Article 370 Fake News Kashmir

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து குறித்து பொய் செய்தி வெளியிட்ட ஊடகங்கள்.!

பொய்களும், அரைகுறை உண்மைகளும் வேகமாகக் கவனம் பெற்றுவிடுவதன் அடையாளமே கீழ்கண்ட படம். இதனை ஆங்கிலத்தில் முன்னணி செய்தி தொலைக்காட்சியான இந்தியா டுடே எந்த ஆய்வும் செய்யாமல் வெளியிட அதனை சில தமிழ் ஊடகங்கள் செவ்வனே மொழியாக்கம் செய்து வெளியிட்டன. ஏன் இந்தப் படத்தில் பட்டியலிடப்பட்டுள்ள பல்வேறு தகவல்கள் தவறானவை அல்லது அரைகுறையானவை என அறிவோம். (I) காஷ்மீருக்கு என்று இரட்டைக் குடியுரிமை எல்லாம் இல்லை. இந்தியாவில் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இத்தகைய சிறப்புக் குடியுரிமை வழங்கப்படவில்லை. இந்தியா […]

pellet gun injuries kashmiris
Article 370 Kashmir Pellet Gun Injury

பெல்லட் குண்டுகளால் துளைக்கபடும் காஷ்மீரிகள்!

காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கியதிலிருந்து இதுவரை (மூன்று நாட்களில்) மொத்தம் 21 சிறுவர்கள்/ ஆண்கள் பெல்லட் குண்டுகளால் தாக்கப்பட்ட நிலையில் ஸ்ரீநகரின் பிரதான மருத்துவமனையில் (SMHS) அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பிரபல ஆங்கில ஊடகமான தி வயர் உறுதி செய்து செய்தி வெளியிட்டுள்ளது. மருத்துவமனையின் முக்கிய பொறுப்பாளர்கள் மீடியாவிற்கு எந்த விதமான தகவல்களையும் கொடுக்க மறுத்தாலும் மருத்துவமனையில் உள்ள ஒரு சில மருத்துவர்களும் செவிலியர்களும் கொடுத்த தகவலின்படி ஆகஸ்ட் 6 ஆம் தேதி13 நபர்கள் […]

kashmir
Article 370 Kashmir Pellet Gun Injury

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டபின் ஏற்பட்ட முதல் உயிர் இழப்பு!

பாலத்தின் இரு புறத்திலும் சி.ஆர்.பி.எஃ ப் படையினரால் துரத்தப்பட்டதில் நதியில் குதித்து மரணமடைந்த 17 வயது காஷ்மீர் சிறுவன். கடந்த திங்களன்று இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமித்ஷா காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக மக்களவையில் அறிவித்தார். அறிவிப்பதற்கு முன்பாகவே கஷ்மீரில் 144 தடை உத்தரவு, மேலும் கடுமையான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கில் ராணுவத்தினரும் குவிக்கப்பட்டிருந்தனர். மக்கள் பெரும் அச்சத்திலும் மூழ்கியிருந்தனர். இந்த நாளில் தான் 17 வயது சிறுவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அமித்ஷா அறிவிப்பை […]

samjotha express
Article 370 Kashmir Pakistan

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கியதால் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை பாகிஸ்தான் அரசு ரத்து செய்துள்ளது !

1976 ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் லாஹூர் -தில்லி மத்தியிலான சம்ஜோதா எக்ஸ்பிரஸ் சேவையை பாக்கிஸ்தான் முற்றிலுமாக நிறுத்தி உள்ளது – பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் ஷேய்க் ரஷீத் அறிவிப்பு இந்திய அரசு காஷ்மீர் மக்களுடன் செய்திருந்த ஒப்பந்தத்தை ஜனநாயக விரோதமாக நீக்கிவிட்டதாக பாகிஸ்தான் அரசு குற்றம் சாட்டியுள்ளது. இதனை தொடர்ந்து இந்தியாவுடனான வர்த்தக முறிவு அறிவிப்பை வெளியிட்டது. அதற்க்கு அடுத்தபடியாக புதன்கிழமையன்று பாகிஸ்தான் ரயில்வே அமைச்சரான ஷேய்க் ரஷீத் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் […]

shah faisal kashmir
Kashmir

சற்றுமுன்: காஷ்மீரில் தற்போதுள்ள நிலையை வெளியிட்ட ஷா ஃபைசல்!

“கிட்டத்தட்ட 8 முதல் 10 ஆயிரம் மக்களின் உயிரிழப்பு ஏற்படும் என்பதற்கேற்ப அரசு தயாராக உள்ளது என்று பேசப்படுகிறது. எனவே நாம் பகுத்தறிவுடன் செயல்பட வேண்டும். இவர்களுக்கு வாய்ப்பளிக்காமல் இருப்பதன் மூலம் கொத்துக் கொத்தாக மக்கள் கொல்லப்படுவதை தவிர்த்திட வேண்டும். “ ஷா ஃபைசல் காஷ்மீரின் முன்னாள் (IAS) மாவட்ட ஆட்சியராக பணி புரிந்தவர். பின்னாளில் காஷ்மீர் மக்களின் உரிமைகளுக்கு போராட பணியை ராஜினாமா செய்து விட்டு, அரசியல் கட்சியை துவங்கினார். இவர் காஷ்மீரின் மக்களின் அடுத்த […]

amit shah lies loksabha
Amit Shah Farooq Abdhullah Kashmir

‘அமித்ஷா பொய் பேசுகிறார்’.. நான் வீட்டுக் காவலில் அடைக்கபட்டுள்ளேன்: ஃபரூக் அப்துல்லா

மக்களவையில் பாஜக சட்டப்பிரிவு 370 ஐ நீக்கம் செய்வதாக அறிவித்தது. அப்போது பேசிய , அமித்ஷா பேசும் போது, ஃபரூக் அப்துல்லா கைது செய்யப்படவோ, வீட்டுக்காவலில் வைக்கப்படவோ இல்லை என்று கூறினர். இதுகுறித்து என்டிடிவி-க்கு மூத்த அரசியல் தலைவரும் , முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா அளித்த பேட்டியில், நான் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளேன். உள்துறை அமைச்சர் இதுபோன்று பொய் பேசுவது வருத்தம் அளிக்கிறது என்று அவர் தெரிவித்தார். “காஷ்மீரே பற்றி எரிந்து கொண்டிருக்க, என் மக்கள் சிறைச்சாலைகளில் […]