pragya terror accused
Indian Judiciary NIA Pragya Thakur

பிரக்யா சிங் மீதான குண்டுவெடிப்பு விசாரணையை மீடியா வெளியிடாமல் இருக்க -நீதி மன்றத்தில் NIA மனு தாக்கல்!

File photo   –  PTI மகாராஷ்டிர மாநிலம் மாலேகான் நகரில் உள்ள பள்ளிவாசலில் 2008-ம் ஆண்டு நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 10 வயது சிறுமி உள்பட 6 பேர் பலியாகினர். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். அபிநவ் பாரத் என்ற இந்துத்துவ அமைப்பு இந்த வெடிகுண்டு சம்பவத்தை நிகழ்த்தியது. இந்த அமைப்பை இராணுவ புலனாய்வு அமைப்பைச் சேர்ந்த பிரசாத் ஸ்ரீகாந்த புரோஹித் என்பவர் தொடங்கினர். ஆரிய வர்த்தம் அல்லது இந்து ராஷ்டிரத்தை நிறுவும் பொருட்டு இந்த பயங்கரவாத அமைப்பு […]

BJP Students Tamil Nadu

பாஜகவினரை விரட்டியடித்த அண்ணாமலைப் பல்கலை மாணவர்கள் !

பாஜக-வில் இணையுங்கள், ‘ஒரு மிஸ்டுகால்’ கொடுங்கள் என தொலைக்காட்சி, வானொலி என எங்கு பார்த்தாலும் தற்போது பாஜக-விற்கு ஆள் சேர்க்கும் வேலை முழு வீச்சுடன் நடைபெற்று வருகிறது . அதன் ஒரு பகுதியாக மாணவர்கள் மத்தியிலும் ஆள் சேர்க்க முயன்று வருகிறது பாஜக . அந்த வகையில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உறுப்பினர் சேர்க்கை செய்ய வந்த பி.ஜே.பி.-யை எதிர்த்து புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழக அனைத்து மாணவர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் […]

muslim youth attacked gujarat
Forcing Shri Ram Gujarat Islamophobia Lynchings

குஜராத்தில் ஜெய் ஸ்ரீராம் கோஷமிட மறுத்ததால் 3 முஸ்லீம் மாணவர்கள் மீது குண்டர்கள் தாக்குதல்- போலீசார் வழக்கை திசை திருப்பவும் முயற்சி!

ஆகஸ்ட் 1 ஆம் தேதி இரவு 11 மணியளவில் குஜராத்தின் பஞ்சமஹால் மாவட்டத்தில் கோத்ராவில் மூன்று முஸ்லீம் மாணவர்கள் குண்டர்களால் தாக்கப்பட்டுள்ளனர். தாக்குதலை தொடர்ந்து சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மூன்று நண்பர்கள், சமீர் ஹபீஸ் ஃபகத், சோஹல் ஹபீஸ் பகத் மற்றும் சல்மான் ஆகியோர் தேநீர் அருந்துவதற்காக இரவில் வெளியே சென்றிருந்தபோது, சுமார் ஆறு அல்லது ஏழு ஆண்கள் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று கோஷமிடுமாறு கட்டாயப்படுத்தி பிறகு கூற மறுத்ததால் கொடூரமாக தாக்கியுள்ளனர்.மூன்று முஸ்லீம் […]

shcolarship 2019
Scholarship Union Government

மத்திய அரசின் சிறுபான்மையினருக்கான கல்வி உதவி தொகை விண்ணப்பிக்க கடைசி நாள் 15-10-2019

தனியார் மற்றும் அரசு பள்ளி / கல்லூரிகளில் கல்வி பயிலும் முஸ்லீம், கிறித்துவ, சீக்கிய மற்றும் பிற சிறுபாண்மை மாணவர்களுக்கு மத்திய அரசு ஆண்டு தோறும் குறிபிட்ட அளவில் கல்வி உதவி தொகை வழங்கிவருகின்றது. இதற்க்கு தற்போது விண்ணப்பிக்கலாம், அதன் விபரங்களை பார்ப்போம். பொருளாதாரத்தில் பின் தங்கிய சிறுபாண்மை மாணவர்களுக்கு Pre-matric, Post-matric, மற்றும் MERIT CUM MEANS ஆகிய மூன்று விதமான கல்வி உதவித் திட்டத்தை மத்திய அரசு வழங்கி வருகின்றது. விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இந்த […]

