Delhi Pogrom Islamophobia Muslims Students

டெல்லி: ஜாமியா மாணவி சஃபூரா கைது; ஊரடங்கின் போது அடுத்தடுத்து கைது செய்யப்படும் முஸ்லிம்கள்!

டெல்லியில் CAA,NRC,NPR சட்டங்களை திரும்ப பெற கோரி போராட்டத்தை இந்திய முழுவதும் கொண்டு செல்ல காரணமானவர்கள் டெல்லி ஜாமியா மாணவர்கள் அதில் குறிப்பாக யார் எல்லாம் முன் எடுத்தார்களோ அவர்களை இப்போது டெல்லி காவல்துறை திட்டமிட்டு கைது செய்து வருகிறது நான்கு நாட்களுக்கு முன்பாக சகோதரர் மீரான் ஹைதர் கைது செய்ய பட்ட நிலையில்..

நேற்று சனிக்கிழமை மாலை போராட்டத்தை பெண்கள் மத்தியில் மிக வேகமாக முன் எடுத்து சென்ற ஜாமியா பல்கலைக்கழக மாணவி சகோதரி சஃபூரா சர்கார் கைது செய்ய பட்டுள்ளார்.

ஜாமியா மாணவர்கள், சஃபூரா, மீரன் ஹைதர், ஆர்வலர்கள் காலித் சைஃபி, இஷ்ரத் ஜஹான் மற்றும் வடகிழக்கு டெல்லியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான அப்பாவி முஸ்லிம்கள் இட்டுக்கட்டப்பட்ட வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அரசு முஸ்லீம் சமூகத்தை இழிவுபடுத்துவதற்காக தொற்றுநோயைப் பயன்படுத்துகிறது. சமூகத்திலிருந்து ஜனநாயகக் குரல்களையும் எழுப்புபவர்களின் குரல்வளையை நசுக்குகிறது.

பாசிச பயங்கரவாதிகள் டெல்லி இனப்படுகொலைகளில் ஈடுபட்டுள்ளது அப்பட்டமாக வீடியோக்களில் பதிவு செய்யப்பட்டிருந்தும் கூட சஃபூரா மீது டெல்லி கலவரத்தில் ஈடுபட்டதாக கூறி விசாரணையை மேற்கொள்ள உள்ளனர் அமித் ஷா கட்டுப்பாட்டில் இயங்கும் டெல்லி போலீசார்.

ஊரடங்கு 144 தடை என மக்கள் கொரோனா வைரஸ் குறித்து அச்ச நிலையில் பொருளாதார மந்தம், பசியால் பட்னி சாவு, வாழ வழியில்லாமல் தற்கொலை, நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை கொடுக்க முடியாமல் நாடு திணறி கொண்டு இருக்கும் நிலையில்..

பாஜக டெல்லி காவல்துறை முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தெரிந்தே இப்படி மாணவர்களை தேடி தேடி இந்த சூழலில் கைது செய்வது உச்ச கட்ட அராஜகம் என்பது கண்டிக்க தக்கது உடனே மாணவர்கள் விடுதலை செய்ய வேண்டும் என்பதை அனைவரின் கோரிக்கை..