிட்டலை வரவழைத்து, பாஜக தேசிய செய்தி தொடர்பாளர்களாக இருந்த நுபுர் ஷர்மா மற்றும் நவீன் ஜிண்டால், முஹம்மத் நபிக்கு எதிராக கூறிய சர்ச்சைக்குரிய கருத்துகள் தொடர்பாக கடும் அதிருப்தி மட்டுமின்றி, அக்கருத்துக்களை முழுமையாக நிராகரித்து, கண்டனத்தை வெளிப்படுத்தும் அதிகாரப்பூர்வ குறிப்பை அவரிடம் அளித்தது. நுபூர் ஷர்மாவை இடைநீக்கம் […]

Alleged Police Brutalities Indian Judiciary Muslims

“‘தீவிரவாதி’ பட்டம் இனி இல்லை, இழந்த ஒன்பது ஆண்டுகளை யார் திருப்பி தருவார்கள் ?”

யுஏபிஏ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு விடுவிக்கப்பட்ட ஐந்து பேரில் ரஷித் மற்றும் ஷாஹித் ஆகியோர் அடங்குவர். முஹமது ரஷீத்தின் வாடிக்கையாளர்கள் அவரை “பயங்கரவாதி” மற்றும் “ஜிஹாதி” என்று அழைத்ததால் ரஷித்தின் தந்தை தனது கடையை மூட வேண்டியதாயிற்று. ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு போலீஸ் கதவைத் தட்டியபோது இழந்த வேலையை ஷாஹித் இன்னும் திரும்பப் பெறவில்லை. அதுவே அவரது குடும்பத்தின் ஒரே வாழ்வாதாரமாக இருந்தது. “பயங்கரவாதி என்ற முத்திரையுடன் நான் வாழ… எனது […]

Karnataka Muslims

கர்நாடகா: தலையில் தொப்பி அணிந்ததற்காக முஸ்லீம் மாணவரை தாக்கிய போலீசார்; பள்ளியில் அனுமதிக்க மறுத்த முதல்வர் !

பாகல்கோட்: கர்நாடகாவில் கல்லூரி வளாகத்தில் தலையில் தொப்பை அணிந்ததற்காக மாணவர் ஒருவரைத் தாக்கியதாகக் கூறி முதல்வர், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 5 பேர் உட்பட 7 பேர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். உள்ளூர் பனஹட்டி ஜே.எம்.எஃப்.சி நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, மாநிலத்தின் பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள தெரடாலா காவல் நிலையத்தால் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக நவீத் ஹசன் சாப் தரதாரி என்ற கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். […]

Christians Hate Speech Minority Muslims

வெறுப்பு பிரச்சாரம், சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் அதிகரிப்பு -இந்திய கத்தோலிக்க யூனியன்

புதுடெல்லி: சமீப காலமாக இந்தியாவில் மத நல்லிணக்கதிற்கு ஏற்பட்டுள்ள ஆபத்து மற்றும் மத சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரங்களை குறித்து ஆழ்ந்த கவலையடைவதாக மிகப்பெரிய மற்றும் பழமையான கிறிஸ்தவ அமைப்பான அகில இந்திய கத்தோலிக்க யூனியன் (AICU) புதன்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. வெறுப்பு மற்றும் வன்முறை சம்பவங்களை ஆரம்பத்திலேயே தக்க முறையில் கட்டுபடுத்த தவறினால், அது தேசிய அமைதி மற்றும் சேதத்திற்கு சொல்லொணாத் தீங்கு விளைவிக்கும் என்றும் கிறிஸ்தவ அமைப்பு எச்சரித்துள்ளது. இந்த போக்கை மாற்றியமைக்கவும், […]

Hindutva Karnataka Mughals Muslims

திப்பு சுல்தானின் அரண்மனை கோவில் நிலத்தில் கட்டப்பட்டதாம் !

