Lynchings Rajasthan States News

காவலர் அப்துல் கனி ராஜஸ்தானில்,கொடூர கும்பலால் அடித்து கொலை !

நேற்று (13-7-19) ராஜஸ்தானின் ராஜ்சமண்ட் மாவட்டத்தின் பத்மேலா கிராமத்தில் நில தகராறு வழக்கை விசாரிக்கும் போலீஸ் தலைமை கான்ஸ்டபிள் ஒரு கும்பலால் அடித்து கொல்லப்பட்டார். அடையாளம் தெரியாத நபர்கள் அவரை கட்டைகள் மற்றும் கம்பிகளால் அடித்து விட்டு தப்பி ஓடிவிட்டனர், இதனால் அவர் பலத்த காயமடைந்தார். பின்னர் அவர் உள்ளூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

police abdul ghani death rajasthan
File Photo:ANI

48 வயதான அப்துல் கனி, நில அபகரிப்பு தொடர்பான வழக்கு விசாரணைக்காக பீம் தொகுதியின் ப்ரார் கிராம பஞ்சாயத்து கிராமத்திற்குச் சென்றிருந்தார். அங்கு ஏற்பட்ட வாக்குவாதத்திற்குப் பிறகு அவர் வாகனத்தில் திரும்பி கொண்டிருக்கையில் தாக்கப்பட்டார். இரத்த வெள்ளத்தில் கிடந்த அப்துல் கனியை கண்ட சில கிராம வாசிகள் அவரை சமூக சுகாதார மையத்திற்கு கொண்டு சென்றனர், பின்னர் அவர் இறந்து விட்டதாக கூறினர்.

பிரேத பரிசோதனை ஞாயிற்றுக்கிழமை (14-7-19) நடத்தப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். தாக்குதல் நடத்தியவர்களை அடையாளம் காண போலீசார் முயற்சித்து வருவதாக பீம் வட்ட ஆய்வாளர் லாபு ராம் தெரிவித்தார்.

ராஜஸ்தான் கும்பல் வன்முறை சம்பவங்கள்:

சமீப காலமாக கும்பல் வன்முறை சம்பவங்களுடன் ராஜஸ்தான் தலைப்பு செய்தி ஆகி வருகிறது. கடந்த ஆண்டு, ரக்பர் கான், 28, கால்நடை கடத்தல் சந்தேகத்தின் பெயரால் ஒரு கும்பலால் தாக்கப்பட்டார். அவரை போலீசார் காவலில் விசாரணைக்கு எடுத்த பின்னர் அவருக்கு ஏற்பட்ட காயங்களால் இறந்தார்.

2017 ஆம் ஆண்டில், மாநில தலைநகர் ஜெய்ப்பூரில் ஒரு கால்நடை கண்காட்சியில் வாங்கிய மாடுகளை ஹரியானாவில் உள்ள தங்கள் வீட்டிற்கு கொண்டு சென்று கொண்டிருந்த பெஹ்லு கான் மற்றும் அவரது இரண்டு மகன்கள் ஒரு கும்பலால் தாக்கப்பட்டனர். சாலையில் இரக்கமின்றி தாக்கப்பட்ட பெஹ்லு கான், மருத்துவமனையில் இறந்தார்.