Maharashtra

மும்பையின் லட்சாதிபதி பிச்சைக்காரர்; அதிர்ந்து போன போலீஸ்!

மும்பையில் ரயில் மோதி மரணித்த பிச்சைக்காரர்! 8 மணி நேரம் செலவழித்து 1.5 லட்சம் மதிப்புள்ள நாணயங்களை எண்ணிய போலீஸ் !

மும்பை கோவாந்தியில் வாழ்ந்து வந்த பிர்ஜு சந்திரா எனும் பிச்சைக்காரர்(வயது 62) ஒருவர் மீது ரயில் ஏறியதில் அவர் மரணித்தார். அவர் வங்கியில் தனது பெயரில் நிலையான வைப்பு கணக்கு  (FD) மூலம் ₹8.7 லட்சம் வைப்பு வைத்திருந்தது தெரியவந்தது.மேலும் இவர் பிச்சை எடுத்து சேர்த்து வைத்திருந்த 1.75 லட்சம்  சில்லறை நாணயங்களை  எண்ணுவதற்கு ரயில்வே போலீசாருக்கு சுமார் 8 மணி நேரம் (இரவு முழுவதும்) ஆகியுள்ளது.  முதியவரின் அங்க அடையாளங்களை வைத்து யாரென அறிந்து கொண்ட போலீசார் ராஜஸ்தானில் உள்ள அவரது மகனை தொடர்பு கொள்ள முயற்சித்து வருகின்றனர்.