Modi National Security Pulwama

புல்வாமா தாக்குதலின் போது மேன் vs வைல்ட் படப்பிடிப்பில் மோடி !- நெட்டிசன்கள் சாடல்

மேன் Vs வைல்ட் என்ற பிரபல டிஸ்கவரி தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி உத்தரகண்ட் மாநிலத்தின் ஜிம் கார்பெட் தேசிய பூங்காவில் படமாக்கப்பட்டதை டிஸ்கவரி சேனல் திங்களன்று உறுதிப்படுத்தியது. இரண்டிற்கும் ஒரு முக்கிய காரணம் உண்டு.சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஊக்குவிக்கும் ஒரு நல்ல நோக்கத்துடன் கூடிய நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பதில் தவறு எதுவும் இல்லை.இருப்பினும், எபிசோட் எப்போது படமாக்கப்பட்டது என்று டிஸ்கவரி தொலைக்காட்சியும் கூறமருக்கிறது, இந்திய அரசும் இதை குறித்து எந்த தகவலும் வெளியிடுவதாக இல்லை. புல்வாமா […]

Jharkand Rape States News

ஜார்கண்டில் 3 வயது குழந்தையை கடத்தி,கூட்டு பலாத்காரம் செய்து,தலை துண்டித்து கொன்றுள்ளனர் ஈன பிறவிகள்.

Image used for representational purposes -istock கடந்த ஜூலை 27 ஆம் தேதி அன்று ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஜம்ஷெத்பூர் டாடா நகர் ரயில் நிலையத்தில் தன் தாயுடன் உறங்கி கொண்டிருந்த 3வயது சிறுமியயை இரண்டு கயவர்கள் கடத்தி சென்று கூட்டு பலாத்காரத்தில் ஈடுபட்ட பின்னர் அப்பச்சிளம் குழந்தையை கழுத்தை நெரித்து கொன்று, தலையை துண்டித்துள்ளனர். கடந்த செவ்வாய்கிழமை (ஜூலை 30) இரவு ரயில் நிலையத்திலிருத்ந்து 4 கி.மீ தூரத்தில் சேரிகளுக்கு அருகே புதருக்கு பின்னால் […]

Hindutva Islamophobia

உணவு கொண்டு வருபவர் விஷயத்திலும் மதம் பார்த்த ஷுக்லா ட்விட்டர் கணக்கை மூடி விட்டு ஓட்டம் !

#முஸ்லிம் ஒருவர் உணவு கொண்டு வருவதால் #சோமாட்டோ வில் ஆர்டரை ரத்து செய்த மோடி ஆதரவாளர் பண்டிட் ஷுக்லா கடுமையான விமர்சனங்களை சமாளிக்கமுடியாமல் , தற்போது #ட்விட்டரில் தனது கணக்கை மூடி உள்ளார். இதற்கு காரணம் அவரின் பிரிவினை தூண்டிய ட்வீட் மட்டும் அல்ல மாறாக அவர் ஒரு பெண்ணின் மார்பு குறித்து அருவருக்க தக்க வகையில் கமெண்ட் செய்தது வைரல் ஆனதும் தான் என்று நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். https://twitter.com/namo_sarkaar #zomato #Shukla #twitterAccountDeactivated #Women

Corporates Tribals

ஒடிசாவில் வேதாந்தா குழுமத்தை எதிர்த்து போராடும் மலைவாழ் மக்கள்!45 பேர் மீது வழக்கு பதிவு!

