BJP Jharkand

பாஜகவின் வாஷிங் பவ்டர் இப்போது கொலைகாரர்களை கூட சுத்தம் செய்கிறதா ?

ஜார்கண்ட் மாநில பள்ளி வார்டன் சுசித்ரா மிஸ்ரா கொலை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்துள்ள  சஷி பூஷண் மேத்தா பாஜகவில் சேர்ந்து மோடியுடன் இன்று (25-11-19) மேடையை பகிர்ந்து கொண்டார். சஷி பூஷன் கட்சியில் இணைவதை அமைதியான முறையில் எதிர்த்து போராடிய சுசித்ராவின் மகன்கள் கடந்த அக்டொபர் மாதம் பாஜக கட்சி தொண்டர்களால் தாக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ள நிலையிலும் கூட மோதி ஏன் இது குறித்து அமைதியாக இருக்கிறார்? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

கொலை செய்யப்பட்ட சுசித்ரா மற்றும் அவரது குடும்பத்தினர் பாஜக வை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது