Assam BJP Hindutva Islamophobia Muslims

அசாம் : புல்டோசர் மூலம் இடிக்கப்பட்ட மதரசா !

அசாம்: பாஜக ஆளும் அசாமில் மொய்ராபரி பகுதியில் அண்மையில் கைது செய்யப்பட்ட முப்தி முஸ்தபா நடத்தி வந்த ஜாமியுல் ஹுதா மதரஸா அதிகாரிகளால் வியாழக்கிழமை இடிக்கப்பட்டது. இந்த மதரஸா 2018 முதல் செயல்பட்டு வந்தது. பங்களாதேஷை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான அன்சார் அல்-இஸ்லாமுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி, மொய்ராபரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட மொரிகாவ்ன் மாவட்டத்தின் சஹாரியா கிராமத்தில் இருந்து முப்தி முஸ்தபா காவல்துறையினரால் ஜூலை 28 அன்று கைது செய்யப்பட்டார். மோரிகான் மாவட்ட காவல்துறை […]

BJP Hindutva Karnataka Law and Order

கர்நாடகா: ‘காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருந்தால் நாம் கற்களை வீசி எறிந்திரிருக்கலாம் ! ‘ – பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா ஆதங்கம் !

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருந்தால், பாஜகவின் யுவ மோர்ச்சா உறுப்பினர் பிரவீன் நெட்டாருவின் கொலைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், பாஜகவினர் பொதுச் சொத்துக்களை அடித்து நொறுக்கி இருக்கலாம் என எம்.பி.யும், பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா தலைவருமான தேஜஸ்வி சூர்யா பேசும் ஆடியோ கிளிப் பரவலாகப் பகிரப்பட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வியாழக்கிழமை சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்ட அந்த ஆடியோ கிளிப்பில், பாஜக கட்சித் தொண்டர்கள் பெருமளவில் எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக ராஜினாமா செய்வதை நிறுத்துமாறு சிக்கமகளூரு […]

Hindutva Muslims Tamil Nadu

இறைச்சி கடை வைக்க இந்து முன்னணியினர் எதிர்ப்பு; கடையை மூடிய மாவட்ட நிர்வாகம் !

சேலம், அன்னதானப்பட்டி, சண்முகா நகரில் பாதுஷா மைதீன், 28, என்பவர் மாலை நேரத்தில் மாட்டிறைச்சி சில்லி கடை நடத்தி வந்தார். வட மாநிலங்களை போல தமிழ் நாட்டில் மாட்டிறைச்சி விற்க எந்த தடையுமில்லை. இந்து மக்களும் இவரது கடைக்கு வாடிக்கையாளர்களாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. எனினும் இந்து முன்னணியினர் அருகில் முனியப்பன் கோவில் உள்ளதாக கூறி அங்கு வந்து எதிர்ப்பு தெரிவித்து பிரச்சனை செய்ததால் பாதுஷாவின் கடை தற்போது மூடப்பட்டு விட்டது. 28-07-22 அன்று இரவு அசம்பாவிதத்தை […]

Hindutva Islamophobia Love Jihad Conspiracy Muslims Uttar Pradesh

முஸ்லிம் தொழிலதிபரை லவ் ஜிஹாத் & கற்பழிப்பு வழக்கில் சிக்க வைக்க ‘செட்டப்’ செய்யப்பட்ட பெண் !

உபி: டெல்லியைச் சேர்ந்த 24 வயது இந்துப் பெண், உத்தரப் பிரதேசத்தில் உள்ள கஸ்கஞ்சைச் சேர்ந்த 27 வயது முஸ்லீம் தொழிலதிபரை போலி கற்பழிப்பு மற்றும் ‘லவ் ஜிஹாத்’ வழக்கில் சிக்க வைக்க இரண்டு நபர்கள் ‘தன்னை பணியமர்த்தியதை’ ஒப்புக்கொண்டுள்ளார். அமன் சவுகான் (34) மற்றும் ஆகாஷ் சோலங்கி (28) என அடையாளம் காணப்பட்டுள்ள அந்த இருவரில் ஒருவரான அமன் “பாஜக இளைஞர் பிரிவின் மாவட்ட துணைத் தலைவர்” என்று அவரது முகநூலில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தி டைம்ஸ் […]

Christians Hindutva Karnataka

கர்நாடகா: கிறிஸ்தவ குடும்பத்தார் வீட்டிற்குள் புகுந்து பைபிளை எரித்த இந்துத்துவா கும்பல் !

பாஜக ஆளும் கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள மல்லேனு கிராமத்தில் (ஹிரியூர் தாலுகா) செவ்வாய்க்கிழமை மாலை இந்துத்துவாவினர் ஒரு வீட்டுக்குள் புகுந்து பைபிளை தீ வைத்து எரித்துள்ளனர். ஏகாந்தம்மா என்ற 62 வயது மூதாட்டியின் வீட்டிற்குள் நுழைந்த நான்கு பேர் கொண்ட கும்பல், வீட்டில் ஏன் பிரார்த்தனை நடத்துகிறீர்கள் என அங்கிருந்தவர்களை மிரட்டி பைபிளை எரித்துள்ளனர். இது குறித்து இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது. சித்ரதுர்கா எஸ்.பி., பரசுராமன் கூறுகையில், ” 62 வயதான மூதாட்டி […]

BJP Hindutva Malaysia Muslims Prophet Muhammad

மலேசியா : முருகன் கோவில் முன் நின்று நுபுர் சர்மாவுக்கு ஆதரவு தெரிவித்தும், இந்து ராஷ்டிரம் கோரியும் வீடியோ வெளியிட்ட நபர்கள் கைது !

முஹம்மத் நபி குறித்து இழிவாக பேசிய முன்னாள் பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் நுபூர் சர்மாவுக்கு ஆதரவாக மலேசியாவில் உள்ள (Batu caves) பத்து குகைகளில் நின்று கொண்டு ஆதரவு தெரிவிக்கும் காணொளி டிக்டோக்கில் வைரலால் ஆனதை தொடர்ந்து நான்கு நபர்களை மலேசிய போலீசார் கைது செய்துள்ளனர். 18 வினாடிகள் கொண்ட இந்த வீடியோவில், இந்தியாவிலும் நேபாளிலும் இந்து ராஷ்டிரம் கோரியும், நுபுர் ஷர்மாவின் நபிகளார் குறித்தான இழிவான பேச்சுக்கு ஆதரவு தெரிவித்தும் பேசப்பட்டுள்ளது.முருகன் கோவிலில் நின்று […]

Fascism Germany Hindutva Modi

ஜெர்மனி : “மோடி ஆட்சியின் பாசிசம் மற்றும் சர்வாதிகாரத்திற்கு எதிராக” போராட்டத்திற்கு அழைப்பு !

விளாடிமிர் புடின் தலைமையிலான ரஷ்ய படைகள் உக்ரைன் மீது போர் தொடுத்த காரணத்தால் உலக நாடுகள் பல ரஷ்யா மீது தடை விதித்து, கண்டனமும் தெரிவித்தது. ஆனால் இந்தியா ரஷ்யா மீது எவ்விதமான தடையும் விதிக்கவில்லை. இந்நிலையில் 48வது ஜி7 மாநாட்டை நடத்த உள்ள ஜெர்மனி, பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளது, அங்குள்ள ஜனநாயக அமைப்புகளிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து இந்தியா சாலிடாரிட்டி நெட்வொர்க், (வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் – என்ஆர்ஐ அமைப்பு) ஜெர்மனியின் […]

Hate Speech Hindutva Muslims

முஸ்லிம் வெறுப்பு பிரசாரத்தில் முன்னிலை வகிக்கும் ‘ஹிந்துத்துவா பாப்’ இசை பாடல்கள் !

