Actors BJP Tamil Nadu

பள்ளிவாசல் முன் நின்று வாக்குசேகரிப்பு ; பாஜக வேட்பாளர் குஷ்பு மீது வழக்குப்பதிவு !

சென்னை: தேர்தல் நடத்தை சட்டத்தை மீறி வெள்ளிக்கிழமை மசூதி முன் பிரச்சாரம் செய்ததாக நடிகரும் பாஜக வேட்பாளருமான (ஆயிரம் விளக்குகள் தொகுதி) குஷ்பு சுந்தர் மீது கோடம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தேர்தல் பிரச்சார விதிமுறைகளை மீறி நடிகை குஷ்பு பள்ளிவாசலுக்கு முன், அவரும் அவரது ஆதரவாளர்களும் முறையான அனுமதியைப் பெறாமல் துண்டு பிரசுரங்களை விநியோகிப்பதை கண்ட தேர்தல் பறக்கும் படை அதிகாரி ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இது குறித்து புகாரைப் பெற்ற, கோடம்பாக்கம் காவல்துறையினர் குஷ்பு மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கும் எதிராக இந்திய தண்டனை சட்டம் பிரிவு 143 (சட்ட விரோதமான கூட்டத்தில் பங்கெடுத்தல்) மற்றும் 188 (பொதுப் பணியாளரால், முறைப்படி பிரகடனப்படுத்தப்பட்ட உத்தரவிற்கு கீழ்ப்படியாமை) பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தனர்.