Activists Dalits Karnataka RSS

கர்நாடகா: தலித் சமூக நூலாசிரியர் எழுதிய புத்தகத்தால், கடும் கோபத்தில் ஆர்.எஸ்.எஸ் !

கர்நாடகாவில் பிரபல தலித் எழுத்தாளரும் ஆர்வலருமான தேவனூர் மகாதேவா ஆர்எஸ்எஸ் பற்றி எழுதியுள்ள புத்தகம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. வலதுசாரிகள் இதை ஆர்எஸ்எஸ்ஸுக்கு எதிரான பிரச்சாரம் என்கிறார்கள். “ஆர்எஸ்எஸ் ஆலா அகலா” (ஆர்எஸ்எஸ், அதன் ஆழமும் அகலமும்) என்ற புத்தகத்தின் விற்பனை கர்நாடக மாநிலத்தில் சாதனை படைத்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா வியாழன் அன்று மகாதேவாவுக்கு ஆதரவாக, “ஆர்எஸ்எஸ் பற்றி அவர் சொல்வதில் என்ன தவறு இருக்கிறது?” என்று கருத்து தெரிவித்துள்ளார். நூலை தடை செய்யத்துடிக்கும் வலதுசாரிகள்: இந்நூலை […]

BJP Goa

ஸ்மிருதி இரானி மகள் நடத்தும் ‘Silly Souls’ சொகுசு பாருக்கு போலி ஆவணங்கள் மூலம் உரிமம்!

வடக்கு கோவா-வில் உள்ள அசாகோ பகுதியில் ‘சில்லி சோல்ஸ் கஃபே அண்ட் பார்” என்ற பெயரில் பாஜக ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் மகள் ஜோயிஷ் இரானி நடத்தி வரும் பாருக்கு போலி ஆவணங்கள் மூலம் இறந்தவர் பெயரில் உரிமம் வாங்கி நடத்திவருவது குறித்து செய்தி வெளியாகியுள்ளது. இதுகுறித்து ஐரிஸ் ரோட்ரிகியூஸ் என்ற வழக்கறிஞர் நேற்று அளித்துள்ள புகாரின் அடிப்படையில், கோவா கலால் ஆணையர் நாராயண் ஷோ காஸ் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். மேலும் ஜூலை 29 […]

BJP Kashmir

ஜம்மு: பாஜகவின் ஐடி பிரிவு தலைவராக இருந்த லஷ்கர் தீவிரவாதி கைது!

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் இன்று தேடப்பட்டு வரும் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதி தாலிப் உசேன் பிடிபட்டார். அவர் பாஜக உறுப்பினராக தீவிரமாக செயல்ப்பட்டு வந்தததும் தற்போது தெரியவந்துள்ளது. அவர் ஜம்முவில் பாஜக கட்சியின் சிறுபான்மை மோர்ச்சா பிரிவின் சமூக ஊடகப் பொறுப்பாளராகவும் இருந்து வந்துள்ளார். இன்று காலை ஜம்முவின் ரியாசி பகுதியில் உள்ள கிராம மக்களின் உதவியால் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். ஒருவர் ரஜோரியைச் சேர்ந்த தாலிப் உசேன் மற்றொருவர் புல்வாமாவைச் சேர்ந்த பைசல் அகமது தார் என […]

Christians Hindutva Karnataka

கர்நாடகா: கிறிஸ்தவ குடும்பத்தார் வீட்டிற்குள் புகுந்து பைபிளை எரித்த இந்துத்துவா கும்பல் !

பாஜக ஆளும் கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள மல்லேனு கிராமத்தில் (ஹிரியூர் தாலுகா) செவ்வாய்க்கிழமை மாலை இந்துத்துவாவினர் ஒரு வீட்டுக்குள் புகுந்து பைபிளை தீ வைத்து எரித்துள்ளனர். ஏகாந்தம்மா என்ற 62 வயது மூதாட்டியின் வீட்டிற்குள் நுழைந்த நான்கு பேர் கொண்ட கும்பல், வீட்டில் ஏன் பிரார்த்தனை நடத்துகிறீர்கள் என அங்கிருந்தவர்களை மிரட்டி பைபிளை எரித்துள்ளனர். இது குறித்து இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது. சித்ரதுர்கா எஸ்.பி., பரசுராமன் கூறுகையில், ” 62 வயதான மூதாட்டி […]

Alleged Police Brutalities Dalits Uttar Pradesh

உ.பி: போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்ட தலித் நபர்.. உடலும் வலுக்கட்டாயமாக எரிப்பு!

