Tamil Nadu

கோவை: வெடிபொருட்கள் பதுக்கல் வழக்கில் தேடப்பட்டு வந்த இருவர் கைது !

கோவை: வெடிபொருட்கள் மற்றும் ஆயுத தடுப்பு பிரிவில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் கேரள போலீசாரால் கோவையில் கைது செய்யப்பட்டனர்.

வெடிபொருள் மற்றும் ஆயுத தடுப்பு பிரிவின் கீழ் தர்ஷன் குமார்(30), ராஜேஷ் (29) ஆகியோர் மீது கேரளா, திருச்சூர், காட்டூர் காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இவர்களை, கேரளா போலீசார் தேடி வந்த நிலையில், கோவை ரயில் நிலையம் அருகே குற்றவாளிகள் பதுங்கி இருப்பதாக, கேரளா போலீசார், கோவை ரயில்வே போலீசாரிடம் தெரிவித்தனர். உடனே களத்தில் இறங்கியே கோவை ரயில்வே போலீசார் நேற்று மதியம் தேடுதல் வேட்டையில் இறங்கினர். ரயில்வே ஸ்டேஷன் கார் பார்க்கிங் பகுதியில் நின்றிருந்த இருவரையும் பிடித்த அவர்கள் கேரளா போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

நேற்று மாலை கோவை விரைந்த கேரளா போலீஸ் டி.எஸ்.பி., ராஜேஷ் தலைமையிலான போலீசார், இருவரையும் கேரளா அழைத்து சென்றனர். ரயில்வே போலீசாருக்கு பாராட்டு தெரிவித்தனர்.