கார்ப்பரேட் நிறுவனமான வேதாந்தாவின் பாக்சைட் சுரங்கத்திற்கு எதிரான பழங்குடி போராட்டம் ஒடிசாவின் கோடிங்கமலி மலையின் 22 கிராமங்களில் தீவிரமடைந்து வருகிறது. ஊர் மக்கள் பாக்சைட் சுரங்கவேலைகலை நிறுத்துமாறு ஐந்து நாட்களாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர், அதைத் தொடர்ந்து கிராமசபையின் புதிய கூட்டம் தொடங்கவுள்ளது. நாளுக்கு நாள் ஆர்ப்பாட்டங்கள் வீரியம் அடைந்து வருவதால் இதனை தடுக்கும் விதமாக அம்மாநில அரசாங்கம் அப்பகுதியில் 45 மலைவாழ் மக்கள்(பழங்குடியினர்) மீது சட்டம் ஒழுங்கை சீர்குலைத்ததாக வழக்குகளை பதிவு செய்துள்ளது. அப்பகுதியில் பழங்குடியினருடன் பணியாற்றி […]

Islamophobia

முஸ்லிம் உணவு கொண்டு வருவதால் உணவை கேன்சல் செய்த மோடி ஆதரவாளர்-சோமேடோ நிறுவனம் “பளார்” பதிலடி!

மத்தியப் பிரதேச மாநிலம், ஜபல்பூரைச் சேர்ந்த பண்டிட் அமித் சுக்லா, கடுமையான மோடி ஆதரவாளர். இவர் தனது ட்விட்டர் யூசர் நேமாக வைத்துள்ளதும் @NaMo_SARKAAR என்பது தான். மேலும் இவரின் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்ட மதத்தினருக்கு எதிராக மட்டுமே பல்வேறு பதிவுகள் உள்ளன, அதிலும் பெரும்பான்மை பொய் (fake news ) செய்திகளாக உள்ளன. உதாரணமாக .. உதாரணமாக இவரின் இந்த ட்வீட். இதில் உண்மை செய்திகளை பொய் என்று மறுத்து பதிவு செய்துள்ளார். குறிப்பு : […]

zakir naik
Fact Check Fake News NIA

“ஜாகிர் நாயக் மலேசியாவை விட்டு வெளியேற அதிரடி உத்தரவு”- பொய் செய்தியை வெளியிட்ட CNN நியூஸ்18 ஊடகம்.

Picture credit: network18 இந்தியாவின் பிரபலமான ஊடகங்களில் ஒன்றுதான் CNN நியூஸ்18. இந்த ஊடகம் பிரபல ஊடகவியலாளர் ராஜ்தீப் சர்தேசாய் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. பின்னாளில் நெட்வொர்க் 18ஆல் வாங்கப்பட்டது. ஆளும் அரசாங்கத்திற்கு சார்பாக செய்தி வெளியிடும் வட இந்திய தொலைக்காட்சிகளில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது. அதே சமயம் தமிழில் இதே ஊடகம் நடுநிலையான ஊடகமாக பார்க்கப்படுகிறது. இவ்வாறு நியூஸ் 18 ஊடகம் பொய் செய்தி வெளியிடுவது இதுவே முதல் முறை இல்லை. இந்நிலையில் நேற்று ஜூலை 29 […]

Hindutva Lynchings Uttar Pradesh

“ஜெய்ஸ்ரீராம்” கூற மறுத்து “அல்லாஹூ” வையும் திட்ட மறுத்ததால் உயிருடன் கொளுத்தப்பட்ட 15 வயது முஸ்லிம் சிறுவன் மரணித்தார் -உபி யில் காட்டுமிராண்டி சம்பவம்

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று காலை காலித் அன்சாரியை (15 வயது)  “துதாறி” பாலத்தருகே 4 நபர்கள் முகங்களை மூடிய நிலையில் கடத்தி சென்று அவர் மீது கிரோசின் ஊற்றி கொளுத்தி உள்ளனர். இந்த காட்டுமிராண்டிதனமான  சம்பவத்தில் மரணித்த அந்த சிறுவன் கூறியவைகள்: 4 பேரில் இருவர் என்னுடைய கைகளை பிடித்துக் கொண்டனர். அனைவருடைய முகங்களும் துணிகளால் மறைத்து வைத்திருந்தனர்.அதில் ஒருவன் “சுனில் இவன் மீது மண்ணெண்ணையை ஊற்றி தீயை பற்றவை, இதனால் இவன் தானாகவே இறந்துவிடுவான்”  என்று […]

beef arrest tamil nadu
Gaumata Hindutva Tamil Nadu

இந்துத்துவ அமைப்பை எதிர்த்து சவால் விட்டதால் திவிக நிர்வாகி கைது!

