Rajasthan Rape States News

இராஜஸ்தானில் இமாமின் 7 வயது சிறுமியை பலவந்தமாகக் கடத்திச் சென்று கற்பழித்த கொடூரம்!

Published : 3-07-2019 : 10:44am

(1-07-2019) திங்கள் இரவு 8 மணி அளவில் மோட்டார் சைக்கிள் வாகனத்தில் வந்த ஒருவன் சிறுமியை கடத்தி சென்று அருகில் இருந்த ஒரு இடத்தில் அந்த சிறுமியை பலவந்தமாக கற்பழித்ததாக போலீசார் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தனர்.

2 மணி நேரமாக குழந்தையை தேடித் தவித்த பெற்றோர் ஒரு கட்டத்தில் திங்கள் (நேற்று) இரவு தங்கள் வீட்டிலிருந்து 10 – 15 கிலோமீட்டர் தொலைவில் , சிறுமியின் தலையில் இரத்தம் வழிந்து கொண்டிருந்த நிலையில் கண்டு அதிர்ந்து போயினர். உடனே ஜேகே லோன் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். தற்போது சிறுமியின் உடல் நிலை சீராக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த காட்டுமிராண்டித்தனத்தை கண்டித்தும் உடனே அந்த கேடுகெட்டவனை பிடித்து சிறையில் அடைக்க கூறியும் பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கினார் ,அப்போது 160 வாகனங்களை சேதப்படுத்தியுள்ளனர் என்று இந்தியடுடே செய்தி வெளியிட்டுள்ளது.மேலும் கல்வீச்சில் ஈடுகட்ட 16 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

தற்போது அந்த பகுதியில் நிலைமை சீரடைந்து உள்ளதாகவும் அதிகப்படியான போலீசார் அங்கு குவிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது . மேலும் குற்றவாளியை பிடிக்க 14 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது என்று துணை காவல் துறை ஆணையர் (கமிஷ்னர்) மனோஜ் குமார் தெரிவித்துள்ளார்.

சம்பவம் குறித்து பொய்யான தகவல்கள் பரப்பப்படுவதை தடுக்கவும் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரவும் நேற்று(செவ்வாய்) மதியம் 2 மணியில் இருந்து இன்று (புதன் கிழமை) காலை 10 மணி வரை இன்டர்நெட் சேவைகள் அந்தப் பகுதிகளில் முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது.

மாநில போக்குவரத்து அமைச்சர் பிரதாப் சிங் அந்த சிறுமி அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு சென்று பா்வையிட்டார். பின்னர் “இது ஒரு கொடூரமான குற்றம், கற்பழிப்பில் ஈடுபட்ட குற்றவாளி தூக்கிலிடப்பட வேண்டும். போலீசார் குற்றவாளியை கைது செய்ய தங்களால் ஆன அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.”என்று அமைச்சர் தெரிவித்தார்.

காங்கிரஸ் அரசாங்கம் சிறுமியின் குடும்பத்தாருக்கு முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து ஐந்து லட்சம் ரூபாய் வழங்கியுள்ளது. இதற்கு உண்டான காசோலையை காங்கிரஸ் தலைவர்களான மகேஸ் ஜோஷி, அமின் மற்றும் ரபீக் கான் ஆகியோர் சிறுமியின் தந்தையிடம் நேற்று வழங்கினார்.

பொதுமக்கள் இந்த குற்றத்தில் ஈடுபட்டவர் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்து வருகின்றனர்.

அதே சமயம் ஒரு சிலர் சில தினங்களுக்கு முன்பு முஸ்லிம் பெண்களை இந்துக்கள் கற்பழிக்க வேண்டும் என்று சர்ச்சைக்குரிய வகையில் கூறியிருந்த பாஜக தலைவரின் பேச்சையும் தற்போது நடந்துள்ள சம்பவத்தையும் தொடர்புபடுத்தி பின்வருமாறும்

https://twitter.com/DesiPoliticks/status/1145994249709617152

டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.