Crimes Against Women Maharashtra Rape

10 வயது சிறுமி பலாத்காரம்; கழுத்து நெரித்து கொலை !

மும்பை நகரின் ராஜீவ் காந்தி நகரில் வசிக்கும் மனநலம் பாதிக்கப்பட்ட மற்றும் மாற்று திறனாளி ( 2 வருடங்களுக்கு முன்னர் தான் நடக்க ஆரம்பித்தார்) 10 வயது சிறுமி  நவம்பர் 5ம் தேதி  காணாமல் போனதால் அப்பகுதி மக்கள் தேடி வந்துள்ளனர். இந்நிலையில் சனிக்கிழமை 9ம் தேதி  இரவு வித்யாவிஹார் ரயில் நிலையம் அருகிலுள்ள சாலையில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

பிரேத பரிசோதனை அறிக்கையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும், சிறுமியின் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக அஜித் குமார் ராய் (31) என்பவரை ஞாயிற்றுக்கிழமை (10 ம் தேதி) போலீசார் கைது செய்துள்ளனர்..

சிறுமி காணாமல் போன பிறகு, கொடூர காமுகன் சிறுமியை அழைத்துச் சென்ற சிசிடிவி காட்சிகள் வைரலாகின. “அந்த நபர் எங்கள் பகுதியில் சுற்றித் திரிவதை நாங்கள் கண்டோம், அவரை காணொளியிலிருந்து  அடையாளம் கண்டோம்” என்று சமூக ஆர்வலர் அப்துல் சவுத்ரி  தெரிவித்தார். அவனை அடையாளம் கண்ட மக்கள் அவனை மடக்கி பிடித்து தாக்கினர் பிறகு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

குற்றம் சாட்டப்பட்டவர் கற்பழிப்பு மற்றும் கொலை குற்றத்தை  ஒப்புக் கொண்டுவிட்டதாக  போலீசார் தெரிவித்துள்ளனர்.

Read More