ஊரடங்கு உள்ள நிலையிலும் நூற்றுக்கணக்கானோருடன் பிறந்த நாள் கொண்டாடிய பாஜக எம்.எல்.ஏ
Corona Virus Karnataka

ஊரடங்கு நிலையிலும் நூற்றுக்கணக்கானோருடன் பிறந்த நாள் கொண்டாடிய பாஜக எம்.எல்.ஏ

கொரோனாவை கட்டுப்படுத்த நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் அதை சற்றும் பொருட்படுத்தாமல் கர்நாடகாவைச் சேர்ந்த பாரதீய ஜனதா கட்சி எம்.எல்.ஏ ஒருவர் தனது பிறந்த நாளை நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களுடன் கொண்டாடினார். கர்நாடகாவின் துமகுரு மாவட்டத்தில் துருவேக்கரைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ எம்.ஜெயராம், ஒரு பெரிய கேக்கை வெட்டி குப்பி தாலுகாவில் உள்ள குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கான கிராம மக்களுக்கு விநியோகித்தார். கொண்டாட்டத்திற்காக அமைக்கப்பட்ட இறுக்கமாக கட்டப்பட்ட பந்தலில் விருந்தினர்களுக்கு பிரியாணியும் வழங்கப்பட்டது. கடந்த […]

சுகாதாரப் பணியாளர்கள் மீது தப்லீக் ஜமாத்தினர் எச்சில் துப்பியதாக பொய்யை பரப்பிய பாஜக எம்.பி ..
Corona Virus Fact Check Islamophobia Karnataka

சுகாதாரப் பணியாளர்கள் மீது தப்லீக் ஜமாத்தினர் எச்சில் துப்பியதாக பொய்யை பரப்பிய பாஜக எம்.பி ..

புதுடில்லி நிஜாமுதீன் மர்கஸில் தப்லிகி ஜமாஅத்தில் கலந்து கொண்ட பின்னர் தனிமைப்படுத்தப்பட்ட பெலகாவியைச் சேர்ந்த சிலர் மருத்துவமனையின் சுகாதாரப் பணியாளர்களிடம் தவறாக நடந்துகொண்டு, அவர்கள் மீது எச்சில் துப்புகிறார்கள் என்று பாஜக எம்.பி. ஷோபா கரண்ட்லாஜே திங்களன்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிந்துள்ளார். தனிமைப்படுத்தப்பட்டுள்ள தப்லீக் ஜமாத்தினர் சுகாதார ஊழியர்களுடன் தவறாக நடந்து கொள்ளவோ அல்லது அவர்கள் மீது எச்சில் துப்பவோ இல்லை என பெலகாவி துணை ஆணையர் எஸ்.பி.போமனஹள்ளி, பாஜக எம்.பி யின் பொய்யான வெறுப்பு […]

102 வயது சுதந்திர போராட்ட வீரரை பாகிஸ்தான் ஏஜென்ட் என அழைத்து, அதற்கு மன்னிப்பு கேட்க முடியாது எனவும் பாஜக எம்எல்ஏ அறிவிப்பு ..
BJP Karnataka

102 வயது சுதந்திர போராட்ட வீரரை பாகிஸ்தான் ஏஜென்ட் என அழைத்து, அதற்கு மன்னிப்பு கேட்க முடியாது எனவும் பாஜக எம்எல்ஏ அறிவிப்பு ..

கர்நாடகாவின் விஜயபுராவைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ பசனகவுடா யட்னல் , 102 வயதான சுதந்திரப் போராட்ட தியாகி துரைசாமியை ‘பாகிஸ்தான் ஏஜென்ட்’ என கூறி நாட்டிற்காக போராடியவரை இழிவு படுத்தியுள்ளார். இதற்கு மாநிலம் முழுவதும் எதிர்ப்பு எழுந்தும் கூட தனது கருத்துக்கு மன்னிப்பு கோர போவதில்லை என அவர் திமிராக கூறியுள்ளார். திரு.துரைசாமி மோடி அரசின் கருப்பு சட்டங்களுக்கு எதிராக இந்த வயதிலும் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறார், அது மட்டுமின்றி போராட்டங்களிலும் கலந்து கொண்டு வருகிறார், […]

போராடங்களுக்கு தடை விதித்து காவல் துறை ஆணையர் பிறப்பித்த உத்தரவு சட்ட விரோதம் - கர்நாடக உயர் நீதிமன்றம்
CAA Indian Judiciary Karnataka

“போராடங்களுக்கு போலீசார் தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது சட்ட விரோதமானது’ – கர்நாடக உயர் நீதிமன்றம்..

