Alleged Police Brutalities Hindutva Tamil Nadu

கோவை: போலீசார் வாகனத்தை சேதப்படுத்தியதால் இந்து முன்னணி உறுப்பினர் கைது!

கோவை: போலீஸ் வாகனத்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் செல்வபுரம் போலீசார் ஞாயிற்றுக்கிழமை இந்து முன்னணி சேர்ந்த உறுப்பினர் ஒருவரை கைது செய்தனர். இது குறித்து தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்ட ஒரு சிறிய கோயிலை இடிக்க சம்பவ இடத்திற்கு வந்த கோயம்புத்தூர் கார்ப்பரேஷன் அதிகாரிகளுக்கு எதிராக இந்து முன்னானியைச் சேர்ந்த 20 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் செல்வபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

காவல்துறையினர் போராட்டக்காரர்களை அகற்றி போலீஸ் வாகனத்தில் ஏற்றினர்.

வாகனத்தில் ஏற்றப்பட்டவர்களில் கார்த்திக் (24) என்பவர் போலீஸ் வாகனத்தின் உட்புறத்தை சேதப்படுத்தி உள்ளார். இதனால் போலீசார் இவர் மீது ஐபிசி பிரிவு 143 (சட்ட விரோதமான கூட்டத்தில் சேர்ந்திருப்பதற்கான தண்டனை) மற்றும் ஐபிசி பிரிவு 353 (வன்முறை செயலால் ஒரு பொதுஊழியரை தன்னுடைய கடமையை செய்யவிடாமல் தடுத்தல்) ஆகியவற்றின் கீழ் கார்த்திக் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்தது.

மேலும் தமிழ்நாடு சொத்து (சேதம் மற்றும் இழப்பு தடுப்பு) சட்டத்தின் பிரிவுகளிலும் இவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.மீதமுள்ள இந்து முன்னணி உறுப்பினர்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை விடுவிக்கப்பட்டனர்.