உத்தரபிரதேசத்தின் ஃபரூகாபாத் பகுதியைச் சேர்ந்த 35 வயதான தலித் கௌதம், ஜூன் 24 அன்று இரவு அவரது வீட்டில் நடைபெற்ற சோதனையைத் தொடர்ந்து காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்டதாக அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். ஃபரூகாபாத் மாவட்டம் மேராபூர் காவல் நிலைய எல்லைக்குள் இந்த சம்பவம் நடந்துள்ளது. சட்டவிரோதமாக மது விற்பவர்களை பிடிக்கவே போலீசார் கவுதமின் வீட்டை சோதனையிட சென்றதாக போலீசார் தெரிவித்தனர். பெரும் போராட்டத்திற்கு பிறகே எஃப்ஐஆர் : ஆரம்பத்தில் கௌதமின் உடலை பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்ல […]

BJP Intellectual Politicians Karnataka New India

2024 தேர்தலுக்கு பிறகு 50 புதிய மாநிலங்கள் உருவாக்கப்படும்! – பாஜக அமைச்சர் பேச்சு !

கர்நாடாகா: 2024 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு 50 புதிய மாநிலங்கள் உருவாகும் என்றும், வட கர்நாடகமும் தனி மாநிலமாக மாறும் என்றும் வனம், உணவு, சிவில் சப்ளை மற்றும் நுகர்வோர் விவகாரத்துறையின் பாஜக அமைச்சர் உமேஷ் கட்டி தெரிவித்தார். புதன்கிழமை பெலகாவி பார் சங்கத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாஜக அமைச்சர் உமேஷ் , மக்கள்தொகை அடிப்படையில் பெரிய மாநிலங்கள் பிரிக்கப்பட்டு 2024 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு 50 புதிய மாநிலங்கள் உருவாகும், பிரதமர் நரேந்திர மோடியின் […]

Agnipath BJP Haryana Protest

ஹரியானா: அக்னிவீர் படிவங்களை நிரப்பும் இளைஞர்களை ‘சமூக ரீதியாக தனிமைப்படுத்துவோம்’ !

ரோஹ்தக்: மோடி அரசின் அக்னிபத் ராணுவ ஆட்சேர்ப்பு திட்டத்தில் படிவத்தை நிரப்பும் அல்லது பங்கேற்கும் இளைஞர்களை “சமூக ரீதியாக தனிமைப்படுத்துவோம்” என காப் பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் விவசாய சங்க போராட்ட பிரதிநிதிகள் புதன்கிழமை அறிவித்தனர். ரோஹ்தக் மாவட்டத்தின் சாம்ப்லா நகரில் புதன்கிழமை (23-4-22) ஒரு பஞ்சாயத்து அழைப்பு விடுக்கப்பட்டது, இதில் ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பல்வேறு காப்களின் பிரதிநிதிகள் மற்றும் மாணவர் அமைப்புகளின் உறுப்பினர்கள் பங்கேற்றனர். வழக்குகள் […]

BJP Karnataka Modi

கர்நாடகா: பிரதமர் மோடியின் ஒரு நாள் பயணத்திற்காக ரூ. 23 கோடி செலவு !

கர்நாடகா: பெங்களூருவில் வசிப்பவர்கள் நகரின் சாலைகளின் நிலை குறித்து தொடர்ந்து புகார் தெரிவித்து வரும் நிலையில், பிபிஎம்பி (ப்ருஹத் பெங்களூரு மகாநகர பலிகே) பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கு முன்னதாக, சுமார் 14 கிமீ சாலையை மறுசீரமைக்கவும், பழுதுபார்க்கவும் ரூ.23 கோடி செலவிட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. பிரதமர் ஜூன் 20, திங்கட்கிழமை பெங்களூர் சென்றார், அப்போது அவர் பல வளர்ச்சி மற்றும் ரயில்வே திட்டங்களைத் தொடங்கி வைத்தார். செய்தியாளர் கூட்டத்தில் பேசிய பி.பி.எம்.பி சிறப்பு ஆணையர் (திட்டங்கள்) […]

BJP Madhya Pradesh Muslims

ம.பி: ரேஷன் கார்டு மற்றும் வீடு தருவதாக கூறி மதமாற்றம்; இந்துக்களாக மாறிய 18 முஸ்லிம்கள் !