பெங்களூர் மாநகரில் 3 நாள்களுக்கு (Dec 19 to Dec 21) யாரும் போராட்டம் நடத்தக்கூடாது என பெங்களூர் மாநகர காவல் துறை ஆணையர் பாஸ்கர் ராவ் உத்தரவிட்டார். இதை எதிர்த்து ராஜீவ் கவுடா, சவ்மியா ரெட்டி ஆகியோர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் கடந்த வியாழ கிழமை (13-02-2020) அன்று கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அபை ஸ்ரினிவாஸ் அவர்கள், CAA எதிர்ப்பு போராடங்கள் உட்பட எந்த போராட்டங்களும் 3 […]

சிறுமிகள் பாலியல் பலாத்காரம் மதரசா
Crimes Against Women Karnataka Muslims

மதரசா சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற மூவர் கைது !

மங்களூர்: சிறுமிகள் மதரசாவுக்கு செல்லும் வழியில் திட்டமிட்டு வழிமறித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற மூன்று நபர்களை பிப்ரவரி 11, செவ்வாயன்று கோனாஜே பொலிசார் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நடந்த சம்பவம்: “மூன்று சிறுமிகளும் பிப்ரவரி 10 திங்கள் அன்று பவூர் கிராமத்தில் உள்ள மலாராவில் அமைந்துள்ள மதரசாவுக்குச் சென்று கொண்டிருந்தனர். அப்போது, மலார் பாலம் அருகே அமர்ந்திருந்த மூன்று […]

school skit
CAA Karnataka

சிஏஏ குறித்து நாடகம்; பள்ளி மீது தேசத்துரோக வழக்கு – 4,5ம் வகுப்பு மாணவர்களையும் கூட விசாரிக்கும் காவல்துறை!

வடக்கு கர்நாடகாவின் பிதர் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளி ஒன்றின் முதல்வர் மற்றும் அதிகாரிர்கள் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 21 அன்று பள்ளி மாணவர்கள் சார்பில் சி.ஏ.ஏ. மற்றும் என்ஆர்சி ஆகியவற்றை விமர்சனம் செய்யும் வகையில் சிறு நாடகம் ஒன்று நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பள்ளி நிர்வாகிகள் அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் மற்றும் இன்னபிற சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது பாஜக முதல்வர் எடியூரப்பாவுக்கு கீழ் செயல்படும் காவல்துறை. […]

BJP Intellectual Politicians Karnataka

“என் தொகுதியில் உள்ள முஸ்லிம்களின் வசதிகளை துண்டிப்பேன்” – கர்நாடக பாஜக எம்எல்ஏ பிரகடனம். .

கடந்த 2018 கர்நாடகா சட்டசபை தேர்தலில் தனக்கு ஓட்டு போடாததால் முஸ்லிம் சமூகத்தின் அனைத்து வசதி வாய்ப்புகளையும் தடை செய்வேன் என்று கர்நாடக பாஜக எம்எல்ஏ எம்.பி. ரேணுகாச்சார்யா கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கூறியுள்ளார். ‘சப் க சாத் சப் க விகாஸ்’ – மோடி மந்திரம் : எனினும் அமைச்சரின் இந்த ஆணவ பேச்சு மீடியா கவனத்தை பெற்றிடவில்லை. இவரின் முகத்திரை பெரிய அளவில் கிழிக்கப்படவும் இல்லை. ஒரு புறம் “சப் க சாத் சப் […]

church bangalore attack
Christians Karnataka

பெங்களூரு : தேவாலயத்தை சூறையாடிய பாசிச கும்பல் !