புது தில்லி, இந்தியா – “இன்சான் நஹி ஹோ சாலோ, ஹோ தும் கசாயி; “பஹுத் ஹோ சுகா ஹிந்து முஸ்லிம் பாய் பாய்” – நீங்கள் மனிதர்களே அல்ல, கசாப்புக் கடைக்காரர்கள்; இந்த இந்து-முஸ்லிம் சகோதரத்துவம் எல்லாம் போதும். பாடகர் பிரேம் கிருஷ்ணவன்ஷி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு யூடியூப்பில் வெளியிட்ட ஒரு ‘பஜன்’ (பக்தி பாடல்) பாடல் வரிகள் இவை. சமகால வெறுப்பு அரசியலால் தூண்டப்பட்டு, கிருஷ்ணவன்ஷியின் பாடல் இந்தியாவில் ஒரு புதிய வெகுஜன கலாச்சாரத்தின் […]

Crimes against Children Hindutva Tamil Nadu

திருச்சி:மாணவிகள் முன்பு நிர்வாணமாக நின்ற இந்து மக்கள் கட்சி நிர்வாகி கைது !

திருச்சி: திருச்சி பொன்மலையில் தனியார் பள்ளியில் மாணவிகள் முன்பாக ஆடையின்றி நிர்வாணமாக நின்றதற்காக இந்து மக்கள் கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் ராஜ்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சி பொன்மலையில் இயங்கி வரும் தனியார் பள்ளி ஒன்றின் மாணவிகள் முன்பாக நிர்வாணமாக நின்றதாக ராஜ்குமார் என்பவர் குறித்து மாணவிகளின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து பொன்மலை போலீசாரிடம் பெற்றோர் புகார் தெரிவித்தனர். இப்புகாரின் பேரில் இந்து மக்கள் கட்சி நிர்வாகி ராஜ்குமார் கைது செய்யப்பட்டார். மேலும் கைது செய்யப்பட்ட ராஜ்குமார் இந்து […]

Hindutva Karnataka Mughals Muslims

திப்பு சுல்தானின் அரண்மனை கோவில் நிலத்தில் கட்டப்பட்டதாம் !

கர்நாடகாவில் உள்ள திப்பு சுல்தானின் கோடைகால அரண்மனை கோவில் நிலத்தில் கட்டப்பட்டது என இந்துத்துவா அமைப்பு கூறியுள்ளது. நிலத்தின் உரிமையை கோவிலுக்கு மாற்ற வேண்டும் என இந்து ஜனஜக்ருதி சமிதி அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளது. கர்நாடகாவின் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் உள்ள 18ஆம் நூற்றாண்டின் மைசூர் ஆட்சியாளர் திப்பு சுல்தானுக்குச் சொந்தமான கோடைகால அரண்மனை கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் கட்டப்பட்டதாகக் கூறி, அதை ஆய்வு செய்ய வேண்டும் என்று இந்துத்துவா அமைப்பினர் வியாழக்கிழமை கோரியதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. […]

Hindutva Mosques Muslims

குல்பர்கா கோட்டையில் கோயிலை மீட்டெடுக்க வேண்டும் இந்துத்துவா அமைப்புகள் கோரிக்கை !

இந்து ஜாக்ருதி சேனா அமைப்பினர் திங்கள்கிழமை கர்நாடக மாநிலம் குல்பர்காவில் உள்ள துணை ஆணையரிடம் பஹாமனி கோட்டையில் சிவன் கோவில் ஒன்றை கண்டுபிடித்துள்ளதாகவும், அங்கு பூஜை செய்ய அனுமதி கோரி மனு அளித்ததுள்ளனர். கல்புர்கி மாவட்டத்தில் 57 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பஹ்மானி கோட்டை, பஹ்மனி சுல்தானகத்தின் ஆட்சியாளரான ஹசன் பஹ்மானி ஷாவால் கட்டப்பட்டது. கோட்டைக்குள் ஜாமியா பள்ளிவாசல் ஒன்றும் உள்ளது. சோமலிங்கேஸ்வரர் கோவிலை இடித்து பஹ்மனி ஆட்சியாளர்கள் கோட்டையை கட்டியதாக இந்துத்துவ அமைப்புகள் கூறுகின்றன. கோட்டையின் […]

Hindutva Karnataka Mosques Muslims

கர்நாடகா: 800 ஆண்டு பழமையான பள்ளிவாசலை சொந்தம் கொண்டாட முயலும் விஎச்பி ..

முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள் ஒவ்வொன்றாக அபகரிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வரும் வரிசையில் விஷ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி) மங்களூருவின் மலாலியில் உள்ள 800 ஆண்டுகள் பழமையான பள்ளிவாசலின் வளாகத்தில் ‘தாம்பூல பிரஸ்னா’ என்ற வெற்றிலை ஜோதிட முறையை மே 25 அன்று மேற்கொள்ள முடிவு செய்துள்ளது. கோயில் ஆக்கிரமிப்புக்குப் பிறகு மசூதி கட்டப்பட்டதா என கேரளாவைச் சேர்ந்த பிரபல ஜோதிடரை அணுகி ‘தாம்பூல பிரஸ்னா’ (வெற்றிலை ஜோசியத்தின்) மூலம் ஆய்வு (!) செய்ய திட்டமிட்டுள்ளதாக விஎச்பி வட்டாரங்கள் தெரிவித்தன. […]

bajrang dal
Gyanvapi Mosque Hindutva

‘கியான்வாபி பள்ளியில் தொழும் முஸ்லிம்களின் தலையை வெட்டுவோம்’ : பஜ்ரங் தள் உறுப்பினர் மிரட்டல்!

கியான்வாபி மசூதியில் தொழுகை நடத்தும் இஸ்லாமியர்களை கொலை செய்யப்போவதாக பஜ்ரங் தள் தொண்டர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார். இரண்டு நாட்களாக இணையத்தில் பரவி வரும் வீடியோ ஒன்றில், உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் வசிக்கும் பண்டிட் ரவி சோங்கர் என்ற வலதுசாரி நபர் தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் வன்முறைக்கு அழைப்பு விடுத்துள்ளார். “இந்த மக்கள் (முஸ்லீம்கள்) பல ஆண்டுகளாக தங்கள் அழுக்கு கைகளையும் கால்களையும் சுத்தம் செய்ய எங்கள் சிவலிங்கத்தைப் பயன்படுத்தியது வருத்தமளிக்கிறது. அவர்களின் தலைகளை வெட்டுவோம்” […]

Hindutva Muslims Uttar Pradesh

உபி: 20 நாட்கள் ஆகியும் கடத்தப்பட்ட சையதாவை கண்டுபிடிக்க முடியாமல் திணறும் உபி போலீஸ்.. !

உபி: கடந்த ஏப்ரல் 25 அன்று, உத்தரபிரதேசத்தின் சித்தார்த்நகரில் உள்ள எட்வாவில் ரம்ஜான் ஸஹர் உணவு உண்ணும் நேரத்தில் தனது வீட்டைச் சுற்றியுள்ள வயலுக்குச் சென்றபோது, சோனி (24) என்ற சையதா காதுன், பிரேந்திர குமார் மற்றும் அவனது நண்பர்களால் கடத்தப்பட்டதாக பெண்ணின் குடும்பத்தாருக்கு தகவல் கிடைத்துள்ளது. காலை 6 மணியளவில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் குடும்பத்தினரை போனில் அழைத்து, முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்ய வேண்டாம் என்று மிரட்டியதாகவும், சம்பவம் குறித்து கிராம மக்களுக்கு […]

Muslim Man, Family Attacked By Mob In Kolar
Hindutva Islamophobia Karnataka Lynchings Minority Muslims

கர்நாடகா: புர்காவை கழற்ற சொல்லி கொடூர தாக்குதலில் ஈடுபட்ட மதவெறி கும்பல்!

சனிக்கிழமையன்று பாஜக ஆளும் கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தில் மதவெறி கும்பல் ஒன்று ஆறு முஸ்லிம் ஆண்கள் மீது கொடூரமான தாக்குதலில் ஈடுபட்டனர். அருகில் உள்ள ஒரு தர்காவிற்கு சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்த ஒரு முஸ்லீம் குடும்பத்தின் காரை ஒரு மதவெறி கும்பல் தடுத்து நிறுத்தி, வாகனத்தின் உள் இருந்த பெண்களிடம் “புர்காவைக் கழற்றுமாறு” கூறியதை அடுத்து இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது, இதில் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்புக்கு வழிவகுத்தது. தாக்குதலில் ஈடுபட்டவர்கள் எஃப்ஐஆர்: தாக்குதல் நடத்தியவர்கள் […]