பாஜக ஆளும் மத்திய பிரதேச மாநிலம் ரத்லம் மாவட்டத்தில் உள்ள அம்பா கிராமத்தில், 18 முஸ்லிம்கள் இந்து மதத்தில் இணைக்கப்பட்டுள்ளனர். இது குறித்து டைனிக் பாஸ்கர் ஊடகத்தின் இந்தி பேட்டியை சிறிய மாறுதல்களுடன் கீழே வழங்குகிறோம். பசுவின் சாணம், மாட்டு மூத்திரம் கொண்டு குளித்து,ஷேவிங் செய்து, இவர்கள் இந்து சனாதனவாதிகளாக மாறி உள்ளனர். டைனிக் பாஸ்கர் இந்த கிராமத்தை அடைந்து மதமாற்றம் பற்றி விசாரித்தபோது, ​​​​இந்த மதமாற்றத்தின் பின்னணியில் உள்ள உண்மையான காரணம் வறுமை மற்றும் பசி […]

Dalits Education Karnataka Muslims RSS Saffronization Students

தலித் எழுத்தாளர்கள் நீக்கம், ஆர்எஸ்எஸ் தலைவர்கள் சேர்ப்பு; காவிமயமாக்கப்பட்டுள்ள கர்நாடக பாடப்புத்தக மாற்றங்களின் முழு பட்டியல்!

கர்நாடகா : மகாத்மா காந்தி, டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் பற்றிய பாடங்கள் நீக்கப்பட்டு ஆர்எஸ்எஸ் சித்தாந்தவாதிகளான விநாயக் சாவர்க்கர் மற்றும் கேபி ஹெட்கேவார் ஆகியோரின் பாடங்கள் பாடப்புத்தகங்களில் சேர்க்கப்பட்டுள்ளன. அசர்ச்சைக்குரிய வலதுசாரி சொற்பொழிவாளர் ரோஹித் சக்ரதீர்த்தா தலைமையிலான குழுவால் உருவாக்கப்பட்ட பள்ளி பாடப்புத்தகங்களுக்கு எதிராக கர்நாடகாவில் உள்ள முற்போக்கு குழுக்கள் ஏன் போராடுகின்றன? இந்த நூல்களில் எந்தெந்தப் பிரிவுகள் திரிக்கப்பட்டிருக்கின்றன, எந்தெந்தப் பகுதிகள் காவி மையமாக்கப்பட்டுள்ளன, எந்த முற்போக்குக் கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன? சர்ச்சை தொடங்கியதில் இருந்து முதன்முறையாக, […]

Jaggi Tamil Nadu

கோவை: ஈஷா அறக்கட்டளையை அரசுடைமையாக்க ஆர்ப்பாட்டம் !

ஜக்கி வாசுதேவின் ஈஷா யோகா மையத்தை அரசுடைமையாக்க வேண்டும் என கோரி தந்தை பெரியார் திராவிடர் கழகம், தெய்வத் தமிழ் பேரவை இயக்கத்தினர் மற்றும் பொது மக்கள் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர். ஈஷாவிலிருந்து வெளியேறும் கழிவுநீரை விளை நிலத்தில் வெளியேற்றக் கூடாது, பழங்குடியினர் நில அபகரிப்பதற்கு எதிர்ப்பு , பெண்களைத் துறவிகள் ஆக்கக் கூடாது என்ற கருத்துடைய பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில், ஈஷாவில் […]

BJP Hindutva Malaysia Muslims Prophet Muhammad

மலேசியா : முருகன் கோவில் முன் நின்று நுபுர் சர்மாவுக்கு ஆதரவு தெரிவித்தும், இந்து ராஷ்டிரம் கோரியும் வீடியோ வெளியிட்ட நபர்கள் கைது !

