Crimes Against Women Madhya Pradesh Rape

மத்திய பிரதேசம்: 6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு,கண்கள் சேதப்படுத்தப்பட்ட கொடூரம் !

பாஜக ஆளும் மத்தியப் பிரதேசத்தின் தாமோ மாவட்டத்தில் அடையாளம் தெரியாத ஒருவனால் ஆறு வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அம்மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி சிறுமியின் கண்களும் சேதப்படுத்தப்பட்டிருந்தாக ஏப்ரல் 23, அன்று போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

ஏப்ரல் 22, புதன்கிழமை மாலை ஜபேரா தெஹ்ஸில் உள்ள ஒரு கிராமத்தில் சிறுமி தனது வீட்டிற்கு வெளியே மற்ற குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.

கொடூர காமுகன்:

“அந்த நேரத்தில், அடையாளம் காணப்படாத ஒருவன் சிறுமியை தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்று அங்கு பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். இன்று காலை அச்சிறுமியின் வீட்டின் அருகிலேயே உள்ள சிதிலமடைந்த அறை ஒன்றில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது” என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹேமந்த் சவுகான் பி.டி.ஐ ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.

அங்கு நாங்கள் சிறுமியின் கண்கள் கடுமையாக சேதப்படுத்த பட்டிருந்ததை கண்டோம். முகத்திலும் காயங்கள் ஏற்பட்டிருந்தது.ஆபத்தான நிலையில் இருந்த சிறுமியை ஜபேரா தெஹ்ஸில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அங்கிருந்து அவர் ஜபல்பூரில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு மருத்துவர்கள் சிறுமியின் கண்களை பரிசோதனை செய்து சிகிச்சை அளித்து வருகின்றனர் என சூப்பிரண்டு ஹேமந்த் மேலும் தெரிவித்தார்.

கண்கள் சேதமடைந்தது:

சிறுமியின் கண்கள் முழுவதுமாக சேதப்படுத்தப்பட்டு விட்டதா என கேட்கப்பட்ட கேள்விக்கு, இது குறித்து நாங்கள் மருத்துவரிடம் கேட்டோம், அவர் சிறுமியின் கண்கள் கடுமையாக வீக்கம் அடைந்துள்ளது, விழித்திரை சோதனை செய்ய முடியாத அளவில் உள்ளது என கூறியதாக ஹேமந்த் தெரிவித்தார்.

மேலும் போலீசார் குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட அவரை தேடி வருகின்றனர்.

இது குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் கமல்நாத் “சிவ்ராஜ் ஜி, மாநிலத்தில் என்ன நடக்கிறது. லாக்டவுன் நிலையிலும் குற்றவாளிகள் சுதந்திரமாக சுற்றித் திரிவதாகத் தெரிகிறது? தாமோவில், ஒரு இளம் அப்பாவி சிறுமிக்கு எதிராக மிருகத்தனமான சம்பவம் அரங்கேறி உள்ளது, சிறுமியின் கண்கள் அழிக்கப்பட்டு விட்டது” என கூறியுள்ளார்.

குற்றச்செயலில் ஈடுபட்டவன் உள்ளூர்வாசி தான் என சந்தேகிக்கப்படுகிறது. இந்நிலையில் இரண்டு நாட்கள் ஆகியும் குற்றவாளி இன்னும் செய்யப்படாமல் உள்ளதற்கு நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.