Bihar Lynchings States News

பீகாரில் கால்நடையை கடத்த வந்ததாக சந்தேகித்து மூன்று நபர்கள் அடித்து கொலை !

சமீப காலமாக வடஇந்தியாவில் மக்கள் சட்டத்தை தங்கள் கையில் எடுத்து கொண்டு கும்பல் வன்முறையில் ஈடுபடுவது வாடிக்கையாகிவிட்டது.

பீகார் மாநிலத்தின் பனியாபூர் பகுதியில் (இன்று ) வெள்ளிக்கிழமை (19.7.19)காலை கால்நடைகளை கடத்த வந்தவர்கள் என்று சந்தேகித்து மூன்று பேரை ஊர் மக்களில் ஒரு கும்பல் அடித்து கொன்றுள்ளனர்

பனியாபூர் காவல் நிலையத்தின் கீழ் உள்ள பைகம்பர்பூர் கிராமத்தில் அதிகாலை வேலையில் இந்த சம்பவம் நடந்தது.

இறந்தவர்கள் ராஜு நாத் , பைட்ஸ் நாத் மற்றும் நவ்ஷாத் குரேஷி என அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு ஹர் கிஷோர் ராய் தெரிவித்தார். அவர்களில் இருவர் சம்பவ இடத்திலேயே இறந்தனர், மற்றொருவர் அவரது குடும்ப உறுப்பினர்களால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது அவருக்கு ஏற்பட்ட கடுமையான காயங்களால் இறந்தார்.

சம்பவ வீடியோவில் இறந்தவரின் குடும்ப உறுப்பினர்கள் அழுதுகொண்டிருப்பதைக் காணமுடிகிறது.. இறந்தவர்களில் இருவர் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர்கள். கும்பலால் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர் கிராம மக்களுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர். இறந்தவர்கள் மீது கிராமவாசிகளும் திருட்டு வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சடலங்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், விசாரணை நடந்து வருவதாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.

பீகார் மாநிலத்தில் பாஜக கூட்டாட்சி நடந்து வருவது குறிப்பிடத்தக்கது