Assam BJP

அசாம்: பள்ளிக்கு மாட்டிறைச்சி உணவை எடுத்து சென்ற தலைமை ஆசிரியர் கைது செய்து சிறையில் அடைப்பு !

மேற்கு அசாமின் கோல்பாரா மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் பள்ளிக்கு மாட்டிறைச்சி கொண்டு சென்றதாக அஸ்ஸாம் போலீஸார் கைது செய்தனர்.

பராஜக ஆளும் அசாமில் மாட்டிறைச்சிக்கு தடை இல்லை.

கைது செய்யப்பட்ட ஆசிரியை தலிமா நெசா, கோல்பாரா நீதிமன்றத்தால் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

நாளிதழின் படி, நெஸ்ஸா மாவட்டத்தின் லக்கிபூர் பகுதியில் உள்ள ஹர்கசுங்கி நடுநிலை ஆங்கிலப் பள்ளியின் தலைமையாசிரியர்.

கடந்த வாரம் பள்ளியில் நடந்த விழா ஒன்றில் மதிய உணவிற்கு மாட்டிறைச்சி கொண்டு வந்ததாக சக ஊழியர் புகார் அளித்ததை அடுத்து, நெஸ்ஸாவை போலீசார் கைது செய்தனர்.

நெஸ்ஸா மீது இந்திய தண்டனைச் சட்டம் , பிரிவுகள் 153A (மதம், இனம், பிறந்த இடம், வசிக்கும் இடம் ஆகியவற்றின் அடிப்படையில் வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல்) மற்றும் 295A பிரிவின்( மதவழிபாட்டில் ஈடுபடுவோரின் உணர்ச்சிகளை சீற்றமுற்று எழச் செய்ய வேண்டும் என்ற தீய கருத்துடன் வேண்டுமென்றேமத உணர்வுகளை புண்படுத்துவது அல்லது புண்படுத்த முயற்சி செய்தல்) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அசாமில் மாட்டிறைச்சி தடை செய்யப்படவில்லை என்றாலும் பாஜக அரசால் 2021 இல் நிறைவேற்றப்பட்ட கால்நடை பாதுகாப்பு சட்டம் விலங்குகளின் போக்குவரத்தை கட்டுப்படுத்துகிறது. மாட்டிறைச்சி உண்ணாத சமூகங்கள் ஆதிக்கம் செலுத்தும் பகுதிகளில் இறைச்சி விற்பனையைத் தடுக்கும் வகையில் இச்சட்டம் உள்ளது.