முஹம்மத் நபி குறித்து இழிவாக பேசிய முன்னாள் பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் நுபூர் சர்மாவுக்கு ஆதரவாக மலேசியாவில் உள்ள (Batu caves) பத்து குகைகளில் நின்று கொண்டு ஆதரவு தெரிவிக்கும் காணொளி டிக்டோக்கில் வைரலால் ஆனதை தொடர்ந்து நான்கு நபர்களை மலேசிய போலீசார் கைது செய்துள்ளனர். 18 வினாடிகள் கொண்ட இந்த வீடியோவில், இந்தியாவிலும் நேபாளிலும் இந்து ராஷ்டிரம் கோரியும், நுபுர் ஷர்மாவின் நபிகளார் குறித்தான இழிவான பேச்சுக்கு ஆதரவு தெரிவித்தும் பேசப்பட்டுள்ளது.முருகன் கோவிலில் நின்று […]

Fascism Germany Hindutva Modi

ஜெர்மனி : “மோடி ஆட்சியின் பாசிசம் மற்றும் சர்வாதிகாரத்திற்கு எதிராக” போராட்டத்திற்கு அழைப்பு !

விளாடிமிர் புடின் தலைமையிலான ரஷ்ய படைகள் உக்ரைன் மீது போர் தொடுத்த காரணத்தால் உலக நாடுகள் பல ரஷ்யா மீது தடை விதித்து, கண்டனமும் தெரிவித்தது. ஆனால் இந்தியா ரஷ்யா மீது எவ்விதமான தடையும் விதிக்கவில்லை. இந்நிலையில் 48வது ஜி7 மாநாட்டை நடத்த உள்ள ஜெர்மனி, பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளது, அங்குள்ள ஜனநாயக அமைப்புகளிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து இந்தியா சாலிடாரிட்டி நெட்வொர்க், (வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் – என்ஆர்ஐ அமைப்பு) ஜெர்மனியின் […]

BJP Jharkand Muslims Prophet Muhammad

ஜார்கண்ட் : நுபூர் சர்மாவுக்கு ஆதரவாக முகநூலில் கருத்து பதிவிட்ட பாஜக தலைவர் கைது!

ஜார்கண்ட் : பாஜக கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் நுபூர் சர்மாவுக்கு ஆதரவாகவும், நபிகளாரை இழிவுபடுத்தும் வகையிலும் முகநூலில் கருத்தை பதிவிட்டதற்காகவும் பாஜக தலைவர் அனிஷா சின்ஹாவை ஆதித்யபூர் போலீஸார் திங்கள்கிழமை இரவு கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆதித்யபூர் நிஷாந்த் விஹார் காலனியில் வசிக்கும் அனிஷா செரைகேலா-கர்சவான் மாவட்டத்தின் பாஜக செயற்குழு உறுப்பினராக உள்ளார். இதுபோன்ற ஒரு வழக்கில், ஜாம்ஷெட்பூரைச் சேர்ந்த இளைஞரும் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். அனிஷா மீது ஐபிசி பிரிவு 295A (திட்டமிட்டு […]

BJP Fascism Indian Judiciary Muslims Uttar Pradesh Yogi Adityanath

உபி அரசின் நடவடிக்கைகள் குறித்து முன்னாள் உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் கடிதம் !

உத்தரபிரதேச மாநிலத்தில் சட்ட விரோத கடுங்காவல், வீடுகளை புல்டோசர்களால் இடிப்பது , போராட்டக்காரர்கள் மற்றும் போலீஸ் காவலில் உள்ளவர்கள் மீது போலீஸ் வன்முறை என்பன உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் குறித்து தானாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும் என முன்னாள் நீதிபதிகள் மற்றும் பல்வேறு வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர். இந்திய தலைமை நீதிபதி என்.வி. ரமணாவுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், போராட்டக்காரர்களை விசாரிக்கவும், அமைதியான போராட்டங்களில் ஈடுபடவும் வாய்ப்பளிப்பதற்கு பதிலாக, உத்தரபிரதேச மாநில நிர்வாகம் “அத்தகைய நபர்களுக்கு […]