கடந்த ஜனவரி 20 திங்கள் நள்ளிரவில் பாஜக ஆளும் மாநிலமான கர்நாடகாவில் உள்ள பெங்களூரு தேவாலயம் ஒன்றிற்குள் புகுந்த பாசிச கும்பல் ஒன்று தேவாலயத்தை சூறையாடியுள்ளது. அடையாளம் காணப்படாத சிலர் கெங்கேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செயின்ட் பிரான்சிஸ் ஆஃப் அசிசி தேவாலயத்தை சூறையாடியுள்ளனர். எனினும் இது பரவலாக மீடியாக்களில் வெளியாகாமல் மூடி மறைக்கப்பட்டுள்ளது. “இது மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. தேவாலயத்தின் புனிதத்தை அழிக்கும் நோக்கிலும், இயேசுவை இழிவுபடுத்தும் நோக்கி லும் இப்படி செய்யப்பட்டுள்ளது எனக்கு மிகுந்த […]

muslim mayor
Karnataka Muslims

மைசூருவின் முதல் முஸ்லிம் பெண் மேயரானார் தஸ்னீம் சமியுல்லாஹ்!

மைசூர் மாநகராட்சியின் 158 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறையாக முஸ்லீம் பெண் மேயராக தேர்வாகியுள்ளார் தஸ்னீம், வயது 33. மைசூர் நகரத்தின் மிக இள வயது மேயர் என்ற பெருமையும் பெறுகிறார் தஸ்னீம் . பிஏ பட்டதாரியான இவர், மைசூருவின் மகாராணி கல்லூரியில் பயின்றவர் இவரது கணவர் சமியுல்லாஹ், மீனா பஜாரில் எம்பிராய்டரி தொழில் நடத்தி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர். தஸ்னீம் தந்தை, முனவ்வர் பாஷா, தையல்காரர் மற்றும் தாய், தஹ்ஸீன் பானு, […]

mangalore bomb blast
Karnataka Terrorism

மங்களூர் வெடிகுண்டு சம்பவம்: முஸ்லிம்கள் மீது பாஜக மற்றும் ஊடகங்கள் பழி சுமத்தி வந்த நிலையில் தீவிரவாதி ஆதித்யா ராவ் சரண்!

கடந்த திங்கட்கிழமையன்று மங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு அழைப்பு வந்துள்ளது. இதனையடுத்து விமான நிலையத்தின் நுழைவுவாயிலில் சிஐஎஸ்எஃப் அதிகாரி ஒருவர் வெடி பொருட்களைக் கொண்ட பையை கண்டெடுத்தார். பின்னர் அதை ஆளில்லா இடத்தில் பாதுகாப்பான முறையில் அதிகாரிகள் வெடிக்க செய்தனர். ஊடக பயங்கரவாதம்: ஊடகங்களில் செய்திகள் வெளியாயின. குண்டு வைத்த தீவிரவாதியின் சிசிடிவி காட்சிகள் ஒளிபரப்பாகின. இதை செய்துள்ளது முஸ்லிம்கள் என்ற தொனியில் வழக்கம் போல தங்கள் மறைமுக சமிக்ஞைகள் மூலம் விஷம […]

hassan mosqu
CAA Hindutva Karnataka

கர்நாடகா : ‘மதம் மாறுங்கள்’ – பள்ளிவாசல்களுக்கு அனுப்பட்ட மிரட்டல் கடிதங்கள்!

கடந்த சனிக்கிழமையன்று கர்நாடக மாநிலத்தின் ஹஸ்ஸான் மாவட்டத்தில் உள்ள பல்வேரு பள்ளிவாசல்களின் தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கு அச்சுறுத்தும் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பாஜக எம்எல்ஏக்கள் பெயர் குறிப்பிட்டு கடிதங்கள்: ஹசன், அர்சிகேர், சக்லேஷ்பூர் மற்றும் பேலூரில் பகுதிகளில் உள்ள மசூதிகளுக்கு இதுபோன்ற அநாமதேய கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.கடிதங்களில் பெல்லாரி பகுதியை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ சோமாஷேகர ரெட்டி மற்றும் விஜயநகர பாஜக எம்.எல்.ஏ ஆனந்த் சிங் ஆகியோரின் முகவரி குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கடிதத்தில் ஒரு குறிப்பிட்ட […]

sdpi pfi ban
BJP Karnataka

PFI SDPI தடை..? – கர்நாடக பாஜக அரசு தீவிரம்..