கர்நாடகாவில் உள்ள திப்பு சுல்தானின் கோடைகால அரண்மனை கோவில் நிலத்தில் கட்டப்பட்டது என இந்துத்துவா அமைப்பு கூறியுள்ளது. நிலத்தின் உரிமையை கோவிலுக்கு மாற்ற வேண்டும் என இந்து ஜனஜக்ருதி சமிதி அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளது. கர்நாடகாவின் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் உள்ள 18ஆம் நூற்றாண்டின் மைசூர் ஆட்சியாளர் திப்பு சுல்தானுக்குச் சொந்தமான கோடைகால அரண்மனை கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் கட்டப்பட்டதாகக் கூறி, அதை ஆய்வு செய்ய வேண்டும் என்று இந்துத்துவா அமைப்பினர் வியாழக்கிழமை கோரியதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. […]

தாஜ்மஹால்
Muslims Uttar Pradesh

தாஜ்மஹால் வளாக பள்ளிவாசலில் தொழுததற்காக 4 பேர் கைது செய்து சிறையில் அடைப்பு!

ஆக்ரா: தாஜ்மஹால் வளாகத்தில் உள்ள ஷாஹி மசூதியில் தொழுகை நடத்தியதற்காக நான்கு பேர் மே 25 புதன்கிழமை கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேர் மீதும் இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பிரிவு 153 (கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் வேண்டுமென்றே தூண்டுதல் நடவடிக்கையில் ஈடுபடுவது) இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. புதன்கிழமை மாலை 7 மணியளவில் ஷாஹி மசூதியில் அவர்கள் தொழுகை நடத்தி உள்ளனர். இதுகுறித்து மாநகர காவல் கண்காணிப்பாளர் கூறியதாவது: […]

Hindutva Mosques Muslims

குல்பர்கா கோட்டையில் கோயிலை மீட்டெடுக்க வேண்டும் இந்துத்துவா அமைப்புகள் கோரிக்கை !

இந்து ஜாக்ருதி சேனா அமைப்பினர் திங்கள்கிழமை கர்நாடக மாநிலம் குல்பர்காவில் உள்ள துணை ஆணையரிடம் பஹாமனி கோட்டையில் சிவன் கோவில் ஒன்றை கண்டுபிடித்துள்ளதாகவும், அங்கு பூஜை செய்ய அனுமதி கோரி மனு அளித்ததுள்ளனர். கல்புர்கி மாவட்டத்தில் 57 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பஹ்மானி கோட்டை, பஹ்மனி சுல்தானகத்தின் ஆட்சியாளரான ஹசன் பஹ்மானி ஷாவால் கட்டப்பட்டது. கோட்டைக்குள் ஜாமியா பள்ளிவாசல் ஒன்றும் உள்ளது. சோமலிங்கேஸ்வரர் கோவிலை இடித்து பஹ்மனி ஆட்சியாளர்கள் கோட்டையை கட்டியதாக இந்துத்துவ அமைப்புகள் கூறுகின்றன. கோட்டையின் […]

Assam Bulldozer Politics Minority Muslims

அசாம்: மீன் வியாபாரி ஷஃபிகுல் இஸ்லாம் போலீசார் கஸ்டடியில் மரணம் !

அசாமில் மீன் வியாபாரி ஷஃபிகுல் இஸ்லாம் போலீஸ் காவலில் இறந்து 2 நாட்களுக்குப் பிறகு, போலீசார் அவரது மனைவி ரஷிதா காதுன் மற்றும் அவரது மகள் 8 ஆம் வகுப்பு மாணவியை போலீசார் கைது செய்துள்ளனர். அசாமில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. போலீசார் காவலில் வைக்கப்படிருந்த ஷஃபிகுல் மரணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து படத்ராபா காவல் நிலையத்தை எரித்ததாகக் கூறப்படும் சைஃப்பின் மனைவி மற்றும் மகள் உட்பட குறைந்தது 6 பேர்களில் 5 பேரின் மீது யுஎபிஎ சட்டத்தின் […]