Hindutva RSS

இளம் பெண்ணிற்கு பாலியல் தொல்லை! ஆர்.எஸ்.எஸ் தொண்டர் படுகொலை !

உத்தரபிரதேசத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில் இளம் பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்ணின் தந்தை மற்றும் அவரது சகோதரர் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.சனிக்கிழமை மாலை கார்வாரா கிராமத்தில் இந்த சம்பவம் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர். நீண்ட காலமாகவே பெண்ணை பின்தொடர்ந்து தொடர் சில்மிஷத்தில் ஈடுபட்டதால் தந்தை மகன் என இருவரும் கோபமுற்று கொலை செய்துள்ளனர்.

கொலை செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ் செயற்பாட்டாளர் பங்கஜ் (23), அதே கிராமத்தைச் சேர்ந்தவர்.சுவாமி கல்யாண்டேவ் டிகிரி கல்லூரியில் இளங்கலை மாணவர்.குற்றம் சாட்டப்பட்ட இருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக முசாபர்நகர் மூத்த போலீஸ் சூப்பிரண்டு (எஸ்.எஸ்.பி) அபிஷேக் யாதவ் தெரிவித்தார்.மேலும் இறந்தவரின் சடலம் ஹர்சவ்லி கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டதாக திரு.யாதவ் தெரிவித்தார்.

கடந்த சனிக்கிழமை பங்கஜ் தனது நண்பர் சோனுவுடன் வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றுள்ளார். அப்போது பங்கஜிற்கு போனில் அழைப்பு வர, சோனுவை திரும்ப போக சொல்லி உள்ளார்.

இரவு தாமதமாகியும் பங்கஜ் வீடு திரும்பாததால் , ​​அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

சோனுவை வீடு திரும்புமாறு பங்கஜ் கேட்டு கொண்ட இடத்தில் போலீசார் சில இரத்தக் கறைகளைக் கண்டறிந்தனர். பின்னர், பங்கஜின் உடல் காட்டில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. இந்த கொலையில் மேலும் ஒருவர் ஈடுபட்டுள்ளதாகவும் அவரையும் தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளார்..