Gujarat International News

அமெரிக்க அதிபருக்காக மோடி அரசு கட்டி வரும் சுவர்..

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வரும் பிப்ரவரி 24 அன்று இந்தியா வர உள்ளார். குஜராத்தின் அகமதாபாத்தில் ட்ரம்பின் விமானம் தரையிறங்க உள்ளது.

அவருக்காக சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தை இந்திரா பாலத்துடன் இணைக்கும் சாலையில் ஒரு சுவரைக் கட்டி வருகிறது ,அஹமதாபாத் மாநகராட்சி (ஏ.எம்.சி). ஏன் என்கிறீர்களா?  

இந்த 600 மீட்டர் நீளம் கொண்ட பகுதியில் சேரி மக்கள் வசிக்கின்றனர். சேரி பகுதி அமெரிக்க அதிபரின் கண்களுக்கு படாமல் இருப்பதற்க்காக தான் மோடி அரசு அவசர அவசரமாக சுவரை கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளது.