International News Modi

ஏர் பிரான்ஸ் விமானத்தில் மோடி, மோடி என கோஷமிட்டு வன்முறை செயல்களில் ஈடுபட்ட நபர் கைது !

பாரிஸிலிருந்து புதுடெல்லிக்குச் செல்லும் ஏர் பிரான்ஸ் விமானம் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் பல்கேரியாவின் சோபியா விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறங்கியது. (1500 ஜிஎம்டி) பல்கேரிய அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.

இந்திய குடிமகனான இந்த பயணி, விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அத்துமீறலில் ஈடுபட்டார், மற்ற பயணிகளுடன் சண்டையிட்டார், ஒரு விமான பணிப்பெண்ணைத் தாக்கி, காக்பிட்டின் கதவைத் தட்ட ஆரம்பித்தார் என்று தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரி இவிலோ ஏஞ்சலோவ் கூறிகிறார்.

https://twitter.com/Newscap_in/status/1368851837852426245?s=19

மோடி, மோடி என கத்தி கோஷமிட தொடங்கிய அவர் யார் சொல்லையும் கேட்காமல் பயணிகளுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தி, வன்முறையில் ஈடுபட தொடங்கினார். எனவே விமானப் பாதுகாப்புக்கு ஆபத்து விளைவித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும்.