BJP West Bengal

மே வங்கம்: முதியவர் கொலை வழக்கில் பாஜக தலைவர் உட்பட மூவர் கைது !

மேற்கு வங்க பூர்பா பர்தாமன் மாவட்டத்தில் 74 வயது நபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் உள்ளூர் பாஜக தலைவர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

இந்த மூவரும் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டு சனிக்கிழமை உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிமன்றம் அவர்களை 10 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி வழங்கியுள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மார்ச் 9 ம் தேதி ரெய்னா காவல் நிலைய பகுதியில் உள்ள தபால் அலுவலகம் பாராவில் வசித்து வந்த முதியவர் தனது வீட்டிற்குள் இருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார்.

கொலை சம்பவம் நடந்த நாளில் முதியவர் தனது வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுத்துள்ளார், எனவே பணத்தை கொள்ளை அடிக்கும் போது கொலை செய்யப்பட்டிருக்கலாம் என அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

மூவரையும் அவர்களின் மொபைல் போன் லொகேஷனை வைத்து கைது செய்யப்பட்டனர் என போலீஸ் அதிகாரி தெரிவித்தார்..

பர்தமான் உத்தர சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த பாஜக தலைவரான அவர் தன் நிரபராதி என்றும் வழக்கில் தன்னை சிக்கவைக்க சதி நடப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

(With inputs from PTI)