Hindutva Students

“கோட்ஸேவை போல ஜாமியா மாணவர் மீது துப்பாக்கி சூடு நடத்தியவரும் ஒரு தேசியவாதியே” – இந்து மகா சபா அறிவிப்பு..

ஜாமியா மாணவர்கள் மீது துப்பக்கிசூடு நடத்திய பயங்கரவாதிக்கு விரைவில் பாராட்டுக்கள் தெரிவிக்கப்படும் என இந்து மகா சபா இன்று அறிவித்துள்ளது. மேலும் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டவன் கோட்ஸேவை போல ஒரு உண்மையான தேசியவாதி எனவும் புகழாரம் (!) சூட்டியுள்ளது இந்து மகா சபா.

“ஜாமியா வில் நடைபெறும் தேசவிரோத செயல்பாடுகளை ஒடுக்கும் விதமாக ஜாமியா மாணவர்களுக்கு (துப்பாக்கி சூடு மூலம்) உடனடி அஸாதியை வழங்கிய வாலிபரை குறித்து நாங்கள் பெருமை கொள்கிறோம்” என்று இந்து மகாசபாவின் செய்தித் தொடர்பாளர் அசோக் பாண்டே பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இந்து மகாசபாவின் செய்தித் தொடர்பாளர் அசோக் பாண்டே

“தேச-விரோத செயல்களை தண்டிக்கும் முகமாக” துப்பாக்கி சூடு நடத்துவதை ஆதரித்து பேசிய பாண்டே, சட்டமும் கூட நாட்டின் நலனுக்காக ஒருவரை அழிப்பதற்கும் கொடூரமாக ஒருவரை கொல்வதற்கும் இடையில் வேறுபாடு காட்டுவதாக கூறியுள்ளார்.

இன்னும் பலர் கொல்லப்பட தகுதியானவர்கள்:

மேலும் அவர் கூறுகையில், “ஷர்ஜீல் இமாம், அலிகர் பல்கலை மாணவர்கள், ஷஹீன் பாகில் போராடி கொண்டிருப்பவர்கள் என இவர்கள் அனைவரும் சுட்டு தள்ளப்பட தகுதியானவர்கள்” என தெரிவித்துள்ளார்.

https://twitter.com/scribe_prashant/status/1223137825542918146

அதுமட்டுமின்றி துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட பயங்கரவாதிக்கு தேவையான சட்ட ரீதியான உதவிகளை செய்திட இந்து மகா சபா பொறுப்பேற்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

பயங்கரவாதிக்கு பகிரந்தகமாக ஆதரவு அளித்து வன்முறை பேச்சை பேசியுள்ள இவர் மீது எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. அருமையான புதிய இந்தியா பிறந்துவருகிறது.