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான மக்கள் எழுச்சி நாடு முழுவதும் பற்றி எரிகிறது. வடகிழக்கு மாநிலங்களில் தோன்றிய அந்த எழுச்சி என்பதை இந்தியாவின் கடைக்கோடி வரை தன்னிச்சையாக பல்வேறு வடிவங்களில் நாள் தோறும் சங்கிலித் தொடராய் நீண்டு கொண்டிருக்கிறது. அரசிற்கு எதிராக குழுக்கள்., அமைப்புகள், அரசியல் கட்சிகள், தனிமனிதர்கள் கிளர்ந்தெழும்போது அதனை ஒடுக்கவோ, அவர்களை குறிப்பிட்டு முடக்கவோ, தனிமனித தாக்குதல் தொடுக்கவோ அரசு முனையும். இது வழமையான ஒன்று. இதனை எல்லா அரசுகளும் ஜனநாயகப் போர்வையில் கடைபிடித்தே […]

hindtuva extremist mob
Christians Hindutva Karnataka

இயேசு கிறிஸ்து சிலை கூடாது; சங்பரிவார கூட்டத்தினர் ஆர்ப்பாட்டம்!

இந்துத்துவாவினர் ஆர்ப்பாட்டம்: நாட்டில் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக பாஜக ஆளும் கர்நாடகாவின் கனகாபுராவில் உள்ள கபாலா பெட்டாவில் 114 அடி உயர இயேசு கிறிஸ்துவின் சிலை நிறுவ திட்டமிடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக, இந்து ஜாக்ரன் வேதிகே, விஸ்வ இந்து பரிஷத் மற்றும் ஆர்எஸ்எஸ் ஆகிய அமைப்பை சேர்ந்தவர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். சிலை கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ள நிலத்தில் முனீஷ்வராவுடன் (இந்து தெய்வ சிவனின் ஒரு வடிவம்) ஒரு பழங்கால தொடர்பு (!) […]

police shot dead innocents
CAA Karnataka Muslims

CAA : கொல்லப்பட்ட அப்பாவிகளை கைவிட்ட பாஜக அரசு; 2 கோடி வசூலித்த மக்கள்!

CAA எதிர்ப்பு போராட்டத்தின் போது கர்நாடகாவின் மங்களூரு காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 2 அப்பாவிகள் கொல்லப்பட்டனர். பாஜக வில் இருந்தும் கூட மனிதாபிமான அடிப்படையில் அம்மாநில முதல்வரே 10 லட்சம் இழப்பீடு தரப்படும் என அறிவித்திருந்தார். ஆனால் அறிவித்த சில மணி நேரத்திலேயே மேலிடத்து உத்தரவோ என்னவோ அப்படியே பல்டி அடித்து இழப்பீடு எல்லாம் தர முடியாது என்று சொன்னது மட்டுமல்லாமல் போலீஸ் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட இருவரையும் “கிரிமினல்” என்று நா கூசாமல் அழைத்துள்ளார் […]

kids burried karnataka
Karnataka

சூரிய கிரகணம்: சிறுவர்களை மண்ணில் புதைத்து சித்திரவதை !

இன்று இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் சூரிய கிரகணம் தெரிந்தது. சூரிய கிரகணம் என்பது ஒரு விஞ்ஞான நிகழ்வே,ஆனால் இதையொட்டி பல்வேறு மூட நம்பிக்கையில் ஊறியவர்களாக மக்களை காண முடிகிறது. கிரகணத்தின் போது சாப்பிடக்கூடாது, பயணம் செய்யக்கூடாது போன்ற மூட நம்பிக்கைகளாவது ஜீரணிக்க முடிகிறது. ஆனால் கர்நாடகாவில் காலாபுராகி பகுதியில் 10 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சிலரை கழுத்து/தலை மட்டும் வெளியே தரும் விதத்தில் பெற்றோரே மண்ணில் புதைத்து சித்திரவதை செய்துள்ள சம்பவம் அரங்கேறியுளளது. கலாபுராகி நகரத்தின் புறநகரில் […]