சனிக்கிழமையன்று(27-7-19) கோவை காட்டூர் போலீசார் திராவிடர் வி டுதலை கழக (திவிக)மாவட்ட செயலாளர் நிர்மல் குமார் (30) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். முன்னதாக “மாட்டுக்கறி உணவு உரிமை” குறித்து ஃபேஸ்புக் பக்கத்தில் இவர் ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தார். அவாரம்பாளையத்தைச் சேர்ந்த வி.மணிகண்டன் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இம்மாத ஜூலை 11 ம் தேதி நாகப்பட்டினத்தில் உள்ள போர்வாச்சேரியில் முஸ்லீம் வாலிபர் மாட்டுக்கறி சூப்பு சாப்பிட்டதற்க்காக அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. […]

Intellectual Politicians Modi

“1977லேயே முன்னாள் பிரதமர் சந்திரசேகரை சந்தித்தேன்” -மோடி; நெட்டிசன்கள் கலாய்ப்பு !

Picture Credit- Republic ஜூலை 24ம் தேதி பிரதமர் மோடி முன்னாள் பிரதமர் சந்திர சேகர் குறித்த மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் மற்றும் ரவி தத் பாஜ்பாய் ஆகியோர் எழுதிய புத்தகத்தை நாடாளுமன்ற ஆடிட்டோரியத்தில் வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், 1977 ல் முன்னாள் பிரதமர் சந்திர சேகரை முதன்முதலில் சந்தித்ததை நினைவு கூர்ந்தார். “நான் அவரை டெல்லி விமான நிலையத்தில் சந்தித்தேன், அப்போது நான் பைரோன் சிங் சேகாவத் ஜியுடன் பயணம் செய்து கொண்டிருந்தேன். […]

cows do not exhale oxygen!
Gaumata Intellectual Politicians Uttarakhand

பசு மாடு மட்டுமே ஆக்ஸிஜனை(!) மூச்சாக வெளியிடுகிறது,பசுவை தடவி விட்டால் சுவாச பிரச்னை குணமாகும்(!): உத்தரகாண்ட் பாஜக முதல்வர் விஞ்ஞான பேச்சு!

விலங்குகளில் பசு மாடு மட்டுமே ஆக்ஸிஜனை சுவாசித்து, ஆக்ஸிஜனை வெளியிடுகிறது . மேலும் சுவாசப் பிரச்சினை, உள்ளவர்கள் பசு மாட்டின் அருகே நின்று அதனை தடவிக்கொடுத்தால் சரியாகிவிடும் (!)என்று உத்தரகாண்ட் பாஜக முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தெரிவித்துள்ளார். டெஹ்ராடூனில் நடந்த ஒரு விழாவில் திரிவேந்திர சிங் ராவத் பசு மாட்டு பால் மற்றும் சிறுநீரின் மருத்துவ பண்புகளை புகழ்ந்துரைக்கும் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது. பசு மாட்டை நாம் மாதா என்று அழைப்பதால்தான், அது மனிதர்கள் சுவாசிக்க […]

BJP Forcing Shri Ram Hate Speech Hindutva Intellectual Politicians Jharkand States News

“ஜெய் ஸ்ரீ ராம்னு சொல்லு!”- முஸ்லிம் எம்.எல்.ஏ-வை வம்பிழுத்த பாஜக ஜார்கண்ட் அமைச்சர்!

வியாழக்கிழமை(25-7-19) ஜார்கண்டில் பாஜக அமைச்சர் சிபி . சிங் காங்கிரஸைச் சேர்ந்த ஒரு முஸ்லீம் சட்டமன்ற உறுப்பினரை மாநில சட்டசபைக்கு வெளியே “ஜெய் ஸ்ரீ ராம்” என்று கோஷமிடுமாறு கட்டாய படுத்தினார். இந்த சம்பவம் வீடியோவில் பிடிபட்டதை அடுத்து நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் பாஜக அமைச்சரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான இர்பான் அழுத்தமாக பிடித்த நிலையில் ,”இர்பான் பாய், ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று சத்தமாக சொல்லுங்கள்” என்று சிபி சிங் வீடியோவில் […]